NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழ்நாட்டில் 4 இளம் மருத்துவர்கள் 48 மணிநேரத்தில் இறப்பு - அதிர்ச்சி தகவல் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    தமிழ்நாட்டில் 4 இளம் மருத்துவர்கள் 48 மணிநேரத்தில் இறப்பு - அதிர்ச்சி தகவல் 
    தமிழ்நாட்டில் 4 இளம் மருத்துவர்கள் 48 மணிநேரத்தில் இறப்பு - அதிர்ச்சி தகவல்

    தமிழ்நாட்டில் 4 இளம் மருத்துவர்கள் 48 மணிநேரத்தில் இறப்பு - அதிர்ச்சி தகவல் 

    எழுதியவர் Nivetha P
    Jun 13, 2023
    12:45 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாடு மாநிலத்தில் கடந்த 48 மணிநேரத்தில் தொடர்ந்து 4 இளம் மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர் என்னும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

    அதன்படி, சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் எம்பிபிஎஸ் படிப்பினை நிறைவு செய்த மருத்துவர் தனுஷ்(24),

    தஞ்சாவூர் அரசு மருத்துவமனை கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வரும் மருத்துவர் விஜய் சுரேஷ் கண்ணா(38),

    சென்னை அப்போலோ மருத்துவமனையில் இதய இடையீட்டு சிகிச்சையளிக்கும் நிபுணர் கெளரவ் காந்தி(41) மற்றும்

    திருச்சி விஸ்வநாதம் மருத்துவ கல்லூரியில் காது-மூக்கு-தொண்டை உள்ளிட்டவைகளுக்கு அறுவை சிகிச்சை செய்யும் நிபுணரான சதீஷ் குமார்(46) உள்ளிட்ட 4 பேரும் தங்களது பணியில் ஈடுபட்டிருக்கும் நிலையிலேயே உயிரிழந்துள்ளனர்.

    உயிரிழந்த 4 இளம் மருத்துவர்களும் இருதயம் மற்றும் நுரையீரல் செயலிழப்பு காரணமாக உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

    மருத்துவத்துறை 

    ஒரு நாளுக்கு குறைந்தது 14 மணிநேரம் பணியில் ஈடுபடுவதால் மன அழுத்தம் 

    இவர்களது மரணம் மருத்துவத்துறை மத்தியில் பெரும் வேதனையையும் அதிர்ச்சியினையும் ஏற்படுத்தியுள்ளது.

    இந்த சம்பவம் குறித்து தேசிய நல்வாழ்வுத்திட்டத்தின் விபத்து-காயம் சிகிச்சை ஒருங்கிணைப்பு அதிகாரி மற்றும் முடநீக்கியல் அறுவைசிகிச்சை நிபுணர் ஜான் விஸ்வநாத், "தற்போதுள்ள மருத்துவத்துறையில் மருத்துவர்கள் ஓய்வின்றி பணிபுரிய நிர்பந்திக்கப்படுகிறார்கள்.

    ஒரு நாளுக்கு குறைந்தது 14 மணிநேரம் அவர்கள் பணியில் ஈடுபடுவதால் மன அழுத்தம் ஏற்படுகிறது.

    இதனால் சராசரியாக ஒரு நிமிஷத்துக்கு 90ஆக இருக்கவேண்டிய இதயத்துடிப்பு 150க்குமேல் இருக்கிறது.

    பெரும்பாலான மருத்துவர்கள் மருத்துவப்பரிசோதனைகளை மேற்கொள்வதில்லை.

    இதன் காரணமாகவே இதுபோல் திடீர் மரணம் ஏற்படுகிறது.

    மருத்துவமனை கட்டாயத்தின் பேரில் மருத்துவர்கள் அதிகநேரம் பணியாற்றுவது ஒரு பக்கம் இருக்க, பணம், புகழ் ஆகியவற்றிற்காக தொடர்ந்து பணிபுரிவது மற்றொரு வகை" என்று விளக்கம் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    மருத்துவத்துறை
    சென்னை

    சமீபத்திய

    டொனால்ட் டிரம்பின் $5 மில்லியன் 'Gold Card' விசாவிற்கு டிமாண்ட் இல்லையா? டொனால்ட் டிரம்ப்
    ஆர்த்தி - ரவி விவாகரத்து வழக்கில் அடுத்த ட்விஸ்ட்; கெனிஷா நீதிமன்றத்திற்கு வர தயாராக இருப்பதாக பதிவு ஜெயம் ரவி
    ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து யஷஸ்வி ஜெய்ஸ்வால் விலகுகிறாரா? இன்ஸ்டாகிராம் பதிவால் கிளம்பிய ஊகங்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால்
    பஞ்சாப் கிங்ஸ் அணியின் இயக்குநர்கள் மீது ப்ரீத்தி ஜிந்தா வழக்கு; காரணம் என்ன? பஞ்சாப் கிங்ஸ்

    தமிழ்நாடு

    கரூரில் 8 நாட்களாக நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனை முடிவு  வருமான வரித்துறை
    தென்னிந்தியாவில் பார்க்க வேண்டிய இடங்களின் பட்டியல் - பகுதி 3!  தென் இந்தியா
    பழங்கால பொருட்களை சேகரித்து வீட்டை அருங்காட்சியகமாக மாற்றிய பாண்டிச்சேரியை சேர்ந்த அய்யனார்!  புதுவை
    நீண்ட போராட்டத்திற்கு பிறகு பிடிபட்டது அரிக்கொம்பன் யானை! வனத்துறை

    மருத்துவத்துறை

    இந்தியாவில் 14 மருந்துகளின் விற்பனைக்கு தடை விதித்த மத்திய அரசு - அவகாசம் வழங்க மறுப்பு  மத்திய அரசு

    சென்னை

    சென்னையில் ஜூன் 2ம் தேதி சர்வதேச கண்காட்சி இந்தியா
    சென்னை அருகே அமைச்சர் கார் மோதி மனைவி கண்முன்னே கணவர் பலி அரசு மருத்துவமனை
    சென்னையில் தரமில்லாத குடிநீர் கேன்கள் - உணவு பாதுகாப்புத்துறை ஆய்வில் அதிர்ச்சி தமிழ்நாடு
    சென்னையில் உள்ள கூகுள் CEO சுந்தர் பிச்சையின் வீடு சினிமா நடிகருக்கு விற்கப்பட்டது!  கூகுள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025