NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / இந்தியாவில் நுழைய தீவிரமாக களமிறங்கும் டெஸ்லா; ஆலையை அமைக்க நிலம் தேடுகிறது எனத்தகவல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியாவில் நுழைய தீவிரமாக களமிறங்கும் டெஸ்லா; ஆலையை அமைக்க நிலம் தேடுகிறது எனத்தகவல்
    இந்தியாவில் நுழைய தீவிரமாக களமிறங்கும் டெஸ்லா

    இந்தியாவில் நுழைய தீவிரமாக களமிறங்கும் டெஸ்லா; ஆலையை அமைக்க நிலம் தேடுகிறது எனத்தகவல்

    எழுதியவர் Venkatalakshmi V
    Feb 19, 2025
    09:06 am

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவில் மின்சார வாகன (EV) உற்பத்தி ஆலையை அமைக்க டெஸ்லா நிறுவனம் நிலத்தைத் தேடுகிறது என இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.

    இந்த போட்டியில் மகாராஷ்டிரா முன்னணி தேர்வாக இருப்பதாகவும் தி எகனாமிக் டைம்ஸ் (ET) அறிக்கை தெரிவிக்கிறது.

    டெஸ்லா நிறுவனம் சாத்தியமான இடங்களை மதிப்பீடு செய்யத் தொடங்கியுள்ளது மற்றும் மாநில அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது எனவும் கூறப்படுகிறது.

    அமெரிக்காவில் பிரதமர் நரேந்திர மோடியை எலான் மஸ்க் சந்தித்த பிறகு, மகாராஷ்டிரா நோக்கி தனது கவனத்தை திருப்பியுள்ளது டெஸ்லா.

    அறிக்கையின்படி, டெஸ்லா நிறுவனம் புனேவில் அலுவலகம் கொண்டிருப்பதால், மகாராஷ்டிரா தான் டெஸ்லாவின் விருப்பமான தேர்வாக உள்ளது. டெஸ்லாவின் பல சப்ளையர்களும் அந்த மாநிலத்தில்தான் உள்ளனர் என்பதால் விரிவாக்கத்திற்கான இயல்பான தேர்வாக அமைகிறது.

    புனே

    மஹாராஷ்டிராவில் ஏற்கனவே அமைந்திருக்கும் வாகன உற்பத்தியாளர் அலைகள்

    இந்த வகையில் மகாராஷ்டிர அரசு, புனேவுக்கு அருகில் அமைந்துள்ள சக்கன் மற்றும் சிகாலி அருகே இடங்களை டெஸ்லாவிற்கு வழங்குவதாக கூறியதாக அந்த செய்தி அறிக்கையில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.

    சக்கன், ஒரு முக்கிய ஆட்டோமொபைல் உற்பத்தி மையமாகும்.

    அங்கே ஏற்கனவே மெர்சிடிஸ் பென்ஸ், டாடா மோட்டார்ஸ், மஹிந்திரா & மஹிந்திரா, வோக்ஸ்வாகன் மற்றும் பஜாஜ் ஆட்டோ போன்ற நிறுவனங்கள் அமைந்துள்ளன.

    இருப்பினும், மகாராஷ்டிரா அதிகாரிகள் டெஸ்லா ஆலை அமைப்பதற்கான விவாதங்கள் இன்னும் நடந்து வருவதாகவும், இறுதி உடன்பாடு எட்டப்படவில்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளனர்.

    டெஸ்லா ஒரு முடிவை எடுப்பதற்கு முன் துறைமுகத்திற்கு அருகாமையில் இருப்பது போன்ற காரணிகளை கவனமாக மதிப்பீடு செய்து வருவதாகக் கூறப்படுகிறது.

    வேலை வாய்ப்பு

    ஆட்சேர்ப்பு நடவடிக்கையை தொடங்கிய டெஸ்லா

    ஒரு பெரிய முன்னேற்றமாக பார்க்கப்படும் நடவடிக்கையில், டெஸ்லா இந்தியாவில் ஆட்சேர்ப்பு நடவடிக்கையையும் தொடங்கியுள்ளது.

    இந்த நடவடிக்கையின் மூலம், டெஸ்லா நிறுவனம் சந்தையில் நுழையத் தயாராக உள்ளது என்பதை மேலும் உறுதியாக்குகிறது.

    டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் சமீபத்தில் அமெரிக்காவில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த சில நாட்களுக்குப் பிறகு இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

    மின்சார வாகன (EV) தயாரிப்பு நிறுவனம், இப்போது 13 வெவ்வேறு பணிகளுக்கு விண்ணப்பங்களை கோரி அதன் LinkedIn பக்கத்தில் ஜாப் ஓப்பனிங் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

    இந்தப் பதவிகள் மும்பை மற்றும் டெல்லியை அடிப்படையாகக் கொண்டவை மற்றும் வாகன சேவை, விற்பனை, வாடிக்கையாளர் ஆதரவு மற்றும் வணிக செயல்பாடுகள் உள்ளிட்டவை அடங்கும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டெஸ்லா
    இந்தியா
    மகாராஷ்டிரா
    மின்சார வாகனம்

    சமீபத்திய

    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ
    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்
    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்

    டெஸ்லா

    வர்த்தக முத்திரை மீறல் தொடர்பாக இந்திய பேட்டரி உற்பத்தியாளர் மீது வழக்கு தொடர்ந்தது டெஸ்லா  மின்சார வாகனம்
    சீனாவில் ரோபோடாக்சியை அறிமுகப்படுத்த முன்மொழிந்தது டெஸ்லா  சீனா
    பணிநீக்கம் செய்யப்பட்ட சூப்பர்சார்ஜர் தொழிலாளர்களை மீண்டும் பணியில் சேர்த்தது டெஸ்லா  எலான் மஸ்க்
    எலான் மஸ்க்கின் $56 பில்லியன் ஊதிய தொகுப்பிற்கு மீண்டும் ஒப்புதல் அளித்த டெஸ்லா பங்குதாரர்கள் எலான் மஸ்க்

    இந்தியா

    டெல்லி வெற்றிக்குப் பிறகு; இந்தியாவின் எத்தனை மாநிலங்களில் பாஜக ஆட்சி நடக்கிறது? பாஜக
    விண்டேஜ் கார் பிரியர்களுக்கு குட் நியூஸ்; மத்திய அரசு இறக்குமதி கொள்கையில் திருத்தம் கார்
    சத்தீஸ்கரின் பீஜப்பூரில் 31 நக்சலைட்களை என்கவுன்ட்டர் செய்தனர் பாதுகாப்புப் படையினர் சத்தீஸ்கர்
    மணிப்பூர் முதல்வர் என் பிரேன் சிங் பதவி விலகினார்; ஆளுநரிடம் ராஜினாமா கடிதம் சமர்ப்பித்தார் மணிப்பூர்

    மகாராஷ்டிரா

    பயிற்சியில் இருந்து நீக்கப்பட்டார் பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கர்  மும்பை
    துப்பாக்கி கொண்டு மிரட்டியதற்காக, தலைமறைவாக இருந்த பயிற்சி ஐஏஎஸ் பூஜா கேத்கரின் தாய் கைது கைது
    கனமழை எதிரொலி: மும்பையில் விமானப் போக்குவரத்து பாதிப்பு, புனேவில் மின்சாரம் தாக்கியதில் 3 பேர் உயிரிழப்பு கனமழை
    நவி மும்பையில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது: பலர் சிக்கியிருக்கலாம் என தகவல்  இந்தியா

    மின்சார வாகனம்

    உற்பத்தியை அதிகரிக்க எலக்ட்ரிக் வாகன கொள்கையில் புதிய திருத்தங்கள்; மத்திய அரசு திட்டம் மத்திய அரசு
    2030க்குள் முதல் மின்சார வாகனத்தை களமிறக்குவது உறுதி; லம்போர்கினி சிஇஓ திட்டவட்டம் லம்போர்கினி
    வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்த கோல்டு சேவை; ஏதர் எனர்ஜி அறிமுகம் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்
    பஜாஜ் சேடக்கின் புதுப்பிக்கப்பட்ட மாடல் இந்த மாதத்தில் அறிமுகம் செய்யப்படும் எனத் தகவல்; சிறப்பம்சங்கள் என்னென்ன? பஜாஜ்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025