NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழ்நாட்டில் கடந்த ஓராண்டில் 479 பேறுகால இறப்புகள் - வெளியான அதிர்ச்சி தகவல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    தமிழ்நாட்டில் கடந்த ஓராண்டில் 479 பேறுகால இறப்புகள் - வெளியான அதிர்ச்சி தகவல்
    தமிழ்நாட்டில் கடந்த ஓராண்டில் 479 பேறுகால இறப்புகள் - வெளியான அதிர்ச்சி தகவல்

    தமிழ்நாட்டில் கடந்த ஓராண்டில் 479 பேறுகால இறப்புகள் - வெளியான அதிர்ச்சி தகவல்

    எழுதியவர் Nivetha P
    Oct 04, 2023
    05:21 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாடு மாநிலத்தில் பேறுகால இறப்புகளை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    மருத்துவ பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் மட்டுமின்றி கர்ப்பிணி பெண்கள் தங்கள் ஊட்டச்சத்தை உறுதி செய்யக்கூடிய திட்டங்களும் செயல்பாட்டிலுள்ளது.

    எனினும், பிரசவத்தின் போதான மரணத்தினை குறைக்க முடிந்ததே தவிர, முழுமையாக தடுக்க இயலவில்லை.

    இதனிடையே கடந்தாண்டு ஏப்ரல் முதல் தற்போதைய மார்ச் மாதம் வரையான பேறுகால இறப்புகள் குறித்து தமிழக சுகாதாரத் துறை ஆய்வு ஒன்றினை நடத்தியதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் இந்த ஆய்வின் மூலம், கடந்த ஓராண்டில் மட்டும், 479 கர்ப்பிணிகள் பிரசவத்தின் பொழுது உயிரிழந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

    இதற்கான முக்கிய காரணங்களுள் 20% அதிக ரத்த போக்கு மற்றும் 20% உயர் ரத்த அழுத்தம் ஆகியன உள்ளதாக தெரிகிறது.

    மரணம் 

    கர்ப்ப காலத்தில் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் 

    மேலும், 10% இதய பாதிப்பால் மரணங்கள் நிகழ்ந்துள்ளது.

    தொடர்ந்து, ரத்த கிருமி நோய்தொற்று, நரம்பு சார் பாதிப்புகள் என தலா 9% மரணத்திற்கு காரணமாக உள்ளதாம்.

    அதேபோல், கல்லீரல் பாதிப்பால் 4%, கருக்கலைப்பின் பொழுது 5%, 7% நுரையீரல் பாதிப்புகளாலும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

    இதற்கிடையே இதுகுறித்து பொது சுகாதாரத் துறை இயக்குனர் செல்வவிநாயகம் கூறுகையில், கர்ப்பக்காலத்தில் உயர் ரத்த அழுத்தம், ரத்த அளவுகளில் மாறுபாடுகள் உள்ளிட்டவை ஏற்படுவது வழக்கம்.

    அதனை சரியான முறையில் கட்டுக்குள் வைக்கவில்லையெனில் அதன் பாதிப்பு தீவிரமடையும் என்று கூறியுள்ளார்.

    பிரசவத்தின் பொழுது உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டால் வலிப்பு, பக்கவாதம் ஏற்பட வாய்ப்புள்ள நிலையில். அது மரணத்திற்கு வழிவகுக்க அதிகளவு வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கர்ப்பிணி பெண்கள்
    தமிழ்நாடு
    சுகாதாரத் துறை

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    கர்ப்பிணி பெண்கள்

    கர்நாடகா: நடத்துனரின் உதவியுடன் ஓடும் பேருந்திலேயே குழந்தை பிரசவித்த கர்ப்பிணி!  பயணம்
    பொது மக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் - தலைமை செயலாளர் இறையன்பு அறிவுரை  தமிழ்நாடு

    தமிழ்நாடு

    காவிரி விவகாரம் - செப்.26ல் கர்நாடகா தலைநகர் பெங்களூரில் முழு அடைப்பு போராட்டம்  போராட்டம்
    வீடியோ: வேலூரில் நடந்த விநாயகர் ஊர்வலத்தில் பர்தா அணிந்து நடனமாடிய நபர் கைது இந்தியா
    12 தமிழக மாவட்டங்களில் கொட்டி தீர்க்க போகும் கனமழை  புதுச்சேரி
    தமிழகத்தில் 2.80 லட்சம் நிறுவனங்கள் வேலை நிறுத்தம்: முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை  மு.க ஸ்டாலின்

    சுகாதாரத் துறை

    குட்கா தடை ரத்து: தமிழக அரசு மேல்முறையீடு சென்னை உயர் நீதிமன்றம்
    காவல்துறை அதிகாரியால் சுட்டுக் கொல்லப்பட்ட ஒடிசா அமைச்சர் நபா கிசோர் தாஸ் மாநிலங்கள்
    கேரளாவில் ஆன்லைன் மருத்துவ ஆலோசனை-அரசு பெண் மருத்துவர் முன் நிர்வாண போஸ் கொடுத்த வாலிபர் கைது கேரளா
    தமிழக சிறுமிகளுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி வழங்க நடவடிக்கை தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025