
"விஜய்-யின் ஆதரவு மற்றும் ஈடுபாடு இல்லாமல் கட்டிடம் முழுமையடையாது": நடிகர் விஷால் பதிவு
செய்தி முன்னோட்டம்
நடிகர் விஜய் தென்னிந்திய நடிகர் சங்க கட்டுமான பணிகளுக்காக, ரூபாய் 1 கோடி நிதி உதவி வழங்கி இருந்தார்.
அதற்கு நடிகர் சங்கத்தின் சார்பாக நன்றி தெரிவித்திருந்த நிலையில், நேற்று நடிகர் சங்க செயலாளர் நடிகர் விஷால், தனிப்பட்ட முறையில் மீண்டும் தனது நன்றிகளை தெரிவித்துள்ளார்.
இது குறித்து தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள விஷால்,"நடிகர் சங்க கட்டிடப் பணிகளுக்கு ஒரு கோடி நன்கொடை அளித்ததற்காக எனக்கு பிடித்த நடிகர் தளபதி விஜய் அண்ணனைப் பற்றி பேசுகிறேன். ஆம் உங்கள் ஆதரவு மற்றும் ஈடுபாடு இல்லாமல் கட்டிடம் முழுமையடையாது என்பதை நாங்கள் எப்போதும் அறிவோம். இப்பொழுது அதை சீக்கிரம் நடக்கும்படி எங்களை தூண்டிவிட்டுள்ளீர்கள் அண்ணா. உங்கள் பாணியில்,'நன்றி நண்பா' " என்று கூறியுள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
நன்றி கூறிய விஷால்
@actorvijay Thank u means just two words but means a lot to a person wen he does it from his heart. Well, am talking about my favourite actor our very own #ThalapathiVijay brother for DONATING ONE CRORE towards our #SIAA #NadigarSangam building work. God bless u.
— Vishal (@VishalKOfficial) March 12, 2024
Yes we always… pic.twitter.com/EzJtoJaahu