NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / "குவான்டிகோ படப்பிடிப்பின் போது, கருமுட்டைகளை சேமித்து வைத்தேன்": பிரியங்கா சோப்ரா பேட்டி 
    அடுத்த செய்திக் கட்டுரை
    "குவான்டிகோ படப்பிடிப்பின் போது, கருமுட்டைகளை சேமித்து வைத்தேன்": பிரியங்கா சோப்ரா பேட்டி 
    தனது தாய் மது சோப்ராவுடன், நடிகை பிரியங்கா சோப்ரா

    "குவான்டிகோ படப்பிடிப்பின் போது, கருமுட்டைகளை சேமித்து வைத்தேன்": பிரியங்கா சோப்ரா பேட்டி 

    எழுதியவர் Venkatalakshmi V
    May 01, 2023
    11:13 am

    செய்தி முன்னோட்டம்

    பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா. இவர் தற்போது ஹாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

    அவர் பாப் பாடகரான நிக் ஜோனஸை திருமணம் செய்து கொண்டார்.

    திருமணமான சில ஆண்டுகளுக்கு பிறகு, வாடகை தாய் மூலம் ஒரு பெண்குழந்தைக்கு தாயானார்.

    பிரியங்கா சோப்ராவிற்கு மருத்துவ சிக்கல்கள் இருந்த காரணத்தினால் தான், வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள தீர்மானித்ததாக தெரிவித்தார்.

    குழந்தைக்கு 'மால்டி மேரி' என பெயரிட்டுள்ள அந்த தம்பதி, சமீபத்தில் இந்தியாவில் நடைபெற்ற அம்பானியின் கலாச்சார மையம் திறப்பு விழாவிற்கும், வருகை தந்திருந்தனர்.

    பிரியங்கா சோப்ரா தற்போது 'சிட்டாடெல்' என்ற வெப் தொடரில் நடித்து வருகிறார். அந்த தொடரின் ப்ரோமோஷனின் போது, இந்த வாடகை தாய் விவகாரம் குறித்து கேட்கப்பட்டது.

    card 2

    தாயின் அறிவுரைப்படி நடந்த பிரியங்கா 

    பிரியங்கா சோப்ராவின் பெற்றோர்கள் இருவரும் இந்திய ராணுவத்தில் மருத்துவர்களாக பணிபுரிந்தவர்கள்.

    பிரியங்காவின் தாய், மது சோப்ரா, மகப்பேறு மருத்துவர் ஆவர்.

    பிரியங்கா தனது 25 வயதில், திருமணம் செய்துகொள்ளும் எண்ணம் இல்லை எனவும், தான் எப்போது குழந்தை பெற்றுக்கொள்வது எனவும் தெரியாமல் இருந்ததாகவும் கூறினார். அப்போது, அவரின் தாய்தான், கருமுட்டைகளை சேமித்து வைக்கும் ஐடியாவை தந்ததாக பிரியங்கா கூறினார்.

    இருப்பினும், கருமுட்டைகள் சேமிப்பு என்பது, அனைவரும் நினைப்பது போல, சுலபமான விஷயம் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

    2015-இல் வெளியான 'குவான்டிகோ' என்ற ஆங்கில படத்தின் ஷூட்டிங்கின் போதுதான், இந்த மருத்துவ ஆலோசனை நடைபெற்றது எனவும், இதற்காக தொடர்ச்சியாக ஒரு மாதம், தனக்கு ஊசி போடப்பட்டதெனவும் பிரியங்கா சோப்ரா தற்போது தெரிவித்துள்ளார் .

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பாலிவுட்

    சமீபத்திய

    தயாரிப்பாளர் அவதாரம் எடுத்த நடிகர் ரவி மோகன்; ஜெயம் ஸ்டுடியோஸ் எனும் பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார் ரவி
    ஓரினச் சேர்க்கையாளர்களை குடும்பமாக அங்கீகரித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு சென்னை உயர் நீதிமன்றம்
    அரிய பூமி காந்தத் தடையால் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தவிப்பு; சீனாவுடன் பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு முயற்சி ஆட்டோமொபைல் நிறுவனங்கள்
    இந்தியாவில் ஐபோன் மற்றும் மேக்புக் பழுதுபார்ப்புகளுக்காக டாடாவுடன் கைகோர்த்தது ஆப்பிள் ஆப்பிள் நிறுவனம்

    பாலிவுட்

    முதல் முறையாக மகளின் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை பிரியங்கா சோப்ரா வைரல் செய்தி
    590 கோடிக்கு மேல் வசூலை வாரி குவித்துள்ள 'பதான்' திரைப்படம் திரைப்பட வெளியீடு
    பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவை திருமணம் செய்ய போகும் 'தோனி' பட நாயகி கியாரா திருமணங்கள்
    மறைந்த நடிகை ஸ்ரீதேவி பற்றிய வாழ்க்கை வரலாறு, விரைவில் புத்தகமாக வெளி வரப்போகிறது கோலிவுட்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025