சச்சின்- காம்ப்ளி நட்பு பற்றிய கிரிக்கெட் கதையை படமாக்கும் கௌதம் வாசுதேவ் மேனன்
சச்சின் டெண்டுல்கர் மற்றும் வினோத் காம்ப்ளி வாழ்க்கையால் ஈர்க்கப்பட்ட கிரிக்கெட் கதையை உருவாக்கி வருவதாக இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பை ஒருநாள் தொடரில், இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் அரையிறுதி போட்டி, மும்பை வான்கடே மைதானத்தில் நடந்து வருகிறது. இப்போட்டியின் வர்ணனையாளராக ஸ்டார் ஸ்போர்ட்ஸ்1 தமிழ் தொலைக்காட்சியில் கௌதம் மேனன் பங்கேற்றார். அப்போது, சக வர்ணனையாளரான ஆர்ஜே பாலாஜி, கௌதம் மேனனிடம், பல வித்தியாசமான கதைகளை கொண்ட படங்களை இயக்கி வரும் அவர், ஏன் கிரிக்கெட் தொடர்பான படங்களை இயக்கவில்லை என கேட்டார்.
துருவ நட்சத்திரம் ப்ரோமோஷன்காக வர்ணனையாளராக மாறிய ஜிவிஎம்
இதற்கு பதில் அளித்த GVM, "மாவட்டத்திலிருந்து சர்வதேச அளவிலான கிரிக்கெட்டுக்கு செல்லும் இரண்டு இளைஞர்களை மையமாக வைத்து ஒரு திரைப்படத்திற்கான ஸ்கிரிப்டை நாங்கள் உருவாக்குகிறோம்" "இது கிரிக்கெட் வீரர்கள் சச்சின் மற்றும் காம்ப்ளி வாழ்க்கையால் ஈர்க்கப்பட்டது. ஆனால் தமிழ்நாட்டை அடிப்படையாகக் கொண்டது. இது கிரிக்கெட்டை விட நட்பைப் பற்றியது" என தெரிவித்தார். கௌதம் மேனன் இயக்கத்தில், விக்ரம், ரிது வர்மா, பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட ஒரு நடிப்பில் உருவாகியுள்ள துருவநட்சத்திரம் திரைப்படத்தின் பிரமோஷன் பணிகளுக்காக, ஸ்டார் ஸ்போர்ட்ஸ்1 தமிழ் தொலைக்காட்சியில், GVM வர்ணனையாளராக பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.