NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / படகுகளுடன் வெள்ள நிவாரண பணியில் களம் இறங்கிய இயக்குனர் மாரி செல்வராஜ்
    அடுத்த செய்திக் கட்டுரை
    படகுகளுடன் வெள்ள நிவாரண பணியில் களம் இறங்கிய இயக்குனர் மாரி செல்வராஜ்
    படகுகளுடன் வெள்ள நிவாரண பணியில் களம் இறங்கிய இயக்குனர் மாரி செல்வராஜ்

    படகுகளுடன் வெள்ள நிவாரண பணியில் களம் இறங்கிய இயக்குனர் மாரி செல்வராஜ்

    எழுதியவர் Venkatalakshmi V
    Dec 19, 2023
    05:18 pm

    செய்தி முன்னோட்டம்

    தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தை சுற்றியுள்ள கிராமங்களில் வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும் பணியில் இயக்குனர் மாரி செல்வராஜ் ஈடுபட்டுள்ளார்.

    தமிழகத்தின் தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது.

    இதன் காரணமாக அம்மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சாலைகள் உடைந்து, கிராமங்கள் தனித்தீவுகளாக காட்சி தருகின்றன.

    குறிப்பாக தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்வதால், அங்கே மக்கள் தவித்து வருகின்றனர்.

    மீட்பு நடவடிக்கைகளில் அரசும், தன்னார்வலர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று, வெள்ளம் பாதித்த இடங்களை பார்வையிட விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விரைந்தார்.

    அவருடன் இயக்குனர் மாரி செல்வராஜ்-உம் உடன் சென்றுள்ளார்.

    card 2

    களத்தில் இறங்கிய மாரி செல்வராஜ் 

    மாரி செல்வராஜ்-உம் தென்மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதால், அவரும் களப்பணியில் ஆர்வத்துடன் கலந்துகொண்டார்.

    தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம், முத்தலாங்குறிச்சி ஆகிய பகுதியில் வெள்ளம் சூழ்ந்ததால், வெளியே வரமுடியாமல் தத்தளித்த நூற்றுக்கணக்கான மக்களை படகுகள் உதவியுடன் மீட்டு வந்தார்.

    மேலும் அவர், ஸ்ரீவைகுண்டம் பகுதியில் படகுகள் கூட செல்ல முடியாத நிலையில் 20 கிராமங்கள் உள்ளதாகவும், அவர்களை மீட்பது சற்று சவாலாக இருப்பதாகவும், அங்குள்ள மக்கள் சாப்பாடு கூட கிடைக்காமல் தத்தளித்து வருவதாகவும் அவர்களை விரைவில் மீட்கும் நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.

    இரவு முழுக்க மீட்புப் படையுனருடன் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட அவர், எக்ஸ் தளம் வாயிலாகவும் மீட்பு பணிகள் குறித்த விவரங்களை பகிர்ந்து வருகிறார்.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    கருங்குளம் பஸ் ஸ்டாப்பில் சிக்கியிருந்த 60 க்கும் மேற்பட்டோர் மீட்கபட்டுள்ளனர் . முத்தலாங்குறிச்சி மக்களும் மீட்கபட்டுள்ளனர் .வெள்ளத்தின் வேகம் குறையாமல் இருப்பதால் அடுத்த கிராமங்களுக்குள் நுழைவது கடினமாக இருக்கிறது… நன்றாக விடியும்வரை மக்கள் தைரியமாகவும் பாதுகாப்பாகவும்… pic.twitter.com/EKBQU9zscj

    — Mari Selvaraj (@mari_selvaraj) December 19, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    வெள்ளம்
    இயக்குனர்
    தூத்துக்குடி
    தமிழ்நாடு

    சமீபத்திய

    ஐபிஎல் 2025க்கு பிறகு எம்எஸ் தோனி விளையாடுவது சந்தேகம்; முன்னாள் எஸ்ஆர்எச் பயிற்சியாளர் கருத்து எம்எஸ் தோனி
    சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் பாகிஸ்தானுக்கு அடுத்த அடி; ரன்பீர் கால்வாயின் நீளத்தை இரட்டிப்பாக்க இந்தியா பரிசீலனை சிந்து நதி நீர் ஒப்பந்தம்
    இறந்து பிறந்த குழந்தையை மருத்துவமனை ஃப்ரீசரில் விட்டுச் சென்ற பெண்ணுக்கு சிறை தண்டனை; எங்கே தெரியுமா? தைவான்
    இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய ஏ கிரிக்கெட் அணி அறிவிப்பு; கேப்டனாக அபிமன்யு ஈஸ்வரன் தேர்வு இந்திய கிரிக்கெட் அணி

    வெள்ளம்

    கனமழையை மாநில பேரிடராக அறிவித்தது இமாச்சல்: 5 நாட்களில் 77 பேர் பலி  ஹிமாச்சல பிரதேசம்
    லிபியா: நாட்டையே திருப்பி போட்ட வெள்ளத்தால் 2000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சோகம் லிபியா
    சிக்கிமில் திடீர் வெள்ளம்: 23 ராணுவ வீரர்கள் மாயம் சிக்கிம்
    சிக்கிம் திடீர் வெள்ளபெருக்கு: 14 பேர் மரணம், 102 பேர் மாயம்  சிக்கிம்

    இயக்குனர்

    இயக்குனர் அமீர்- ஞானவேல் ராஜா சர்ச்சை குறித்து சுதா கொங்கரா கருத்து கார்த்தி
    பணத்துக்காக "படைப்புக்கு" துரோகம் செய்பவரல்ல அமீர்- ஞானவேல் ராஜா பேச்சுக்கு பொன்வண்ணன் கண்டனம் சினிமா
    அமீர்- ஞானவேல் ராஜா சர்ச்சையால், வெற்றிமாறனின் வாடிவாசலுக்கு சிக்கல்? நடிகர் சூர்யா
    'பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்' - இயக்குனர் கௌதமனின் பரபரப்பு தகவல்  இலங்கை

    தூத்துக்குடி

    தூத்துக்குடியில் ரூ.200க்கு பதிலாக வெறும் ரூ.20 அளித்த ஏடிஎம் - வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி மாவட்ட செய்திகள்
    தமிழகத்தில் உலக சிட்டுக்குருவிகள் தினம் கொண்டாட்டம் தமிழ்நாடு
    வீடியோ: ஆசிரியரை துரத்தி துரத்தி அடித்த 7 வயது சிறுவனின் பெற்றோர் தமிழ்நாடு
    தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவிற்கு ஒருவர் பலி கொரோனா

    தமிழ்நாடு

    தீவிரமடைந்தது 'மிக்ஜம்' புயல்: 12 தமிழக மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை  வங்க கடல்
    இந்தியாவின் மூன்றாவது பெண் கிராண்ட்மாஸ்டர் ஆனார் வைஷாலி ரமேஷ்பாபு கிராண்ட்மாஸ்டர்
    புதுச்சேரியில் உள்ள கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு  புதுச்சேரி
    திருவள்ளூரில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு  புயல் எச்சரிக்கை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025