NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / 'உண்மை வென்றது': செபி விசாரணையை மாற்ற உச்ச நீதிமன்றம் மறுத்ததை அடுத்து கௌதம் அதானி பேச்சு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    'உண்மை வென்றது': செபி விசாரணையை மாற்ற உச்ச நீதிமன்றம் மறுத்ததை அடுத்து கௌதம் அதானி பேச்சு 

    'உண்மை வென்றது': செபி விசாரணையை மாற்ற உச்ச நீதிமன்றம் மறுத்ததை அடுத்து கௌதம் அதானி பேச்சு 

    எழுதியவர் Sindhuja SM
    Jan 03, 2024
    03:02 pm

    செய்தி முன்னோட்டம்

    அதானி-ஹிண்டன்பர்க் வழக்கில் செபியின் விசாரணையை சிறப்பு புலனாய்வுக் குழுவிற்கு மாற்ற உச்ச நீதிமன்றம் இன்று மறுத்ததை அடுத்து, "உண்மை வென்றது" என்று கூறி நீதிமன்றத்தின் முடிவை கௌதம் அதானி பாராட்டினார்.

    இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் அவர், "மாண்புமிகு சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பால் உண்மை வென்றுவிட்டது. வாய்மையே வெல்லும். எங்களுக்கு ஆதரவாக நின்றவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவின் வளர்ச்சிக் கதைக்கு எங்களது பணிவான பங்களிப்பு தொடரும். ஜெய் ஹிந்த்." என்று கூறியுள்ளார்.

    அதானி-ஹிண்டன்பர்க் வழக்கை, பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம்(செபி) விசாரிப்பது தொடர்பான பிரச்சனையில் தலையிட மறுத்த உச்ச நீதிமன்றம், வழக்கை சிறப்பு புலனாய்வு குழுவிற்கு மாற்ற முகாந்திரம் இல்லை என இன்று தெரிவித்தது.

     ,ன் ,விசிட்ஸ்

    அதானி-ஹிண்டன்பர்க் பிரச்சனை 

    அதானி குழும நிறுவனங்கள் பல்வேறு குளறுபடிகளில் ஈடுபடுவதாகக் கூறி இந்த ஆண்டு ஜனவரி மாதம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டு ஆராய்ச்சி நிறுவனமான ஹின்டன்பர்க்.

    அந்த அறிக்கையின் அடிப்படையில் அதானி குழுமங்கள் மீது விசாரணை நடத்த வேண்டும் என பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், ஹின்டன்பர்க் அறிக்கையில் உள்ள உண்மைத்தன்மை குறித்து விசாரணை மேற்கொள்ள இந்தியாவின் பங்கு மற்றும் பரிவர்த்தனை ஆணையமான செபிக்கு உச்சநீதிமன்றம் உத்தவிட்டது.

    ஆனால், செபியின் விசாரணை மீது நம்பிக்கை இல்லாத சிலர், இந்த பிரச்சனையை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர்.

    அந்த கோரிக்கையை இன்று உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அதானி
    இந்தியா
    உச்ச நீதிமன்றம்
    செபி

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    அதானி

    கவுதம் அதானியை பின்தள்ளி இந்திய பணக்காரர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்தார் முகேஷ் அம்பானி முகேஷ் அம்பானி
    மஹுவா மொய்த்ரா கேள்வி கேட்க பணம் வாங்கியது உண்மைதான்- தொழிலதிபர் அதிரடி பிரதமர்
    பங்குச்சந்தையில் 20% வரை உயர்வைச் சந்தித்து வரும் அதானி குழுமப் பங்குகள் பங்குச் சந்தை
    ஏற்றத்தில் அதானி குழுமப் பங்குகள்; உயர்ந்த கவுதம் அதானியின் சொத்து மதிப்பு பங்குச் சந்தை

    இந்தியா

    ரூ.6 லட்சத்திற்கும் குறைவான விலையில் புது கார் வாங்க முடியுமா? உங்களுக்கான பதில் கார்
    இந்தியாவில் மேலும் 412 பேருக்கு கொரோனா பாதிப்பு: 3 பேர் பலி  கொரோனா
    நிர்மலா சீதாராமனை குறிவைத்து RBIக்கு வெடிகுண்டு மிரட்டல்: மின்னஞ்சலின் முழு விளக்கம் இதோ   ரிசர்வ் வங்கி
    டெல்லி குண்டுவெடிப்பு: இந்தியாவில் உள்ள தனது மக்களுக்கு இஸ்ரேல் அறிவுரை  இஸ்ரேல்

    உச்ச நீதிமன்றம்

    'அரசியல் பழிவாங்கலுக்கு இது நேரமில்லை': டெல்லி காற்று மாசுபாடு குறித்து உச்ச நீதிமன்றம் கருத்து  டெல்லி
    நாடு முழுவதும் பட்டாசுகளுக்கு தடை: எந்த வகை பட்டாசுகளுக்கும் அனுமதி இல்லையா? தீபாவளி
    மோசமடையும் காற்று மாசு: பிற மாநில டாக்ஸிகள் டெல்லிக்குள் நுழைய தடை  டெல்லி
    நவம்பர் 20-21 தேதிகளில் டெல்லியில் செயற்கை மழை: ஐஐடி திட்டம்  டெல்லி

    செபி

    சஹாரா குழுமத்தின் தலைவர் சுப்ரதா ராய் மரணம்: 3 கோடி மக்களின் 25,000 கோடி ரூபாயின் நிலைமை என்ன? இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025