NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / செங்கல்பட்டு நீதிமன்றத்தில் யாஷிகா ஆனந்த் நேரில் ஆஜர்
    அடுத்த செய்திக் கட்டுரை
    செங்கல்பட்டு நீதிமன்றத்தில் யாஷிகா ஆனந்த் நேரில் ஆஜர்
    செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான யாஷிகா ஆனந்த்

    செங்கல்பட்டு நீதிமன்றத்தில் யாஷிகா ஆனந்த் நேரில் ஆஜர்

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 25, 2023
    03:31 pm

    செய்தி முன்னோட்டம்

    இரு ஆண்டுகளுக்கு முன்னர், ECR -இல் அனுமதிக்கப்பட்ட வேகத்தையும் தாண்டி, வாகனத்தை ஒட்டி, விபத்து ஏற்படுத்திய குற்றத்துக்காக, நடிகை யாஷிகாவின் மீது கிரிமினல் வழக்கு பதியப்பட்டு, அது செங்கல்பட்டு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

    சென்ற மாதம், யாஷிகா அந்த வழக்கின் விசாரணைக்கு ஆஜர் ஆகாத நிலையில், அவருக்கு சம்மன் பிறப்பித்த நீதிமன்றம், அடுத்த விசாரணைக்கும் யாஷிகா வரவில்லையென்றால், அவரை கைது செய்ய உத்தரவிட்டிருந்தது.

    உடனே, அடுத்த விசாரணைக்கு நேரில் ஆஜர் ஆனார் யாஷிகா. அதை தொடர்ந்து வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

    இந்நிலையில், அந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றதாகவும், அதற்காக யாஷிகா தவறாமல் நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளார். எனினும், வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வரும் ஜூலை 27ம் தேதி நடைபெறும் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

    card 2

    விபத்தில் மரணம் அடைந்த யாஷிகாவின் தோழி

    சம்பவம் நடந்த அன்று இரவு பார்ட்டி முடித்துவிட்டு, நடிகை யாஷிகா ஆனந்த், தனது நண்பர்களுடன், காரில் பயணம் செய்த போது, மாமல்லபுரம் அருகே உள்ள சூளேரிக்காடு பகுதியில், கார் கட்டுப்பாட்டை இழந்து, கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    அந்த விபத்தில், யாஷிகாவின் தோழி வள்ளி செட்டி என்பவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    சீட் பெல்ட் அணியாத காரணத்தால், அவர் காரின் கண்ணாடியை உடைத்துக்கொண்டு, வெளியே வந்து விழுந்தார் என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினர்.

    அதோடு, காரில் உடன் பயணித்த மேலும் இரு நபர்களும், யாஷிகாவிற்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இந்த விபத்தின் போது, காரை ஓடியது யாஷிகா என்பதால், அவரின் மேல் வழக்கு பதியப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கோலிவுட்
    தமிழ் நடிகை

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    கோலிவுட்

    800 படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் வெளியானது! ஹீரோ யார் தெரியுமா?  விஜய் சேதுபதி
    குந்தவைக்கும், அருள்மொழிக்கும், ட்விட்டர் நிறுவனம் வைத்த ஆப்பு த்ரிஷா
    சின்ன கலைவாணர் விவேக்கின் 2ஆம் ஆண்டு நினைவு நாள் பொழுதுபோக்கு
    நடிகர் மாதவனின் மகன் வேதாந்த், சர்வதேச நீச்சல் போட்டியில், 5 தங்கப்பதக்கங்கள் வென்றார்; பிரபலங்கள் வாழ்த்து பாலிவுட்

    தமிழ் நடிகை

    அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்ட தமிழ் திரைப்பட நடிகைகள் சமந்தா ரூத் பிரபு
    திரைப்பட நடிகைகளை குறி வைத்து ட்ரோல் செய்பவர்களுக்கு, திவ்யா ஸ்பந்தனா பதிலடி சமந்தா ரூத் பிரபு
    தமன்னாவின் பிறந்தநாள்: 15 வயதிலேயே திரையுலகிற்கு வந்த நடிகை தமன்னா பற்றிய சுவாரசிய தகவலுடன்..! பிறந்தநாள்
    "பணம், பெயர், புகழை விட நடிப்பு தான் முக்கியம்" சமந்தா பேட்டி சமந்தா ரூத் பிரபு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025