"33 வருடங்கள் கழித்து...": அமிதாப் பச்சனுடன் நடிப்பது குறித்து சிலாகித்த ரஜினி
ரஜினிகாந்த், தனது அடுத்த படத்தில் அமிதாப் பச்சனுடன் இணைகிறார் என்பது தெரிந்த செய்தியே. 'தலைவர் 170' என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, T.J.ஞானவேல் இயக்குகிறார். இந்த படத்தில், அமிதாப் பச்சன் முதல் முறையாக நேரடி தமிழ் படத்தில் நடிக்கிறார் என்பது கூடுதல் சுவாரசியம். இந்த நிலையில், அமிதாப் பச்சனுடன் நடிப்பது தனக்கு மிகவும் ஆனந்தமாக உள்ளதென்றும், 33 வருடங்கள் கழித்து தன்னுடைய ஆசானான அமிதாப் பச்சனுடன் இணைவதில் தன்னுடைய இதயம் மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கிறதெனவும், ரஜினி தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். 'தலைவர்-170' திரைப்படத்தில், ரஜினி, அமிதாப் பச்சனுடன், ஃபகத் ஃபசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியார், ரித்திகா சிங் மற்றும் துஷாரா விஜயன் ஆகியோர் நடிக்கின்றனர்.