
ரீவைண்ட்: இறைவி- கார்த்திக் சுப்புராஜின் ஆல் டைம் கிளாசிக்
செய்தி முன்னோட்டம்
எந்தவொரு இயக்குனரின் படைப்பும் அவர்களுக்கே தனித்துவத்துடன் முத்திரை குத்தப்பட்டிருக்கும். அதுபோலவே கார்த்திக் சுப்புராஜ் படங்களும் நிச்சயமாக அத்தகைய தனித்துவமான படைப்புகள் ஆகும்.
அவரது எழுத்து அவரது திரைப்படங்களின் முதுகெலும்பாக இருக்கிறது. படங்களை பார்ப்பதில் செலவழித்த ஒவ்வொரு நொடியையும் ரசிகர்களுக்கு மறக்கமுடியாததாக ஆக்குகிறது.
பெரும்பான்மையான தமிழ் இயக்குனர்களைப் போல நான்கு ஐந்து பாடல்கள், சண்டைக்காட்சிகளை வைத்து படம் எடுக்கும் சாதாரண இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் அல்ல.
அவரது படங்கள் எதார்த்தமானதாக, தத்ரூபமானதாக இருக்கும். அவர் இயக்கிய 10க்கும் மேற்பட்ட படங்களில், ஒரு சில படங்களைத் தவிர, பிற படங்களில் ஹீரோ வழிபாட்டை அனுமதிக்கமாட்டார்.
இவர் இயக்கத்தில் ஜிகர்தண்டா டபுள்X இன்று வெளியாகும் நிலையில், இவரின் ஆல்டைம் கிளாசிக் இறைவி பற்றிய சிறு தொகுப்பை பார்க்கலாம்.
2nd card
இறைவியில் பெண்ணியம் பேசிய கார்த்திக் சுப்புராஜ்
தமிழ் சினிமாவில் பல இயக்குனர்கள் 'பெண்கள் சார்ந்த ஸ்கிரிப்ட்'களை எழுதியிருக்கிறார்கள், ஆனால் இறைவி திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் எஸ் ஜே சூர்யா பேசும் வசனம் சற்று வித்தியாசமானது.
"ஆண் நெடில் எழுத்து பெருசா சொல்லணும், பெண் குறில் எழுத்து சின்னதா சொன்னா போதும்" என்ற வசனத்தின் மூலம்,
நம் சமூகத்தால் ஒரு பெண் எப்படி 'சிறியவள்' என்று, உணரவைக்கப்படுகிறாள் என்பதை சிம்பாலிக்காக கார்த்திக் சுப்புராஜ் சொல்லி இருப்பார்.
ஒரு இயக்குனர் சமூக பிரச்சனைகளை பேசும்போது, அது பெரும்பாலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும் திரைப்படமாக அமைகிறது.
அதனால் தான் வெற்றிமாறன், தியாகராஜன் குமாரராஜா மற்றும் கார்த்திக் சுப்புராஜ் ஆகியோரை மக்களின் பிரச்சினைகள் மற்றும் எதார்த்தத்தை சொல்லும் இயக்குனர்களாக கொண்டாடுகிறோம்.
3rd card
வித்தியாசமான இறைவி பெண்கள்
இறைவி திரைப்படத்தில் வரும் பெண்கள் தனித்துவமான மற்றும் புரட்சிகர சிந்தனைகளை கொண்டுள்ளார்கள்.
மணமகன் வரதட்சணை கேட்டதால் திருமணத்தை ரத்து செய்யும் மணமகள், தன்னை கற்பழித்தவரை திருமணம் செய்து கொள்ள நீதிபதி கூறியதை மறுக்கும் பலாத்காரத்தில் இருந்து தப்பிய பெண்,
மாமியார் பாலின கருக்கலைப்பு செய்ய விரும்புவதால் திருமணத்திலிருந்து வெளியேறும் கர்ப்பிணி மனைவி, இது போன்ற சாதாரண பெண்ணிய கதாபாத்திரங்களை இவர் படங்களில் நம்மால் பார்க்க முடியாது.
மாறாக, இறைவி படத்தில் பெண்கள் புரட்சிகர சிந்தனையுடன் வலம் வருகிறார்கள். அதனால் தான் இது போன்ற படங்கள் வெறும் கருத்துப்படம் என்ற அளவையும் தாண்டி, சிறந்த படமாக இன்றளவும் பேசப்படுகிறது.