NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தென் ஆப்ரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு 14-16 சிறுத்தைகள் இடமாற்றம்-மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா
    அடுத்த செய்திக் கட்டுரை
    தென் ஆப்ரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு 14-16 சிறுத்தைகள் இடமாற்றம்-மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா
    தென் ஆப்ரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு 14-16 சிறுத்தைகள் இடமாற்றம்-மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா

    தென் ஆப்ரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு 14-16 சிறுத்தைகள் இடமாற்றம்-மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா

    எழுதியவர் Nivetha P
    Feb 10, 2023
    02:23 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவில் வனவிலங்கு பாதுகாப்பு தொடர்பாக கடந்த 9 ஆண்டுகளில் மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.

    இது குறித்து மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா செய்தியாளர்களிடம் அண்மையில் பேசியுள்ளார்.

    அப்போது அவர் கூறுகையில், வனவிலங்கு பாதுகாப்பில் தனது தந்தை முக்கிய பங்காற்றியுள்ளார் என்று கூறினார்.

    அதனையடுத்து அவர், சிறு வயதில் இருந்தே நான் வனவிலங்கு ஆர்வலர். எனவே இந்த வனவிலங்கு பாதுகாப்பு துறை குறித்த ஆர்வமும் அக்கறையும் எனக்கு எப்போதும் உண்டு என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், வனவிலங்குகளை பாதுகாப்பதும், அவை பெருகுவதை உறுதி செய்வதும் நம் பாரம்பரிய அங்கமாக இருந்து வருகிறது என்றும் கூறினார்.

    தென் ஆப்ரிக்கா-நமீபியா

    8 சிறுத்தைப்புலிகள் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் இந்தியாவிற்கு எடுத்து வரப்பட்டது

    தொடர்ந்து பேசிய அவர், வனவிலங்குகளை பொக்கிஷமாய் பாதுகாத்து, பராமரித்து, சிறந்த முறையில் வளர்த்து அடுத்த தலைமுறையினருக்கு அளிக்க வேண்டியது நம் கடமை என்றும் அவர் கூறினார்.

    மத்திய அரசின் சிறுத்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ், தென் ஆப்ரிக்காவின் நமீபியாவில் இருந்து எட்டு சிறுத்தைப்புலிகள் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் இந்தியாவிற்கு எடுத்து வரப்பட்டது.

    அதனை மத்திய பிரதேசத்தின் குனோ தேசிய பூங்காவிற்கு பிரதமர் மோடி கொடுத்துள்ளார்.

    இந்நிலையில் தற்போது மீண்டும் வரும் சில மாதங்களில் மேலும் 14-16 சிறுத்தை புலிகள் தென் ஆப்ரிக்காவில் இருந்து கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது என்னும் தகவலை மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    இந்தியா

    துருக்கிக்கு அனுப்பப்பட்ட நாய் படையைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டியவை உலகம்
    ரெப்போ வட்டி விகிதம் 6.50 அதிகரிப்பு! உயரும் வீடு வாகன கடன்; தொழில்நுட்பம்
    சீன 'வேவு' பலூன் இந்தியாவை வேவு பார்க்க அனுப்பட்டதா சீனா
    130கிமீ பயணம் செய்யும் ஒகாயா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்! எலக்ட்ரிக் ஸ்கூட்டர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025