NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மண்ணுக்குள் மறைத்துவைக்கப்பட்ட 1180 மதுபாட்டில்கள் பறிமுதல் - 9 பேர் கைது
    அடுத்த செய்திக் கட்டுரை
    மண்ணுக்குள் மறைத்துவைக்கப்பட்ட 1180 மதுபாட்டில்கள் பறிமுதல் - 9 பேர் கைது
    மண்ணுக்குள் மறைத்துவைக்கப்பட்ட 1180 மதுபாட்டில்கள் பறிமுதல் - 9 பேர் கைது

    மண்ணுக்குள் மறைத்துவைக்கப்பட்ட 1180 மதுபாட்டில்கள் பறிமுதல் - 9 பேர் கைது

    எழுதியவர் Nivetha P
    Oct 10, 2023
    07:38 pm

    செய்தி முன்னோட்டம்

    புதுச்சேரி-காரைக்கால் பகுதியிலிருந்து தமிழ்நாடு-நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு மதுபாட்டில்கள் மற்றும் சாராயம் கடத்தி விற்பனை செய்யப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது.

    இதனை கட்டுப்படுத்த மாவட்ட காவல்துறை பல்வேறு இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து மது கடத்தலை கட்டுப்படுத்த கைது நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், நூதன முறையில் கடத்தல்கள் தொடர்ந்து நடந்து கொண்டு தான் உள்ளது.

    அதன்படி நாகை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் காவல்துறை அதிரடி சோதனை நடத்தியது.

    அப்போது நாகை நல்லியான் தோட்டம், வடக்குப்பொய்கை நல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் புதுச்சேரி காரைக்கால் பகுதியிலிருந்து கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்கள் மண்ணுக்குள் புதைத்து மறைத்து வைத்திருப்பது கண்டறியப்பட்டது என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

    இதனைத்தொடர்ந்து மண்ணுக்குள் புதைத்து வைத்திருந்த 1180 மது பாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

    மது

    மதுபாட்டில்கள் கடத்தலில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டம் பாயும் - காவல் கண்காணிப்பாளர்

    தொடர்ந்து இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட 6 மூதாட்டிகள் உள்ளிட்ட 9 பேரினை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

    மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனம் ஒன்றையும் அவர்களிடம் இருந்து காவல்துறை பறிமுதல் செய்துள்ளது என்று கூறப்படுகிறது.

    இதன் பின்னர் நாகை வெளிபாளையம் காவல்நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்களை காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங், துணை காவல் கண்காணிப்பாளரான பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பார்வையிட்டுள்ளனர்.

    அதன் பின்னர் இந்த விவகாரம் குறித்து காவல் கண்காணிப்பாளரான ஹர்ஷ் சிங் பேசுகையில், இதுபோன்ற வெளிமாநில மது பாட்டில்கள் கடத்தலை தடுக்க தீவிர கண்காணிப்பில் ஈடுபடும்படி காவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது' என்றும்,

    'இது போன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டம் பாயும்' என்று எச்சரிக்கையும் விடுத்தது குறிப்பிடத்தக்கது.

    ட்விட்டர் அஞ்சல்

    கடத்தல் மது பாட்டில்கள் 

    #WATCH | காரைக்காலில் இருந்து கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல்!#SunNews | #Karaikal pic.twitter.com/MWph1ZgLDX

    — Sun News (@sunnewstamil) October 10, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கடத்தல்
    காவல்துறை
    காவல்துறை
    தமிழ்நாடு

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    கடத்தல்

    கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழ்நாட்டில் தங்க கடத்தல் அதிகரிப்பு - IRS அதிகாரி அதிர்ச்சி தகவல் தமிழ்நாடு
    மலேசியாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்த அரிய வகை குரங்குகள் - திருப்பியனுப்ப அதிகாரிகள் நடவடிக்கை மலேசியா
    கேரள மாநிலம், கொச்சி விமான நிலையத்தில் ரூ.49.5 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் கேரளா
    குஜராத்தில் 5 ஆண்டுகளில் 41 ஆயிரம் பெண்கள் மாயம் - அதிர்ச்சி தகவல்  குஜராத்

    காவல்துறை

    7 முறை கருக்கலைப்பு புகார் எதிரொலி:  விஜயலட்சுமிக்கு மருத்துவ பரிசோதனை நாம் தமிழர்
    ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது  ஆந்திரா
    பாலியல் பலாத்கார வழக்கு - சீமான் நேரில் ஆஜராக காவல்துறை அழைப்பாணை  காவல்துறை
    பட்டுக்கோட்டையில் வீட்டிலேயே பிரசவம் பார்த்ததால் தாய், சேய் இருவரும் பலி  குழந்தைகள்

    காவல்துறை

    ஆந்திர மாநிலம் நெல்லூரில் 144 தடை உத்தரவு ஆந்திரா
    பெண் ஆசையால் பறிபோன ரவுடியின் உயிர், பரபரப்பு சம்பவம் - க்ரைம் ஸ்டோரி  கொலை
    தியாகி இமானுவேல் சேகரனுக்கு உருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும் - தமிழக முதல்வர்  காவல்துறை
    பாரதியாரின் 103வது நினைவுநாள் - கடலூர் மத்திய சிறையிலுள்ள சிலைக்கு போலீசார் மரியாதை கடலூர்

    தமிழ்நாடு

    சிறு குறு நிறுவனங்களின் ஒரு கோரிக்கையினை ஏற்ற தமிழக அரசு  தமிழக அரசு
    வாச்சாத்தி மலைக்கிராமத்தில் உண்மையில் என்ன நடந்தது? வரலாற்று நிகழ்வு
    காவிரி விவகாரம் - கர்நாடக அரசு மேல்முறையீடு மனு தாக்கல்  கர்நாடகா
    7 தமிழக மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு புதுச்சேரி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025