NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / தீவிர வறுமைக்கோட்டிற்கான வருமான அளவீடுகளை உயர்த்தியது உலக வங்கி; புதிய அளவீடு என்ன?
    அடுத்த செய்திக் கட்டுரை
    தீவிர வறுமைக்கோட்டிற்கான வருமான அளவீடுகளை உயர்த்தியது உலக வங்கி; புதிய அளவீடு என்ன?
    தீவிர வறுமைக்கோட்டிற்கான வருமான அளவீடுகளை உயர்த்தியது உலக வங்கி

    தீவிர வறுமைக்கோட்டிற்கான வருமான அளவீடுகளை உயர்த்தியது உலக வங்கி; புதிய அளவீடு என்ன?

    எழுதியவர் Sekar Chinnappan
    Jun 06, 2025
    06:49 pm

    செய்தி முன்னோட்டம்

    உலக வங்கி தீவிர வறுமைக்கான உலகளாவிய அளவுகோலை உயர்த்தியுள்ளது. புதிய அளவுகோல்களின்படி, குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்கு ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு $2.15 இல் இருந்து $3 ஆக அதிகரித்துள்ளது.

    குறைந்த நடுத்தர வருமான நாடுகளுக்கான வறுமை வரம்பு $3.65 இலிருந்து $4.20 ஆகவும், உயர் நடுத்தர வருமான நாடுகளுக்கு $6.85 இலிருந்து $8.40 ஆகவும் அதிகரித்துள்ளது.

    மேல்நோக்கிய திருத்தம் இருந்தபோதிலும், இது உலகின் ஏழ்மையான நாடுகளில் அடிப்படை உயிர்வாழ்வதற்கான செலவைக் குறிக்கும் குறைந்தபட்ச வரம்பாகவே உள்ளது என்று உலக வங்கி வலியுறுத்தியது.

    இந்த அளவுகோல்கள் முழுமையான வறுமையில் வாழும் மக்களின் பங்கைத் தீர்மானிக்கப் பயன்படுத்தப்படுகின்றன.

    மேலும் விலை நிலைகள் மற்றும் நுகர்வு முறைகளில் ஏற்படும் மாற்றங்களை பிரதிபலிக்க அவ்வப்போது சரிசெய்யப்படுகின்றன.

    திருத்தங்கள்

    உலக வங்கியின் வறுமைக்கோடு அளவீட்டில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள்

    2001 ஆம் ஆண்டு முதல் திருத்தத்திற்குப் பிறகு, 2008, 2015 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் திருத்தங்கள் செய்யப்பட்டன.

    1990 முதல் 1.5 பில்லியன் மக்கள் தீவிர வறுமையிலிருந்து மீட்கப்பட்டிருந்தாலும், கடந்த பத்தாண்டுகளில் வறுமைக் குறைப்பு விகிதம் குறைந்துள்ளதாக அறிக்கை குறிப்பிட்டது.

    மந்தமான பொருளாதார வளர்ச்சி, அதிகரித்து வரும் கடன், தொடர்ச்சியான மோதல்கள் மற்றும் காலநிலை தொடர்பான அதிர்ச்சிகள் போன்ற காரணிகள் மேலும் முன்னேற்றத்தைத் தடுத்தன.

    தற்போதைய நிலவரப்படி, உலகளவில் 808 மில்லியன் மக்கள் இன்னும் தீவிர வறுமையில் வாழ்கின்றனர்.

    எனினும், இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்துள்ளது. 2011-12 மற்றும் 2022-23 க்கு இடையில், 171 மில்லியன் இந்தியர்கள் தீவிர வறுமையிலிருந்து வெளியேறினர்.

