NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / கடன் செலுத்தப்பட்ட 30 நாட்களுக்குள் அசல் ஆவணங்களைத் திருப்பியளிக்க உத்தரவிட்ட ரிசர்வ் வங்கி
    கடன் செலுத்தப்பட்ட 30 நாட்களுக்குள் அசல் ஆவணங்களைத் திருப்பியளிக்க உத்தரவிட்ட ரிசர்வ் வங்கி
    வணிகம்

    கடன் செலுத்தப்பட்ட 30 நாட்களுக்குள் அசல் ஆவணங்களைத் திருப்பியளிக்க உத்தரவிட்ட ரிசர்வ் வங்கி

    எழுதியவர் Prasanna Venkatesh
    September 13, 2023 | 04:52 pm 1 நிமிட வாசிப்பு
    கடன் செலுத்தப்பட்ட 30 நாட்களுக்குள் அசல் ஆவணங்களைத் திருப்பியளிக்க உத்தரவிட்ட ரிசர்வ் வங்கி
    கடன் செலுத்தப்பட்ட 30 நாட்களுக்குள் அசல் ஆவணங்களைத் திருப்பியளிக்க உத்தரவிட்ட ரிசர்வ் வங்கி

    அவசர நேரங்களில் பொதுமக்கள் தங்களுடை அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களை, வங்கிகள் அல்லது வங்கி அல்லாத நிதி நிறுவனங்களில் அடமானம் வைத்துக் கடன் பெறுவது வழக்கம். தங்களுடைய சொத்துக்களின் மீது வாங்கப்பட்ட கடனை கட்டி முடித்த பிறகும், குறிப்பிட்ட சில நிறுவனங்கள் அசல் ஆவணங்களைத் திரும்பத் தருவதைத் தாமதமாக்கி, வாடிக்கையாளர்களை இன்னல்களுக்கு ஆளாக்கும் சம்பவங்களும் அவ்வபோது நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஒரு சொத்தின் மீது வாங்கப்பட்ட கடன் கட்டி முடிக்கப்பட்ட பிறகு, அது தொடர்பான ஆவணங்களை அடுத்த 30 நாட்களுக்குள் திருப்பியளிக்க வேண்டும் என அனைத்து வங்கிகளுக்கும், வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறது ரிசர்வ் வங்கி.

    ரிசர்வ் வங்கியின் சுற்றறிக்கை: 

    இது தொடர்பாக ரிசர்வ் வங்கி அனுப்பிய சுற்றறிக்கையில், குறிப்பிட்ட சொத்தின் மீது கடன் வாங்கியவர்கள், அந்தக் கடனை திருப்பிய செலுத்திய 30 நாட்களுக்கு அசல் ஆவணங்கள் திருப்பியளிக்கப்பட வேண்டும். தவறும் பட்சத்தில், உரிய காரணத்தை வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் தெரிவித்திருக்க வேண்டும். இல்லையென்றால், நாளொன்றுக்கு ரூ.5,000-த்தை இழப்பீடாக கடனை கட்டி முடித்தவருக்கு செலுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டிருக்கிறது ரிசர்வ் வங்கி. மேலும், அசல் ஆவணங்கள் தொலைந்தாலோ அல்லது சேதமடைந்தாலோ, அவற்றை திரும்பப் பெறுவதற்கு உதவுவதோடு, அதற்குறிய கட்டணங்களை குறிப்பிட்ட நிதி நிறுவனங்கள் ஏற்க வேண்டும் எனவும் தங்களுடைய சுற்றறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது ரிசர்வ் வங்கி.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    ரிசர்வ் வங்கி
    கடன்

    ரிசர்வ் வங்கி

    ரூ.2,000 நோட்டுக்கள்: 93% திரும்ப பெறப்பட்டதாக ரிசர்வ் வங்கி அறிக்கை வங்கிக் கணக்கு
    உரிமை கோரப்படாத வைப்புநிதி குறித்த தகவல்களுக்கு புதிய வலைத்தளத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது ரிசர்வ் வங்கி இந்தியா
    புதிய தொழில்நுட்பங்களைக் கொண்டு யுபிஐ சேவை மேம்படுத்தவிருக்கும் RBI யுபிஐ
    மூன்றாவது முறையாக 6.5 சதவிகிதம் ரெப்போ ரேட்: மாற்றம் செய்யாத நிதிக் கொள்கைக் குழு இந்தியா

    கடன்

    அயர்லாந்தில் இருந்து ரூ.9,000 கோடி பணம் வருவதாக கூறி தொழிலதிபர்களிடம் பணம் பறிப்பு - க்ரைம் ஸ்டோரி  க்ரைம் ஸ்டோரி
    ஏழை பழங்குடியின இளைஞரின் மருத்துவ கனவு - கடந்து வந்த பாதை  ஒடிசா
    ஆன்லைன் கடன்: இதையெல்லாம் கவனிக்க மறக்காதீர்கள் ஆன்லைன் மோசடி
    இந்தியாவில் வீடு வாங்க ஏற்ற நகரம் எது? நைட் ஃபிராங்க் நிறுவனம் அறிக்கை இந்தியா
    அடுத்த செய்திக் கட்டுரை

    வணிகம் செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Business Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023