NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மத்திய பிரதேசம்: இந்தியாவுக்கு வரும் 12 ஆப்பிரிக்க சிறுத்தைகள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    மத்திய பிரதேசம்: இந்தியாவுக்கு வரும் 12 ஆப்பிரிக்க சிறுத்தைகள்
    2022ஆம் ஆண்டில், எட்டு சிறுத்தைகள் நமீபியாவிலிருந்து மத்தியப் பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவிற்கு கொண்டு வரப்பட்டன.

    மத்திய பிரதேசம்: இந்தியாவுக்கு வரும் 12 ஆப்பிரிக்க சிறுத்தைகள்

    எழுதியவர் Sindhuja SM
    Feb 16, 2023
    04:44 pm

    செய்தி முன்னோட்டம்

    கடந்த ஆண்டு நமீபியாவிலிருந்து எட்டு சிறுத்தைகள் இந்தியாவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து, தற்போது ஒரு டஜன் ஆப்பிரிக்க சிறுத்தைகள் இந்தியாவுக்கு வரவுள்ளன.

    தென்னாப்பிரிக்காவிலிருந்து ஐந்து பெண் சிறுத்தைகளும் ஏழு ஆண் சிறுத்தைகளும் சனிக்கிழமையன்று(பிப் 18) மத்திய பிரதேசத்தில் உள்ள தேசிய பூங்காவிற்கு விமானம் மூலம் வர உள்ளது.

    அடுத்த தசாப்தத்தில் நிறைய சிறுத்தைகளை இந்தியாவிற்கு அனுப்பி வைக்க ஒப்புக்கொண்ட தென்னாப்பிரிக்கா, ஒரு ஒப்பந்தத்தில் கடந்த ஜனவரி மாதம் கையெழுத்திட்டது. அந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இந்த இடமாற்றம் நடைபெற உள்ளது.

    ஆசிய சிறுத்தைகள் 1940களின் பிற்பகுதியில் இந்தியாவில் மொத்தமாக அழிந்துவிட்டன.

    இந்தியா

    ஏற்கனவே இந்தியாவிற்குள் வந்த 8 சிறுத்தைகள்

    அதிகப்படியான வேட்டையாடுதல் மற்றும் வாழ்விடம் இல்லாமல் போனது ஆகிய காரணங்களால் தான் அந்த சிறுத்தைகள் அழிந்து போனதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

    2020ஆம் ஆண்டில், இந்தியாவின் உச்ச நீதிமன்றம், ஆப்பிரிக்க சிறுத்தைகளை, சோதனையின் அடிப்படையில் நாட்டிற்குள் கொண்டு வரலாம் என்று தீர்ப்பளித்தது.

    2022ஆம் ஆண்டில், எட்டு சிறுத்தைகள் நமீபியாவிலிருந்து மத்தியப் பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவிற்கு கொண்டு வரப்பட்டன.

    தற்போது, மேலும் 12 சிறுத்தைகளை மத்திய பிரதேசத்திற்கு கொண்டு வர உள்ளனர்.

    12 சிறுத்தைகளும் சனிக்கிழமை மதியம் தேசிய பூங்காவிற்கு வந்து சேரும் என்று வனவிலங்கு நிபுணர்கள் கூறியுள்ளனர்.

    1950களில் இருந்து சிறுத்தைகளை மீண்டும் இந்தியாவிற்குள் கொண்டுவர முயற்சிகள் எடுக்கப்பட்டு கொண்டு தான் இருக்கிறது. ஆனால், அது தற்போது தான் சாத்தியமாகி இருக்கிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    ஆப்பிரிக்கா

    சமீபத்திய

    'Thug Life' படப்பிடிப்பு தளத்தில் கமலிடம் 'தக் லைஃப் மொமெண்ட்' காட்டிய சிம்பு; அவரே பகிர்ந்த சுவாரசிய தகவல் கமல்ஹாசன்
    மாணவர்கள் கவனத்திற்கு, SSLC மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு பொதுத்தேர்வு
    முதன்முறையாக, தாலிபான் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் பேசிய இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எஸ்.ஜெய்சங்கர்
    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்

    இந்தியா

    ஆதார் அட்டையில் பெயர் முகவரியை திருத்தம் செய்வது எப்படி? ஆதார் புதுப்பிப்பு
    புல்வாமா தாக்குதலின் 4ஆம் ஆண்டு நினைவு நாள்: பிரதமர் மோடி அஞ்சலி பாகிஸ்தான்
    20 லட்ச ரூபாய்க்கும் குறைவு: இந்தியாவின் டாப் 5 எம்பிவி கார்களின் பட்டியல் கார்
    பிரபாகரன் சர்ச்சை: பழ.நெடுமாறனிடம் விசாரிக்க மத்திய, மாநில உளவு துறைகள் முடிவு இலங்கை

    ஆப்பிரிக்கா

    தென் ஆப்ரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு 14-16 சிறுத்தைகள் இடமாற்றம்-மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025