NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பயங்கரவாத தாக்குதல்: ஜம்மு காஷ்மீரில் 3 ராணுவ வீரர்கள் பலி 
    அடுத்த செய்திக் கட்டுரை
    பயங்கரவாத தாக்குதல்: ஜம்மு காஷ்மீரில் 3 ராணுவ வீரர்கள் பலி 
    ஆகஸ்ட் 04 அன்று பாதுகாப்புப் படையினரால் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன

    பயங்கரவாத தாக்குதல்: ஜம்மு காஷ்மீரில் 3 ராணுவ வீரர்கள் பலி 

    எழுதியவர் Sindhuja SM
    Aug 05, 2023
    09:31 am

    செய்தி முன்னோட்டம்

    ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுடன் நேற்று(ஆகஸ்ட் 4) நடந்த என்கவுன்டரில் குறைந்தது மூன்று ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.

    தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் உள்ள ஹலன் வனப் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, அங்கு பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    அப்போது, 3 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.

    அதன்பிறகு, என்கவுன்டரில் கொல்லப்பட்ட ராணுவ வீரர்களிடம் இருந்து 4 ஏகே-47 துப்பாக்கிகளை பயங்கரவாதி ஒருவர் பறித்துச் சென்றார்.

    இந்நிலையில், சம்பவம் நடந்த பகுதிக்கு கூடுதல் அதிகாரிகள் அனுப்பப்பட்டுள்ளதாகவும், தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஜேக்

    'மூன்று வீரர்கள் காயம் அடைந்து, பின்னர் உயிரிழந்தனர்': இராணுவம் 

    "ஆபரேஷன் ஹலன் குல்கம். குல்காமில் உள்ள ஹலானின் உயரமான பகுதிகளில் பயங்கரவாதிகள் இருப்பது குறித்த தகவல் கிடைத்ததை அடுத்து, ஆகஸ்ட் 04 அன்று பாதுகாப்புப் படையினரால் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன. பயங்கரவாதிகளுடன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், மூன்று வீரர்கள் காயம் அடைந்து பின்னர் உயிரிழந்தனர். தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது. "என்று ஸ்ரீநகரை தளமாகக் கொண்ட சினார் கார்ப்ஸ் இராணுவம் ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளது.

    "பாதுகாப்புப் படையினர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதைத் தொடர்ந்து, தேடுதல் நடவடிக்கை என்கவுண்டராக மாறியது. துப்பாக்கிச் சண்டையில், மூன்று பாதுகாப்புப் படையினர் காயமடைந்தனர். பின், அவர்கள் சிகிச்சையின் போது இறந்தனர்." என்று ஒரு இராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தீவிரவாதிகள்
    ஜம்மு காஷ்மீர்

    சமீபத்திய

    2030 ஆம் ஆண்டுக்குள் இந்த வேலைகளையெல்லாம் ஏஐ எடுத்துக்கொள்ளும்; ஆய்வில் வெளியான புதிய தகவல் செயற்கை நுண்ணறிவு
    கன்னட மொழி சர்ச்சை: தக் லைஃப் படத்தை வெளியிடக் கோரி நீதிமன்ற உதவியை நாடும் கமல்  கமல்ஹாசன்
    கடந்த 10 ஆண்டுகளில் விமான இயக்கத்திற்கான செலவுகள் 40 சதவீதம் குறைவு; IATA தகவல் விமானம்
    தமிழ்நாட்டில் மீண்டும் வாட்டத் தொடங்கிய வெப்பம்; பல மாவட்டங்களில் வெப்பநிலை சதமடித்தது வானிலை அறிக்கை

    தீவிரவாதிகள்

    காஷ்மீர்-பயங்கரவாதியிடம் இருந்து சென்ட் பாட்டில் வடிவத்திலான வெடிகுண்டு பறிமுதல் ஜம்மு காஷ்மீர்
    பெஷாவர் குண்டுவெடிப்பு: பாதுகாப்பு படையில் சதி செய்தார்களா பாகிஸ்தான்
    ஆயுத பயிற்சி பெறுவதற்கு பாகிஸ்தான் செல்ல முயன்ற தமிழர் கைது இந்தியா
    ஜம்மு-காஷ்மீரில் 14 மொபைல் மெசஞ்சர் ஆப்களுக்கு தடை  இந்தியா

    ஜம்மு காஷ்மீர்

    ஜோஷிமத் போலவே ஜம்மு காஷ்மீரில் ஒரு புதையும் கிராமம் இந்தியா
    நாடாளுமன்றத்தில் போராட்டம்: மெகபூபா முப்தி கைது டெல்லி
    நாட்டிலேயே முதன்முறையாக ஜம்மு காஷ்மீரில் லித்தியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இந்தியா
    காஷ்மீரில் பனிப்பொழிவில் சிக்கிய கர்ப்பிணி-வாட்ஸ் அப் வீடியோ கால் மூலம் பிரசவம் பார்த்த மருத்துவர்கள் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025