Page Loader
மத்திய பிரதேசம்: சட்டவிரோத குழந்தைகள் காப்பகத்தில் இருந்த 26 சிறுமிகள் மாயம்

மத்திய பிரதேசம்: சட்டவிரோத குழந்தைகள் காப்பகத்தில் இருந்த 26 சிறுமிகள் மாயம்

எழுதியவர் Sindhuja SM
Jan 06, 2024
05:12 pm

செய்தி முன்னோட்டம்

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள ஒரு சட்டவிரோத குழந்தைகள் காப்பகத்தில் தங்கியிருந்த 26 சிறுமிகள் காணாமல் போயுள்ளனர். அந்த சிறுமிகள் குஜராத், ஜார்க்கண்ட், ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். அவர்களில் சிலர் மத்தியப் பிரதேசத்தில் உள்ள செஹோர், ரைசென், சிந்த்வாரா மற்றும் பாலகாட் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் (NCPCR) தலைவர் பிரியங்க் கனுங்கோ போபாலின் புறநகரில் உள்ள பர்வாலியா பகுதியில் இருக்கும் அஞ்சல் பெண்கள் விடுதிக்கு திடீர் விஜயம் செய்தபோது இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது. அவர் பதிவேட்டை சரிபார்த்தபோது, ​​அதில் 68 சிறுமிகளின் பதிவுகள் இருந்தன. ஆனால் அவர்களில் 26 பேரை காணவில்லை.

பிஜிடிக்வெம்ன

குழந்தைகள் காப்பகத்தில் பல முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன

காணாமல் போன சிறுமிகள் குறித்து காப்பகத்தின் இயக்குநர் அனில் மேத்யூவிடம் விசாரித்தபோது அவர் திருப்திகரமான பதில் அளிக்கவில்லை. இந்த வழக்கில் போலீசார் எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர். எப்.ஐ.ஆரின் படி, சட்டவிரோதமாக நடத்தப்பட்டு அந்த குழந்தைகள் காப்பகத்தில் பல முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அந்த குழந்தைகள் இல்லத்தை நிர்வகித்து வரும் ஒரு மிஷனரி, தெருக்களில் இருந்து சில குழந்தைகளை மீட்டு அந்த காப்பகத்தில் வைத்திருந்ததாக பிரியங்க் கனுங்கோ கூறியுள்ளார். மீட்கப்பட்ட குழந்தைகளை காப்பகத்தில் ரகசியமாக தங்க வைத்து அவர்களை கிறிஸ்தவ மதத்தை கடைபிடிக்க வைத்ததாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். "பெரும்பாலான அந்த சிறுமிகள் 6 முதல் 18 வயதுக்குட்பட்ட இந்துக்கள் ஆவர். மிகுந்த சிரமத்திற்குப் பிறகு, போலீசார் எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளனர்" என்று கனுங்கோ கூறியுள்ளார்.