NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / மத்திய அரசின் உடனடி நடவடிக்கைக்கு நன்றி தெரிவித்துள்ளார் நடிகர் விஷால்
    அடுத்த செய்திக் கட்டுரை
    மத்திய அரசின் உடனடி நடவடிக்கைக்கு நன்றி தெரிவித்துள்ளார் நடிகர் விஷால்
    மத்திய அரசின் உடனடி நடவடிக்கைக்கு நன்றி தெரிவித்துள்ளார் நடிகர் விஷால்

    மத்திய அரசின் உடனடி நடவடிக்கைக்கு நன்றி தெரிவித்துள்ளார் நடிகர் விஷால்

    எழுதியவர் Nivetha P
    Sep 30, 2023
    12:49 pm

    செய்தி முன்னோட்டம்

    நடிகர் விஷால் நடித்து அண்மையில் வெளியான திரைப்படம் 'மார்க் ஆண்டனி'.

    இந்நிலையில், இப்படத்தின் ஹிந்தி பதிப்பினை திரையிட மும்பை சென்சார் போர்டு அதிகாரிகள் தன்னிடம் ரூ.6.5 லட்சம் லஞ்சம் பெற்றதாக விஷால் ஓர் வீடியோவினை வெளியிட்டிருந்தார்.

    இதனையடுத்து மத்தியத்தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறையின் மூத்த அதிகாரி தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

    விசாரணையில், திரைப்படங்களின் தணிக்கையில் வெளிப்படைத்தன்மையினை கடைபிடிக்கவே இ-சினிபிரமான் என்னும் இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு வருகிறது.

    ஆனால் பல தயாரிப்பாளர்கள் இடைத்தரகர்களை அணுகுகிறார்கள்.

    இவ்வாறு தணிக்கை வாரியத்தின் பெயரில் யாரேனும் பணம் கேட்டால் உடனடியாக புகார் அளிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது என்று தணிக்கை வாரியம் விளக்கமளித்துள்ளது.

    அதேபோல் விஷாலின் புகார் நிரூபிக்கப்படும் பட்சத்தில், சம்மந்தப்பட்ட அதிகாரிகள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

    நன்றி 

    பிரதமர் மற்றும் மஹாராஷ்ட்ரா மாநில முதல்வருக்கு நன்றி கூறிய விஷால் 

    இதுகுறித்து விஷால் தனது எக்ஸ் பக்கத்தில், "ஊழல் விவகாரத்தில் மத்திய அரசு மேற்கொண்ட உடனடி நடவடிக்கைக்கு எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். ஊழலில் ஈடுபடும் அல்லது ஊழலின் ஒருபகுதியாக செயல்படும் ஒவ்வொரு அரசாங்க அதிகாரிக்கும் இது ஒரு எடுத்துக்காட்டு"என்றும்,

    "ஊழலின் படிகள் அல்ல. தேசத்திற்கு சேவைச்செய்வதற்காக நேர்மையான பாதையில் பயணிக்கவும் இது ஓர் எடுத்துக்காட்டாக அமையும் என்று நம்புகிறேன்"என்று குறிப்பிட்டுள்ளார்.

    தொடர்ந்து, "ஊழலால் பாதிக்கப்பட்ட என்னைப்போன்ற சாமானியனுக்கும் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை தற்போது எனக்குள் எழுந்துள்ளது" என்றும் கூறியுள்ளார்.

    மேலும், "எனது பிரதமர் நரேந்திர மோடி, மஹாராஷ்ட்ரா மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் இந்த உடனடி நடவடிக்கைக்கு காரணமாக அனைவருக்கும் மீண்டும் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்"என்றும் அவர் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    விஷால்
    நரேந்திர மோடி
    மத்திய அரசு

    சமீபத்திய

    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ
    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்
    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்

    விஷால்

    இயக்குநர் ஹரி-இசைமைப்பாளர் DSP கூட்டணியில் நடிகர் விஷாலின் 34வது படம் இசையமைப்பாளர்
    நடிகை லட்சுமி மேனனுடன் திருமணம் பற்றி மனம் திறந்தார் விஷால்  வைரலான ட்வீட்
    'மார்க் ஆண்டனி' படத்தின் 2ம் சிங்கிள் 'ஐ லவ் யூ டி' - இணையத்தில் ரிலீஸ் பாடல் வெளியீடு
    மார்க் ஆண்டனி: சில்க் ஸ்மிதா வேடத்தில் நடிக்கும் நடிகை யார் எனக்குழம்பும் ரசிகர்கள் எஸ்.ஜே.சூர்யா

    நரேந்திர மோடி

    அமெரிக்கா புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி  இந்தியா
    குடியரசு தலைவர் திரௌபதி முர்முவின் பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து  இந்தியா
    பிரதமர் மோடிக்கு அமெரிக்காவில் பெரும் வரவேற்பு  இந்தியா
    ஐநா சபை நடத்திய யோகா நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார் பிரதமர் மோடி சர்வதேச யோகா தினம்

    மத்திய அரசு

    FAME II திட்டத்தின் கீழ் பெற்ற மானியத்தை திருப்பியளித்த ரிவோல்ட், ஏன்? எலக்ட்ரிக் பைக்
    மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி விருது 2022 - முதலிடம் பிடித்த கோவை  கோவை
    புழுங்கல் அரிசி மீதான ஏற்றுமதி வரியை 20% அதிகரித்தது மத்திய அரசு இந்தியா
    புழுங்கல் அரிசியை தொடர்ந்து பாஸ்மதி அரிசி ஏற்றுமதிக்கும் கட்டுப்பாடு விதித்தது மத்திய அரசு இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025