ட்விட்டருக்கு டாடா சொன்ன நடிகர் சிவகார்த்திகேயன்
நடிகர் சிவகார்த்திகேயன், நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில், தான் சிறிது காலம் ட்விட்டர் தளத்தில் இருந்து விடைபெறுவதாகவும், தனது படங்களை பற்றி அனைத்து முக்கிய அறிவிப்புகளையும், தனது குழுவினர் அறிவிப்பார்கள் எனவும் பதிவிட்டுள்ளார். இது அவரின் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சிவகார்த்திகேயன் எதற்காக இந்த திடீர் முடிவை எடுத்தார் என்பது இன்னும் தெரியவில்லை. சிவகார்த்திகேயன், கடைசியாக தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில், 'பிரின்ஸ்' திரைப்படத்தில் நடித்திருந்தார். படம் பரவலான வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படம், தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியானது. அதே பாணியில், சிவகார்த்திகேயன் தற்போது நடித்து வரும் 'மாவீரன்' என்ற திரைப்படம் நடித்து வருகிறார். அந்த படத்தை, தேசிய விருது வென்ற மடோன் அஸ்வின் இயக்குகிறார்.