
'கேம் சேஞ்சர்' எனது முதல் தவறான முடிவு: தயாரிப்பாளர் தில் ராஜு
செய்தி முன்னோட்டம்
பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு, இயக்குநர் ஷங்கருடன் இணைந்து தயாரித்த 'கேம் சேஞ்சர்' திரைப்படம் தான் தனது திரைப்பயணத்தில் முதல் தவறான முடிவாக இருந்தது எனத்தெரிவித்துள்ளார். தற்போது அவருடைய அடுத்த தெலுங்கு திரைப்படத்தின் ப்ரமோஷன் பணிக்ளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். அதன் ஒரு பகுதியாக தனியார் ஊடகத்திற்கு அவர் அளித்த பேட்டியில், 'கேம் சேஞ்சர்' தோல்வி குறித்து தனது மனநிலையை வெளிப்படுத்தியுள்ளார் தயாரிப்பாளர் தில் ராஜு. "இயக்குநர் ஷங்கர் போன்ற பெரிய இயக்குநருடன் நான் இதற்கு முன் ஒருபோதும் பணியாற்றவில்லை. 'கேம் சேஞ்சர்' என்பது எனது முதல் தவறான முடிவாகும். அந்த ஒப்பந்தத்தில் என் பார்வை மற்றும் கோட்பாடுகளை தெளிவாக முன்வைக்காமல் தயாரிப்பில் ஈடுபட்டேன். இது ஒரு பெரிய தவறாக இருந்தது," என்று தெரிவித்தார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
"In my 50+ film career, I never worked with such big directors. #GameChanger is my first wrong step.
— Movies4u Official (@Movies4u_Officl) June 23, 2025
I should have clearly mentioned my points in the contract and moved into production, but I didn't. It was my mistake."
- Producer #DilRaju pic.twitter.com/Z0KGgjC0xe
விவரங்கள்
படத்தின் தோல்விக்கு முழுமையாக பொறுப்பேற்பதாகவும் கூறினார்
மேலும், "'கேம் சேஞ்சர்' படத்தின் எடிட்டர் கூறியபடி, அதன் முழு காட்சிகள் ஏழரை மணி நேரம் இருந்தது உண்மைதான். ஒரு திரைப்படம் சரியாக அமையவில்லை என்றால், அதை சரிசெய்வது தயாரிப்பாளரின் பொறுப்பு. அந்த தவறுக்கு நான் முழுமையாக பொறுப்பேற்கிறேன். அப்படம் தொடங்கும்போது பச்சை கொடி காட்டியதிலேயே தவறு செய்தேன்," என்றார் தில் ராஜு. ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண், எஸ்.ஜே.சூர்யா, ஜெயராம், கியாரா அத்வானி, அஞ்சலி உள்ளிட்ட பலர் நடித்த 'கேம் சேஞ்சர்' திரைப்படம், கார்த்திக் சுப்பராஜ் எழுதிய கதை அடிப்படையில் உருவானது. எதிர்பார்ப்புகள் அதிகமாக இருந்த இந்த படம், வெளியான பிறகு ரசிகர்களிடன் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியாமல், வணிகரீதியாக தோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.