NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / சகோதரர் ராம்குமார் பெற்ற கடனுக்கு நான் பொறுப்பல்ல: நடிகர் பிரபு வாதம்
    சுருக்கம் செய்ய
    அடுத்த செய்திக் கட்டுரை
    சகோதரர் ராம்குமார் பெற்ற கடனுக்கு நான் பொறுப்பல்ல: நடிகர் பிரபு வாதம்
    அன்னை இல்லத்தை ஜப்தி செய்வதை எதிர்த்து நடிகர் பிரபு வாதம்

    சகோதரர் ராம்குமார் பெற்ற கடனுக்கு நான் பொறுப்பல்ல: நடிகர் பிரபு வாதம்

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 03, 2025
    06:25 pm

    செய்தி முன்னோட்டம்

    நடிகர் சிவாஜி கணேசனின் பேரனும், தயாரிப்பாளர் ராம்குமாரின் மகனும், நடிகருமான துஷ்யந்த் மற்றும் அவரது மனைவி அபிராமி பங்குதாரர்களாக உள்ள ஈசன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்த 'ஜகஜால கில்லாடி' படத்திற்காக, தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திடம் ரூ.3 கோடிக்கும் மேலே கடன் பெற்றிருந்தது.

    அந்த கடனை திருப்பி செலுத்தாததால், வட்டி உட்பட 9 கோடி 39 லட்சம் ரூபாயை செலுத்துமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

    இதற்காக, 2024 மே 4ஆம் தேதி மத்தியஸ்தர், படத்தின் அனைத்து உரிமைகளையும் தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு ஒப்படைக்க உத்தரவிட்டார்.

    அதன் பிறகு, பட உரிமைகளை ஒப்படைக்காததால், தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனம் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்து, பொது ஏலம் விட உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

    சிவாஜி வீடு

    இந்த வழக்கில் சிவாஜியின் வீட்டை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது

    இந்த வழக்கின் விசாரணையில், நீதிமன்றம் தி.நகரில் உள்ள சிவாஜி கணேசனின் வீட்டை (அன்னை இல்லம்) ஜப்தி செய்ய உத்தரவிட்டது.

    இந்த உத்தரவை ரத்து செய்ய, நடிகர் பிரபு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

    அதேபோல, ராம்குமாரும், தன்னுடைய நிறுவனத்திற்கும், பிரபுவிற்கு சம்மந்தமில்லை எனவும், அந்த வீடு பிரபுவிற்கு சொந்தமானது எனவும் கூறப்பட்டது.

    இந்த நிலையில் இன்று பிரபு தரப்பு, இது மூன்றாம் நபரின் சொத்து எனவும், ஜப்தி உத்தரவை நீக்க வேண்டும் என வாதிட்டது.

    மேலும், பிரபு, தன் சகோதரர் ராம்குமார் பெற்ற 3 கோடி ரூபாய் கடனுக்காக தன்னுடைய 150 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை முடக்குவதை எதிர்த்தும் வாதிட்டார்.

    வாதம்

    நீதிமன்றத்தில் பிரபுவின் வாதம்

    பிரபுவின் வாதத்தை கேட்ட நீதிபதி,"ராம்குமார் உங்கள் சகோதரர் தானே? நீங்கள் ஒரே வீட்டில் வாழ்ந்து வருகிறீர்களா? கடனை நீங்கள் செலுத்திவிட்டு பின்னர் அவரிடம் இருந்து திரும்பப் பெறலாமே?" எனக் கேட்டார்.

    இதற்குப் பிரபுவின் வழக்கறிஞர், "ராம்குமார் பலரிடம் கடன் வாங்கியுள்ளார், எனவே என்னால் இந்த வழியில் உதவ முடியாது" எனக் கூறினார்.

    இதனையடுத்து நீதிமன்றம் வழக்கின் விசாரணையை ஏப்ரல் 8ஆம் தேதி வரை தள்ளிவைத்தது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சிவாஜி கணேசன்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    சிவாஜி கணேசன்

    நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 97வது பிறந்த நாள்: அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த முதலமைச்சர் ஸ்டாலின் முதல் அமைச்சர்
    சிவாஜி- MGR நட்பு: திரையில் போட்டியாளர்கள்; நிஜத்தில் இணைபிரியா நண்பர்கள் எம்ஜிஆர்
    பழம்பெரும் நடிகை புஷ்பலதா வயதுமூப்பினால் காலமானார் நடிகைகள்
    கடன் தொகையை வசூலிக்க சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு சென்னை உயர் நீதிமன்றம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025