    இந்தக் காலகட்டத்தில் இந்தியா குறைந்த-நடுத்தர வருமான வகையிலும் முன்னேறியுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உலக வங்கி
    பொருளாதாரம்
    உலகம்
    உலக செய்திகள்

    சமீபத்திய

    தீவிர வறுமைக்கோட்டிற்கான வருமான அளவீடுகளை உயர்த்தியது உலக வங்கி; புதிய அளவீடு என்ன? உலக வங்கி
    டி20 உலகக்கோப்பை பரிசுத் தொகையை வீரர்களுக்கு தராமல் இழுத்தடிக்கும் ஓமன் கிரிக்கெட் வாரியம்; பகீர் குற்றச்சாட்டு கிரிக்கெட்
    வெளிப்படையான வக்ஃப் சொத்து மேலாண்மைக்கான UMEED போர்ட்டலை தொடங்கியது மத்திய அரசு வக்ஃப் வாரியம்
    பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப் தெரியாம சொல்லிட்டார்; சிம்லா ஒப்பந்தம் நடைமுறையில் உள்ளதாக பாகிஸ்தான் விளக்கம் பாகிஸ்தான்

    உலக வங்கி

    உலக வங்கியின் புதிய நிர்வாக அதிகாரியை அறிவித்த ஜோ பைடன் அமெரிக்கா
    டெல்லிக்கு வந்திருந்த உலக வங்கியின் அடுத்த தலைவர் அஜய் பங்காவுக்கு கொரோனா இந்தியா
    உலக வங்கியின் தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவாரா அஜய் பங்கா இந்தியா
    உலக வங்கியின் அடுத்த தலைவர்: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அஜய் பங்கா! உலகம்

    பொருளாதாரம்

    இந்தியாவின் மதிப்பை ஓவர் வெயிட்டிலிருந்து நடுநிலைக்கு குறைத்து எச்எஸ்பிசி அறிவிப்பு இந்தியா
    2025 இல் இந்தியப் பொருளாதாரம் பலவீனமடையும் என்று சர்வதேச நாணய நிதியம் கணிப்பு இந்தியா
    இந்தியாவின் வணிக செயல்பாடு ஜனவரியில் ஒரு வருடத்தில் இல்லாத அளவிற்கு குறைவு இந்தியா
    பத்ம பூஷண் விருது பெற்ற பிபேக் டெப்ராய்: ஒரு தொலைநோக்கு பொருளாதார நிபுணரின் பயணம் வணிக புதுப்பிப்பு

    உலகம்

    அணுகுண்டு போட்டுவிடுவார்களாம்; ரஷ்யாவிற்கான பாகிஸ்தான் தூதர் இந்தியாவிற்கு மிரட்டல் பாகிஸ்தான்
    அமெரிக்காவில் 60 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன பெண் கண்டுபிடிப்பு; உதவிய டிஎன்ஏ தொழில்நுட்பம் அமெரிக்கா
    14 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பலி; ஸ்கெட்ச் போட்டு தூக்கிய பலோச் விடுதலை ராணுவம் பலுசிஸ்தான்
    அமெரிக்காவில் முதல்முறையாக இரண்டாம் உலகப்போர் வெற்றி தின கொண்டாட்டம்; அதிபர் டிரம்ப் அறிவிப்பு அமெரிக்கா

    உலக செய்திகள்

    பாகிஸ்தான் ராணுவத்திற்குள் வெடித்தது கலகம்? தளபதி அசிம் முனீர் கைது செய்யப்பட்டதாக தகவல் பாகிஸ்தான் ராணுவம்
    சுதந்திர நாடாக அறிவித்துக் கொண்டது பலுசிஸ்தான்; இந்தியா மற்றும் ஐநா அங்கீகரிக்க கோரிக்கை பலுசிஸ்தான்
    பாகிஸ்தானின் ஆபத்பாந்தவன் அமெரிக்கா இப்போது உதவ மறுப்பது ஏன்? பாகிஸ்தான்
    ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியை தடை செய்தது பங்களாதேஷ் இடைக்கால அரசு; காரணம் என்ன? ஷேக் ஹசீனா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025