மலையாள நடிகர் சுரேஷ் கோபி மகளின் திருமணத்தில் கலந்து கொண்ட பிரதமர் மோடி; வைரலாகும் புகைப்படங்கள்
மலையாள திரையுலகின் முக்கிய நடிகரும், அரசியல்வாதியுமான சுரேஷ் கோபியின் மகளின் திருமணம் இன்று குருவாயூரில் நடைபெற்றது. இந்த திருமண விழாவில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மலையாள திரையுலகின் முக்கிய நட்சத்திரங்களான மம்முட்டி, மோகன்லால், திலீப் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். திருமணம் முடிவடைந்ததும் பிரதமர் மோடி, தம்பதிகளுக்கு மாலைகளை வழங்கி ஆசிர்வதித்தார். பிரதமரின் வருகையை முன்னிட்டு, குருவாயூரில் பிரசித்தி பெற்ற கிருஷ்ணர் கோவிலில் அதிகாலை முதல் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்த திருமணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றன.