NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / ஆதார் புதுப்பிப்புக்கான புதிய விதிகளை UIDAI வெளியிடுள்ளது
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஆதார் புதுப்பிப்புக்கான புதிய விதிகளை UIDAI வெளியிடுள்ளது
    ஆதார் புதுப்பிப்புக்கான புதிய விதிகளை UIDAI வெளியிடுள்ளது

    ஆதார் புதுப்பிப்புக்கான புதிய விதிகளை UIDAI வெளியிடுள்ளது

    எழுதியவர் Venkatalakshmi V
    Jan 19, 2024
    02:36 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் தகவல்களைத் திருத்துவதற்கான வழிகாட்டுதல்களைப் புதுப்பித்துள்ளது.

    இந்த புதிய நடைமுறையினால், ஆதார் புதுப்பித்தல் எளிமையாகும் என மத்திய நிறுவனம் தெரிவித்துள்ளது.

    முந்தைய 2016 விதிகள்படி, ஆன்லைன் மூலம் முகவரி புதுப்பிப்புகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டன.

    மற்ற மாற்றங்களுக்கு, பதிவு மையங்களுக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் இருந்தது.

    இப்போது, ​​புதிய வழிகாட்டுதல்கள்படி, UIDAI இணையதளம், மொபைல் ஆப் அல்லது அருகிலுள்ள ஆதார் சேவை மையத்தை அணுகுவது ஆகிய மூன்று வழிகளில், ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் மூலமாக மாற்றங்களை அனுமதிக்கின்றன.

    இதற்காக UIDAI ஆனது ஆதார் பதிவு மற்றும் புதுப்பிப்புகளுக்கான புதிய படிவங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. பழைய படிவங்களை 1 முதல் 9 வரை வரிசைப்படுத்தியும் மாற்றியுள்ளது.

    card 2

    படிவ எண்கள் கூறுவது என்ன?

    இந்த எண்களால் வரிசைப்படுத்தப்பட்ட படிவங்கள் முறையே, வெவ்வேறு வயதுக் குழுக்கள், வசிப்பிட நிலைகள் மற்றும் வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு என பகுக்கப்பட்டுள்ளன.

    எடுத்துக்காட்டாக, படிவம் 1 என்பது 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய குடியுரிமை பெற்ற தனிநபர்கள் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கானது.

    அதே சமயம் படிவம் 2 என்பது இந்தியாவிற்கு வெளியே முகவரிச் சான்றுடன் இருக்கும் NRIகளுக்கானது.

    புதிய வழிகாட்டுதல்களின்படி, ஆதார் அட்டைதாரர்கள் தங்கள் ஆதார் எண் உருவாக்கப்பட்ட நாளிலிருந்து 10 ஆண்டுகளுக்குப் பிறகு தங்கள் தகவலைப் புதுப்பிக்க முடியும்.

    UIDAI இணையதளம் அல்லது மொபைல் ஆப் மூலமாகவோ அல்லது பதிவு மையத்தில் படிவத்தைச் சமர்ப்பிப்பதன் மூலமாகவோ ஆன்லைனில் இதைச் செய்யலாம்.

    card 3

    புதிய வழிகாட்டுதல்களில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள்

    புதிய வழிகாட்டுதல்படி, ஒரு நபரின் வயது ஆவணச் சான்று இல்லாமல் அல்லது தோராயமாக தெரியப்படுத்தினால், ஆதார் அட்டையில் பிறந்த ஆண்டு (தேதி மற்றும் மாதம் அல்ல) மட்டுமே அச்சிடப்படும்.

    ஆதார் பதிவு மற்றும் விவரங்களை புதுப்பித்தல் ஆகியவை ஆவண சரிபார்ப்பு அல்லது குடும்பத் தலைவர் (HoF) உறுதிப்படுத்துவதன் மூலம் செய்யப்படலாம்.

    பிந்தைய முறையைப் பயன்படுத்தினால், குடும்பத்தலைவர் அவர்களின் ஆதார் விவரங்களை வழங்கி, படிவம் 1இல் கையொப்பமிட வேண்டும்.

    NRI களுக்கு, செல்லுபடியாகும் இந்திய பாஸ்போர்ட் மட்டுமே அடையாளச் சான்றாக (POI) ஏற்றுக்கொள்ளப்படும்.

    மேலும், ஒரு NRI வெளிநாட்டின் மொபைல் எண்ணை வழங்கினால், படிவம் 1 வழிகாட்டுதலின்படி அந்த எண்ணுக்கு SMS எதுவும் அனுப்பப்படாது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஆதார் புதுப்பிப்பு

    சமீபத்திய

    நேற்றிரவு, இந்தியாவில் உள்ள 24 நகரங்களை குறிவைத்து 500 பாகிஸ்தான் ஆளில்லா விமானங்கள் தாக்குதல் எனத்தகவல் இந்தியா
    500 கிலோ எடையுள்ள விண்கலம் பூமியில் விழுந்து நொறுங்கு போகிறதாம்! பூமி
    கோடையில் சிறுநீரக கற்கள் ஏற்படும் அபாயம் அதிகம்; நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டியவை உடல் ஆரோக்கியம்
    நிம்மதியான தூக்கமின்றி தவிக்கிறீர்களா? உங்கள் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்த சில டிப்ஸ் தூக்கம்

    ஆதார் புதுப்பிப்பு

    50 ரூபாய் கட்டணம் செலுத்தி ஆதாரில் முகவரி மாற்றலாம் - புது வசதி அறிமுகம் இந்தியா
    பி.எம். கிசான் திட்டத்தின் 13வது தவணைத் தொகைக்கு ஆதார் இணைப்பு அவசியம் தமிழக அரசு
    தமிழ்நாடு-தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஆதாரை இணைப்பதில் சிக்கல் தமிழ்நாடு
    ஆதார் அட்டையில் பெயர் முகவரியை திருத்தம் செய்வது எப்படி? இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025