NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இந்தியா-மியான்மர் எல்லையில் பதற்றம்: 10 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியா-மியான்மர் எல்லையில் பதற்றம்: 10 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
    இந்தியா-மியான்மர் எல்லையில் பதற்றம்

    இந்தியா-மியான்மர் எல்லையில் பதற்றம்: 10 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

    எழுதியவர் Venkatalakshmi V
    May 15, 2025
    08:50 am

    செய்தி முன்னோட்டம்

    இந்தியா-மியான்மர் எல்லை பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 10 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

    உளவுத்துறைக்கு கிடைத்த தகவலின் பேரில், இந்திய ராணுவத்தின் கிழக்கு கமாண்டு பிரிவை சேர்ந்த 'ஸ்பியர் கார்ப்ஸ்' மற்றும் அசாம் ரைபிள்ஸ் படையினர் இணைந்து நேற்று இரவு தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

    இந்த தேடுதல் நடவடிக்கையின் போது, மணிப்பூர் மாநிலம் சண்டல் மாவட்டம் நியூ சம்டால் கிராமம் அருகே பயங்கரவாதிகளுடன் ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் 10 பேர் உயிரிழந்தனர்.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    #JustNow | மணிப்பூரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், ஆயுத கும்பலைச் சேர்ந்த 10 பலி! #SunNews | #Manipur | #Militants pic.twitter.com/qUSmvSY28Z

    — Sun News (@sunnewstamil) May 15, 2025

    அறிக்கை

    பாதுப்புத்துறையினர் வெளியிட்ட அறிக்கை

    இது குறித்து பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது: "இந்தோ-மியான்மர் எல்லைக்கு அருகில் உள்ள சந்டெல் மாவட்டத்தின் கெங்ஜாய் தாலுகாவின் நியூ சாம்தால் கிராமத்திற்கு அருகே ஆயுதமேந்திய போராளிகளின் நடமாட்டம் குறித்த குறிப்பிட்ட உளவுத்துறை தகவலின் பேரில், ஸ்பியர் கார்ப்ஸின் கீழ் உள்ள அசாம் ரைபிள்ஸ் பிரிவு ஒரு நடவடிக்கையைத் தொடங்கியது. மணிப்பூரின் சண்டேல் மாவட்டத்தில் அசாம் ரைபிள்ஸ் பிரிவுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் குறைந்தது 10 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். சம்பவ இடத்தில் இருந்து பல்வேறு வகையான ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தீவிரவாதிகளைத் தேடும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. சம்பவம் தொடர்பான மேலும் தகவல்கள் விரைவில் வெளியிடப்படும்".

    இந்தச் சம்பவம், எல்லைப் பகுதிகளில் நிலவும் பாதுகாப்பு சூழ்நிலையை பதற்றமாகியுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மணிப்பூர்
    இந்தியா
    மியான்மர்
    பயங்கரவாதம்

    சமீபத்திய

    இந்தியா-மியான்மர் எல்லையில் பதற்றம்: 10 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை மணிப்பூர்
    கனடாவின் புதிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள இந்திய வம்சாவளி அமைச்சர்கள்! கனடா
    ராஜ் நிதிமோருவுடனான தனது உறவை சமந்தா உறுதி செய்தாரா? வைரலாகும் இன்ஸ்டா பதிவு சமந்தா ரூத் பிரபு
    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 'பார்கவாஸ்த்ரா' வெற்றிகரமாக சோதனை: இந்தியாவின் பாதுகாப்பு அம்சத்தில் மற்றொரு மைல்கல் இந்தியா

    மணிப்பூர்

    பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிக்கப்பட்ட மணிப்பூர் கலவரம்
    வெள்ளிப்பதக்கத்தை மணிப்பூர் மக்களுக்கு அர்ப்பணித்த இந்திய வீராங்கனை ஆசிய விளையாட்டுப் போட்டி
    2 மணிப்பூர்-மெய்தே மாணவர்கள் கொல்லப்பட்ட வழக்கு: 4 பேர் கைது  இந்தியா
    மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடித்தது- இரண்டு வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது பாதுகாப்பு துறை

    இந்தியா

    இந்திய ஆயுதப்படைகளின் முப்படை செய்தியாளர் சந்திப்பு தொடங்கியது இந்திய ராணுவம்
    அவசர காலத்தில் எண்ணெய் மற்றும் எரிவாயு மீது அரசுக்கு முழு அதிகாரம்; மத்திய அரசு வரைவு சட்டம் வெளியீடு மத்திய அரசு
    ஆபரேஷன் சிந்தூர்: 35-40 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாக இந்தியா அறிவிப்பு இந்திய ராணுவம்
    ஆப் சிந்தூரில், கராச்சியைத் தாக்க இந்திய கடற்படை தயாராக இருந்தது: துணை அட்மிரல் ஆபரேஷன் சிந்தூர்

    மியான்மர்

    2 நாட்களில் மணிப்பூருக்குள் நுழைந்த 718 மியான்மர் நாட்டவர்கள்  மணிப்பூர்
    மணிப்பூர்: சட்டவிரோதமாக குடியேறுபவர்களை தடுக்க பயோமெட்ரிக் அறிமுகம் மணிப்பூர்
    மியான்மார்: ஆங் சான் சூகிக்கு மன்னிப்பு வழங்க இராணுவ அரசாங்கம் முடிவு  உலக செய்திகள்
    மணிப்பூரில் தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியதில் ஒரு போலீஸ்காரர் பலி: 3 பேர் காயம்  இந்தியா

    பயங்கரவாதம்

    பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து அனைத்துக்கட்சி கூட்டத்தில் மத்திய அரசு கூறியது என்ன? மத்திய அரசு
    எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே துப்பாக்கி சூட்டை தொடங்கிய பாகிஸ்தான்; இந்தியா பதிலடி பாகிஸ்தான்
    பஹல்காம் பயங்கரவாதிகளை 'சுதந்திரப் போராளிகள்' என்று குறிப்பிட்ட பாகிஸ்தான் துணைப் பிரதமர் பாகிஸ்தான்
    பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய 2 LeT பயங்கரவாதிகளின் வீடுகளை அழித்த ராணுவம் பஹல்காம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025