NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இந்தியாவுக்குள் ஊடுருவ பயங்கரவாதிகளுக்கு உதவிய பாகிஸ்தான் ராணுவம்: மறைமுகமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதால் சர்ச்சை 
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியாவுக்குள் ஊடுருவ பயங்கரவாதிகளுக்கு உதவிய பாகிஸ்தான் ராணுவம்: மறைமுகமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதால் சர்ச்சை 
    பாகிஸ்தான் ராணுவத்தினர் மறைமுக துப்பாக்கிச் சூடு நடத்தியதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

    இந்தியாவுக்குள் ஊடுருவ பயங்கரவாதிகளுக்கு உதவிய பாகிஸ்தான் ராணுவம்: மறைமுகமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதால் சர்ச்சை 

    எழுதியவர் Sindhuja SM
    Sep 16, 2023
    06:03 pm

    செய்தி முன்னோட்டம்

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு(எல்ஓசி) வழியாக இந்திய-பாகிஸ்தான் எல்லையை கடக்க முயன்ற மூன்று பயங்கரவாதிகளை இந்திய பாதுகாப்புப் படையினர் இன்று சுட்டுக் கொன்றனர்.

    இந்த சம்பவத்தின் போது, பயங்கரவாதிகள் தப்பிக்க உதவுவதற்காக பாகிஸ்தான் ராணுவத்தினர் மறைமுக துப்பாக்கிச் சூடு நடத்தியதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

    பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சியை முறியடிக்க இந்திய ராணுவமும் ஜம்மு காஷ்மீர் காவல்துறையும் இணைந்து உளவுத்துறையின் தகவல்களின் அடிப்படையில் ஒரு கூட்டு நடவடிக்கையை மேற்கொண்டன.

    இந்த நடவடிக்கை குறித்து, பிர் பஞ்சால் படையின் தளபதி பிரிகேடியர் பிஎம்எஸ் தில்லான் பேசி இருக்கிறார்.

    டொன்வ்க்

    கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் உடல்களில் இருந்து ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டது 

    "மூன்று பயங்கரவாதிகள் ஊடுருவ முயன்றனர். எச்சரிக்கை துருப்புக்க அவர்களை எதிர்த்து துப்பாக்கி சூடு நடத்தின. அதில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர் மற்றும் அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. மூன்றாவது பயங்கரவாதி கொல்லப்பட்டார், ஆனால் அவரது உடலை மீட்கும் போது எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுக்கு அருகில் உள்ள பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு மூலம் குறுக்கிடப்பட்டது," என்று பிரிகேடியர் தில்லான் கூறியுள்ளார்.

    கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் உடலில் இருந்து இரண்டு ஏகே ரைபிள்கள், ஒரு கைத்துப்பாக்கி, ஏழு கைக்குண்டுகள், ஒரு ஐஇடி மற்றும் பாகிஸ்தான் கரன்சி நோட்டுகள் ஆகியவை மீட்கப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

    பிப்ரவரி 2021 முதல் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில்(எல்ஓசி) துப்பாக்கிச் சூட்டை நிறுத்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் ராணுவங்கள் ஒப்புக்கொண்டன என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    பாகிஸ்தான்
    உலகம்
    உலக செய்திகள்

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    இந்தியா

    IND vs PAK: இன்றும் மழை பொழிந்தால், போட்டியின் முடிவு எப்படி இருக்கும்? ஆசிய கோப்பை
    சவூதி இளவரசரை இன்று சந்திக்கிறார் பிரதமர் மோடி: இருதரப்பு பேச்சுவார்த்தையில் என்ன விவாதிக்கப்படும்? சவுதி அரேபியா
    விமானத்தில் கோளாறு: இந்தியாவில் சிக்கி கொண்டார் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கனடா
    பெங்களூரில் இன்று முழுவதும் பந்த்: காரணம் என்ன? பெங்களூர்

    பாகிஸ்தான்

    தனது பதவிக்காலத்தின் முடிவை அறிவித்தார் பாகிஸ்தான் பிரதமர்  ஷெபாஸ் ஷெரீப்
    பாகிஸ்தானில் உள்ள இந்து கோவில் மீது ராக்கெட் தாக்குதல் உலகம்
    தன் காதலனை தேடி இந்தியாவிற்குள் நுழைந்த பாகிஸ்தானிய பெண் ஒரு உளவாளியா? இந்தியா
    பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைக்கப்படுகிறதா? ஷெபாஸ் ஷெரீப்

    உலகம்

    இங்கிலாந்தின் முதல் கருப்பை மாற்று அறுவை சிகிச்சை: தனது சகோதரிக்கு கருப்பையை தானம் செய்த பெண் இங்கிலாந்து
    மர்மமான மான்ஸ்டர் வேட்டை: லோச் நெஸ் மான்ஸ்டரை பிடிக்க ஸ்காட்லாந்தில் ஒன்று கூடிய மக்கள்  உலக செய்திகள்
    அமெரிக்கா: இனவெறுப்பினால் பொது இடத்தில் வைத்து 3 கறுப்பினத்தவர்களை சுட்டு கொன்ற நபர் அமெரிக்கா
    சீன-இந்திய போர்: 60 வருடங்களுக்கு முன் இந்திய-சீன எல்லைப் பிரச்சனைகள் எப்படி தொடங்கியது? வரலாற்று நிகழ்வு

    உலக செய்திகள்

    ஆப்கானிஸ்தானில் உள்ள ஹோட்டலில் குண்டுவெடிப்பு: 3 பேர் பலி, 7 பேர் படுகாயம்  ஆப்கானிஸ்தான்
    ரஷ்ய பெட்ரோல் நிலையத்தில் தீ விபத்து: 30 பேர் பலி ரஷ்யா
    அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்புக்கு எதிராக கைது வாரண்ட்  அமெரிக்கா
    மாலி நாட்டில் பயங்கரவாத துப்பாக்கி சூடு: 21 பொதுமக்கள் பலி ஆப்பிரிக்கா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025