NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மத்திய பிரதேசம்: சட்டவிரோத குழந்தைகள் காப்பகத்தில் இருந்த 26 சிறுமிகள் மாயம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    மத்திய பிரதேசம்: சட்டவிரோத குழந்தைகள் காப்பகத்தில் இருந்த 26 சிறுமிகள் மாயம்

    மத்திய பிரதேசம்: சட்டவிரோத குழந்தைகள் காப்பகத்தில் இருந்த 26 சிறுமிகள் மாயம்

    எழுதியவர் Sindhuja SM
    Jan 06, 2024
    05:12 pm

    செய்தி முன்னோட்டம்

    மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள ஒரு சட்டவிரோத குழந்தைகள் காப்பகத்தில் தங்கியிருந்த 26 சிறுமிகள் காணாமல் போயுள்ளனர்.

    அந்த சிறுமிகள் குஜராத், ஜார்க்கண்ட், ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

    அவர்களில் சிலர் மத்தியப் பிரதேசத்தில் உள்ள செஹோர், ரைசென், சிந்த்வாரா மற்றும் பாலகாட் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

    தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் (NCPCR) தலைவர் பிரியங்க் கனுங்கோ போபாலின் புறநகரில் உள்ள பர்வாலியா பகுதியில் இருக்கும் அஞ்சல் பெண்கள் விடுதிக்கு திடீர் விஜயம் செய்தபோது இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது.

    அவர் பதிவேட்டை சரிபார்த்தபோது, ​​அதில் 68 சிறுமிகளின் பதிவுகள் இருந்தன. ஆனால் அவர்களில் 26 பேரை காணவில்லை.

    பிஜிடிக்வெம்ன

    குழந்தைகள் காப்பகத்தில் பல முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன

    காணாமல் போன சிறுமிகள் குறித்து காப்பகத்தின் இயக்குநர் அனில் மேத்யூவிடம் விசாரித்தபோது அவர் திருப்திகரமான பதில் அளிக்கவில்லை. இந்த வழக்கில் போலீசார் எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர்.

    எப்.ஐ.ஆரின் படி, சட்டவிரோதமாக நடத்தப்பட்டு அந்த குழந்தைகள் காப்பகத்தில் பல முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

    அந்த குழந்தைகள் இல்லத்தை நிர்வகித்து வரும் ஒரு மிஷனரி, தெருக்களில் இருந்து சில குழந்தைகளை மீட்டு அந்த காப்பகத்தில் வைத்திருந்ததாக பிரியங்க் கனுங்கோ கூறியுள்ளார்.

    மீட்கப்பட்ட குழந்தைகளை காப்பகத்தில் ரகசியமாக தங்க வைத்து அவர்களை கிறிஸ்தவ மதத்தை கடைபிடிக்க வைத்ததாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

    "பெரும்பாலான அந்த சிறுமிகள் 6 முதல் 18 வயதுக்குட்பட்ட இந்துக்கள் ஆவர். மிகுந்த சிரமத்திற்குப் பிறகு, போலீசார் எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளனர்" என்று கனுங்கோ கூறியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மத்திய பிரதேசம்

    சமீபத்திய

    மே 17ஆம் தேதி 11 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை: மண்டல வானிலை மையம் கனமழை
    தொடர்ந்து அபத்தமாக உளறும் அமெரிக்கா அதிபர் டிரம்ப்: '0 வரி கட்டணங்கள்' எதுவும் முடிவு செய்யப்படவில்லை என்கிறார் ஜெய்சங்கர் எஸ்.ஜெய்சங்கர்
    இந்தியா அமெரிக்காவிற்கு '0-கட்டண' வர்த்தக ஒப்பந்தத்தை வழங்கியுள்ளதாக டிரம்ப் கூறுகிறார் இந்தியா
    இந்தியாவின் தாக்குதலால் பாகிஸ்தானின் கிரானா மலைகளில் கதிர்வீச்சு கசிவா? அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு மறுக்கிறது பாகிஸ்தான்

    மத்திய பிரதேசம்

    மத்தியப் பிரதேசத்தில் இந்துக்களை மதம் மாற்றிய தீவிர இஸ்லாமியக் குழு இந்தியா
    'எதிர்க்கட்சிகளின் இலவசங்களை நம்பாதீர்கள்': பிரதமர் மோடி விமர்சனம் காங்கிரஸ்
    மத்தியப் பிரதேசம்: பழங்குடியின நபர் மீது சிறுநீர் கழித்தவர், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது  பழங்குடியினர்
    மத்திய பிரதேசம்: பாதிக்கப்பட்ட பழங்குடியின நபரை நேரில் அழைத்து மன்னிப்பு கோரிய முதலமைச்சர் ஷிவ்ராஜ் சிங் சவுகான் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025