NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தென் ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு வந்த 12 சிறுத்தைகள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    தென் ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு வந்த 12 சிறுத்தைகள்
    சிறுத்தைகளை ஏற்றி வந்த விமானப்படை விமானம் குவாலியர் விமானப்படை தளத்தில் காலை 10 மணிக்கு தரையிறங்கியது.

    தென் ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு வந்த 12 சிறுத்தைகள்

    எழுதியவர் Sindhuja SM
    Feb 18, 2023
    01:08 pm

    செய்தி முன்னோட்டம்

    தென்னாப்பிரிக்காவில் இருந்து 12 சிறுத்தைகள் மத்தியப் பிரதேசத்துக்கு வந்து சேர்ந்தன.

    சிறுத்தைகளை ஏற்றி வந்த விமானப்படை விமானம் குவாலியர் விமானப்படை தளத்தில் காலை 10 மணிக்கு தரையிறங்கியது.

    அடுத்து, அந்த சிறுத்தைகளை ஹெலிகாப்டர்கள் மூலம் குனோ தேசிய பூங்காவிற்கு அதிகாரிகள் அழைத்துச் செல்வார்கள்.

    ஐந்து பெண் சிறுத்தைகளும் ஏழு ஆண் சிறுத்தைகளும் மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தர் யாதவ் ஆகியோரால் குனோ தேசிய பூங்காவில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட அடைப்புகளுக்குள் விடுவிக்கப்படும்.

    சிறுத்தைகளுக்கான காப்பகத்தில் 10 தனிமைப்படுத்தப்பட்ட அறைகள் உருவாக்கப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்திய வனவிலங்கு சட்டங்களின்படி, விலங்குகள் புதிதாக நாட்டிற்குள் வந்தால் அவை 30 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட வேண்டும்.

    இந்தியா

    இந்தியாவிற்கு வந்த எட்டு நமீபிய சிறுத்தைகள்

    கடந்த ஆண்டு செப்டம்பரில், நமீபியாவில் இருந்து எட்டு சிறுத்தைகள் இந்தியாவுக்கு விமானம் மூலம் அனுப்பப்பட்டன.

    எட்டு நமீபிய சிறுத்தைகளும் தற்போது வேட்டையாடும் இடத்தில் அடைக்கப்பட்டுள்ளன. ஆறு சதுர கிமீ பரப்பளவு கொண்ட அந்த இடத்தில் அவை ஒன்றோடு ஒன்று தொடர்பு கொள்ள முடியும். விரைவில் அந்த சிறுத்தைகள் காட்டுக்குள் அவிழ்த்து விடப்படும்.

    2020ஆம் ஆண்டில், இந்தியாவின் உச்ச நீதிமன்றம், ஆப்பிரிக்க சிறுத்தைகளை, சோதனையின் அடிப்படையில் நாட்டிற்குள் கொண்டு வரலாம் என்று தீர்ப்பளித்ததை அடுத்து அது செயல்படுத்தப்பட்டுள்ளது.

    ஆசிய சிறுத்தைகள் 1940களின் பிற்பகுதியில் இந்தியாவில் மொத்தமாக அழிந்துவிட்டன.

    1950களில் இருந்து சிறுத்தைகளை மீண்டும் இந்தியாவிற்குள் கொண்டுவர முயற்சிகள் எடுக்கப்பட்டு கொண்டு தான் இருக்கிறது. ஆனால், அது தற்போது தான் சாத்தியமாகி இருக்கிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    ஆப்பிரிக்கா

    சமீபத்திய

    'கிரியேட்டிவ் பெயர்கள்... யதார்த்தத்தை மாற்றாது': அருணாச்சலப் பிரதேச இடங்களுக்கு சீனா பெயர் மாற்றுவது குறித்து இந்தியா அருணாச்சல பிரதேசம்
    தவறுதலாக எல்லை தாண்டிச் சென்ற BSF வீரரை மீதும் இந்தியாவிடம் ஒப்படைத்தது பாகிஸ்தான் இந்திய ராணுவம்
    பதிலடி நடவடிக்கையாக, இந்திய தூதரை 'நம்பிக்கையில்லாதவர்' என்று பாகிஸ்தான் அறிவிப்பு; நாட்டை விட்டு வெளியேற 24 மணி நேரம் கெடு பாகிஸ்தான்
    மைக்ரோசாப்ட் அதன் இரண்டாவது பணிநீக்கச் சுற்றில் 6,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது மைக்ரோசாஃப்ட்

    இந்தியா

    திரிபுரா வாக்கெடுப்பு: தெரிந்துகொள்ள வேண்டியவை திரிபுரா
    வைரல்: ராகுல் காந்தி பனிச்சறுக்கு விளையாடும் வீடியோ ராகுல் காந்தி
    மளமளவென சரிந்த தங்கம் விலை! வாங்க சரியான நேரம் தங்கம் வெள்ளி விலை
    பிபிசி அலுவலகத்தில் 3வது நாளாக தொடரும் வருமான வரித்துறை 'ஆய்வு' டெல்லி

    ஆப்பிரிக்கா

    தென் ஆப்ரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு 14-16 சிறுத்தைகள் இடமாற்றம்-மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா இந்தியா
    மத்திய பிரதேசம்: இந்தியாவுக்கு வரும் 12 ஆப்பிரிக்க சிறுத்தைகள் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025