ஜெயிலர் BO கொண்டாட்டம்: இசையமைப்பாளர் அனிருத்திற்கு காசோலை வாங்கிய சன் பிக்ச்சர்ஸ்
'ஜெயிலர்' திரைப்படம் தாறுமாறாக வெற்றி பெற்றுள்ளது. யாருமே இதனை பெரிய வெற்றி பெரும் இந்த திரைப்படம் என எதிர்பார்க்கவில்லை என்பதுதான் நிஜம். படத்தில் நடித்திருந்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திற்கு இத்தைகைய ஒரு வெற்றி தேவைப்பட்டிருந்தது. அதோடு இயக்குனர் நெல்சனிற்கும் இது முக்கியமான வெற்றியாகும். இந்த படத்திற்காக 1.5 வருடங்கள் தங்கள் படக்குழு உழைத்ததாக அவர் கூறி இருந்தார். ஜெயிலர் திரைப்படம் இது வரை 600 கோடியை நெருங்குமளவிற்கு வசூல் பெற்றுள்ளது என செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக சன் பிக்ச்சர்ஸ் தயாநிதி மாறன், ரஜினிக்கும், நெல்சனிற்கும் லாபத்தை, 'ப்ராஃபிட் ஷேரிங்' அடிப்படையில் பகிர்ந்தளித்தார்.
அனிருத்திற்கு காசோலை, அடுத்து காரா?
ரஜினிகாந்திற்கு, நெல்சனிற்கும் காசோலை உடன், அவர்கள் விருப்பப்பட்ட கார் ஒன்றையும் பரிசளித்தார் தயாரிப்பாளர். அப்போதே ரசிகர்கள் பலரும், இசையமைப்பாளர் அனிருத்திற்கும் இதே போன்ற பரிசை அளிக்க வேண்டும் என கூறி வந்தனர். அதற்கு காரணம் இப்படத்தின் மிக முக்கியமான காரணம், படத்தின் பாடல்களும், பின்னணி இசையும் தான் என்பது அனைவரின் ஒருமித்த கருத்தாக இருந்தது. படம் வெளியாகும் முன்னரே, படத்திற்கான எதிர்பார்ப்பை தூண்டியது அனிருத்தின் இசை தான் என்பதை மறுப்பதற்கில்லை. முன்னதாக 'விக்ரம்' திரைப்படத்திற்கே, அனிருதிற்கான அங்கீகாரம் மறுக்கப்பட்டதாக ரசிகர்கள் குமுற, தற்போது காசோலை வழங்கியுள்ளார் கலாநிதி மாறன். அடுத்து அவர் என்ன கார்-ஐ பரிசளிக்கவுள்ளார் என்பதை காண ரசிகர்கள் ஆர்வமாகவுள்ளனர்.