NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 29ம் தவணை தேர்தல் பத்திரங்களை விற்பனைக்காக வெளியிட்டுள்ளது SBI
    அடுத்த செய்திக் கட்டுரை
    29ம் தவணை தேர்தல் பத்திரங்களை விற்பனைக்காக வெளியிட்டுள்ளது SBI
    29ம் தவணை தேர்தல் பத்திரங்களை விற்பனைக்காக வெளியிட்டுள்ளது SBI

    29ம் தவணை தேர்தல் பத்திரங்களை விற்பனைக்காக வெளியிட்டுள்ளது SBI

    எழுதியவர் Prasanna Venkatesh
    Oct 03, 2023
    04:42 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவில் 29ம் தவணை Electoral Bonds விற்பனையை, நாளை தொடங்குகிறது எஸ்பிஐ வங்கி. நாளை (அக்டோபர்-4) முதல் 10 நாட்களுக்கு அதாவது அக்டோடர்-3ம் தேதி வரை இந்தத் தேர்தல் பத்திரங்களை விற்பனை செய்யவிருக்கிறது எஸ்பிஐ.

    தேர்தல் பத்திரங்கள் என்றால் என்ன?

    அரசியல் கட்சிகள் முன்பு பணமாக பெற்று வந்த நன்கொடையை தற்போது பத்திர வடிவில் பெறுகின்றன. இதனால் மக்களுக்கு எந்த லாபமும் இல்லை.

    மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951,பிரிவு 29A கீழ் பதிவு செய்யப்பட்டு, கடந்த பொதுத்தேர்தலில் 1%-தத்திற்கும் குறைவில்லாத வாக்குகளைப் பெற்ற அரசியல் கட்சிகள், பத்திர வடிவிலான இந்த நன்கொடையை பெற முடியும்.

    2017ம் ஆண்டு பாஜக அரசு தான் இந்த தேர்தல் பத்திரங்கள் திட்டத்தினை நடைமுறைக்குக் கொண்டு வந்தது.

    தேர்தல் பத்திரங்கள்

    இந்தத் தேர்தல் பத்திரங்களை யார் வாங்கலாம்? 

    எஸ்பிஐ வெளியிடும் இந்தத் தேர்தல் பத்திரங்களை யார் வேண்டுமானாலும் வாங்கலாம். இந்தியக் குடிமகனாக இருக்கும் எவரும், இந்திய நிறுவனம் எதுவும் இந்தத் தேர்தல் பத்திரங்களை வாங்க முடியும்.

    ரூ.1000, ரூ.10,000, ரூ,1,00,000, ரூ.10,00,000 மற்றும் ரூ.1,00,00,000 ஆகிய முகமதிப்பு கொண்ட பத்திரங்களை, தேர்தல் பத்திரங்களாக நாம் பெற முடியும்.

    எஸ்பிஐ பட்டியலிட்டிருக்கும் குறிப்பிட்ட 29 வங்கிக் கிளைகளில் மட்டுமே, இந்த தேர்தல் பத்திரங்களை ஒருவர் வாங்க முடியும்.

    இந்தத் தேர்தல் பத்திரங்கள் ஆயுட்காலம் வெறும் 15 நாட்கள் மட்டுமே. 15 நாட்களுக்குகள் குறிப்பிட்ட அரசியல் கட்சிகள், தாங்கள் பெற்ற தேர்தல் பத்திரங்களை வங்கிக் கிளைகளில் கொடுத்து தங்களுடைய வங்கிக் கணக்குகளில் வரவு வைத்துக் கொள்ள முடியும்.

    பாஜக

    எதற்காக தேர்தல் பத்திரங்களை முதன் முதலில் அறிமுகப்படுத்தியது பாஜக அரசு? 

    தேர்தல் பத்திரங்களை அறிமுகப்படுத்துவதற்கு முன்னதாக, அரசியல் கட்சிகள் நன்கொடைகளைப் பெறுவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் இருந்தன.

    குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு ரூ.2000-க்கும் மேல் நன்கொடை அளிப்பவர்களின் தகவல்கள் வழகப்பட வேண்டும். கடந்த மூன்று ஆண்டுகள் பெற்ற லாபத்தில் 7.5% வரை மட்டுமே நன்கொடை அளிக்க வேண்டும் எனக் கட்டுப்பாடுகள் இருந்தன.

    ஆனால், இந்த தேர்தல் பத்திர முறையில் அப்படியான கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை. தன்னுடைய பெயரைக் குறிப்பிடாமல் ஒருவர் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு பத்திர வடிவில் எவ்வளவு வேண்டுமானாலும் நன்கொடை அளிக்க முடியும்.

    இந்தியாவின் முன்னாள் நிதியமைச்சரான பா.சிதம்பரம் இந்தத் தேர்தல் பத்திரங்கள் குறித்து தான் பதிவிட்ட எக்ஸ் பதிவில், இதனை சட்டப்பூர்வமான லஞ்சம் எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

    embed

    தேர்தல் பத்திரங்கள் குறித்த பா.சிதம்பரத்தின் எக்ஸ் பதிவு:

    The 28th tranche of Electoral Bonds will open on October 4. It will be a golden harvest for the BJP Going by the past records, 90 per cent of the so-called anonymous donations will go to the BJP The crony capitalists will open their cheque books to write out their 'tribute' to...— P. Chidambaram (@PChidambaram_IN) September 30, 2023

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    பாஜக
    தேர்தல்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    இந்தியா

    ரூ.2000 நோட்டுகளை மாற்ற கால அவகாசம் நீட்டிப்பு: இனி எப்போது வரை மாற்றலாம்? ரிசர்வ் வங்கி
    ஆசிய விளையாட்டுப் போட்டிகள்: தடகளத்தில் மேலும் இரண்டு பதக்கங்களை வென்றது இந்தியா தடகள போட்டி
    சிலிண்டர் விலை கிடுகிடு உயர்வு: வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி வணிகம்
    இந்தியாவுடன் தூதராக உறவுகளை நிறுத்தியது ஆப்கானிஸ்தான் ஆப்கானிஸ்தான்

    பாஜக

    எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீது பிரதமர் மோடி உரை பிரதமர் மோடி
    'சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் காங்கிரஸ் சந்தித்தது என்பது அப்பட்டமான பொய்': பாஜக எம்பிக்கு காங்கிரஸ் பதிலடி  காங்கிரஸ்
    இந்திய அரசியல் தலைவர்களின் கிரே செக்மார்க்கை நீக்கிய எக்ஸ் (ட்விட்டர்), ஏன்? ட்விட்டர்
    தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னரே வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட  பாஜக  தேர்தல் ஆணையம்

    தேர்தல்

    ஈபிஎஸ்-ஓபிஎஸ் பிரச்சனையில் தலையிட விரும்பவில்லை - அமித்ஷா  அமித்ஷா
    காங்கிரஸ் வேட்பாளர் சகோதரர் வீட்டில் மரத்தில் பதுக்கிவைத்த ரூ.1 கோடி பறிமுதல்  காங்கிரஸ்
    எந்த கட்சி கர்நாடகாவில் ஆட்சியினை பிடிக்கும்?-ஜோதிடருக்கு பரிசுத்தொகை அறிவித்த மருத்துவர்  கர்நாடகா
    கர்நாடக தேர்தல்களில் தொடர்ந்து தோல்வியடையும் 92 சதவீத பெண் வேட்பாளர்கள் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025