NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஆந்திர தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டி ஏன் படுதோல்வி அடைந்தார்?
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஆந்திர தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டி ஏன் படுதோல்வி அடைந்தார்?

    ஆந்திர தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டி ஏன் படுதோல்வி அடைந்தார்?

    எழுதியவர் Sindhuja SM
    Jun 05, 2024
    11:26 am

    செய்தி முன்னோட்டம்

    ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள வீடுகளுக்கும், முதியவர்களுக்கும், பெண்களுக்கும், விவசாயிகளுக்கும், ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் மற்றும் பிறருக்கும் அவர்களது நலன் கருதி, பல திட்டங்களை அறிமுகப்படுத்திய தனது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி, இவ்வளவு அவமானகரமான தோல்வியை ஏன் சந்தித்தது என்பதற்கான காரணம் தெரியவில்லை என்று பதவி விலகிய ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

    2019இல் கிட்டத்தட்ட 50 சதவீத வாக்குகளுடன் 151 சட்டமன்ற தொகுதிகளையும், 23 மக்களவைத் தொகுதிகளையும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கைப்பற்றியது.

    ஆனால், இந்த வருடம் அக்கட்சி, 40 சதவீத வாக்குளுடன், வெறும் 10 சட்டமன்ற தொகுதிகளையும், 4 மக்களவைத் தொகுதிகளையும் மட்டுமே பெற்றுள்ளது.

    ஆந்திரா 

    இந்த படுதோல்விக்கான காரணம் என்னவாக இருக்கலாம்?

    2023இல் சந்திரபாபு கைது செய்யப்பட்டது, அவரை முற்போக்கான தெலுங்கு அரசியல் தலைமையின் அடையாளமாக கருதிய படித்த வகுப்பினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது கைது பழிவாங்கும் அரசியலாக இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.

    சந்திரபாபுவின் தலையெழுத்தை மாற்றிய திருப்புமுனை, இந்த பிரச்சனைகளில் பவன் கல்யாண் தலையிட்ட போது ஏற்பட்டது.

    அப்போது சந்திரபாபுவுக்கு தனது முழு ஆதரவையும் அறிவித்த பவன் கல்யாண், தெலுங்கு தேசம் கட்சியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடுவோம் என்று அறிவித்தார்.

    இதற்கிடையில், ஒருமுறை அவர் சந்திரபாபு நாயுடுவை சிறையில் சந்திக்க சென்ற போது பவன் கல்யாணுக்கு அனுமதி மறுக்கப்பட்டு, அவர் இரவு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டார். அந்த சம்பவங்களும் ஜெகன் மோகன் ரெட்டிக்கு எதிராக மக்களின் மனநிலையை மாற்றி இருக்கலாம்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஆந்திரா
    ஜெகன் மோகன் ரெட்டி

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    ஆந்திரா

    ககன்யான் திட்டத்தின் முதல் சோதனை ஓட்டம் வெற்றி இந்தியா
    கர்நாடகாவில் லாரி மீது கார் மோதியதில் 15 பேர் பலி கார்
    ஆந்திரா ரயில் விபத்து: 13 பேர் மரணம், 40க்கும் மேற்பட்டோர் காயம் எனத்தகவல் விபத்து
    சிவப்பு சிக்னலை கவனிக்காமல் சென்றதால் தான் ஆந்திர ரயில் விபத்து ஏற்பட்டது ரயில்கள்

    ஜெகன் மோகன் ரெட்டி

    பிரதமர் மோடியை சந்தித்தார் ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திரா
    ஆந்திராவின் நிர்வாக தலைநகராக மாறும் விசாகப்பட்டினம்! ஜெகன் மோகன் ரெட்டி  இந்தியா
    புதிய நாடாளுமன்ற திறப்பு விழா: அழைப்பை ஏற்றுக்கொண்ட 2 எதிர்க்கட்சிகள்  இந்தியா
    நவம்பர் 2ம் தேதி ஆந்திராவின் நிர்வாக தலைநகரமாகும் விசாகப்பட்டினம் உயர்நீதிமன்றம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025