NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் டி.ரபி சங்கர் 16வது நிதி ஆணைய பகுதிநேர உறுப்பினராக நியமனம்
    சுருக்கம் செய்ய
    அடுத்த செய்திக் கட்டுரை
    ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் டி.ரபி சங்கர் 16வது நிதி ஆணைய பகுதிநேர உறுப்பினராக நியமனம்
    16வது நிதி ஆணையத்தில் ஆர்பிஐ துணை ஆளுநர் டி. ரபி சங்கர் சேர்ப்பு

    ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் டி.ரபி சங்கர் 16வது நிதி ஆணைய பகுதிநேர உறுப்பினராக நியமனம்

    எழுதியவர் Sekar Chinnappan
    Jun 07, 2025
    06:49 pm

    செய்தி முன்னோட்டம்

    நிதி அமைச்சகம் இந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் டி.ரபி சங்கரை 16வது நிதி ஆணையத்தின் பகுதி நேர உறுப்பினராக நியமித்துள்ளது.

    முன்னாள் நிதிச் செயலாளர் அஜய் நாராயண் ஜா தனிப்பட்ட காரணங்களால் ஆணையத்திலிருந்து ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, சனிக்கிழமை (ஜூன் 7) அன்று அவரது நியமனம் அறிவிக்கப்பட்டது.

    டி.ரபி சங்கர் பதவியேற்ற நாளிலிருந்து இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்படும் வரை அல்லது அக்டோபர் 31, 2025 வரை, எது முன்னதாக வருகிறதோ அதுவரை ஆணையத்தில் பணியாற்றுவார்.

    முன்னதாக, டிசம்பர் 31, 2023 அன்று 16வது நிதி ஆணையம் அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    குழு

    குழு உறுப்பினர்கள்

    பொருளாதார நிபுணரும் முன்னாள் நிதி ஆயோக் துணைத் தலைவருமான அரவிந்த் பனகாரியா தலைமையில் செயல்படுகிறது.

    அன்னி ஜார்ஜ் மேத்யூ, மனோஜ் பாண்டா மற்றும் சௌம்யா காந்தி கோஷ் ஆகியோர் மற்ற உறுப்பினர்களாக உள்ளனர், ரித்விக் பாண்டே செயலாளராக செயல்படுகிறார்.

    அக்டோபர் 31, 2025க்குள் பரிந்துரைகளைச் சமர்ப்பிக்க வேண்டும் என்ற ஆணையுடன், இந்த ஆணையம் ஏப்ரல் 1, 2026 முதல் மார்ச் 31, 2031 வரையிலான காலத்திற்கான அறிக்கையை சமர்ப்பிக்கும்.

    மத்திய மற்றும் மாநிலங்களுக்கு இடையே வரி வருவாயைப் பகிர்ந்தளிப்பது, மாநில அளவிலான நிதி வளங்களை மேம்படுத்துதல் மற்றும் பேரிடர் மேலாண்மைச் சட்டம், 2005 இன் கீழ் பேரிடர் மேலாண்மை நிதியை மதிப்பாய்வு செய்தல் ஆகியவை இதன் முக்கிய பொறுப்புகளில் அடங்கும்.

    டி.ரபி சங்கர்

    டி.ரபி சங்கர் பின்னணி

    டி.ரபி சங்கர் மூன்று தசாப்தங்களுக்கும் மேலான ஆர்பிஐ அனுபவத்தைக் கொண்டுள்ளார்.

    1990 இல் ரிசர்வ் வங்கியில் சேர்ந்தார். 2021 முதல் துணை ஆளுநராக, நிதி தொழில்நுட்பம் மற்றும் நிதிச் சந்தை ஒழுங்குமுறை உள்ளிட்ட முக்கிய துறைகளை அவர் மேற்பார்வையிட்டுள்ளார்.

    குறிப்பிடத்தக்க வகையில், இந்தியாவின் மத்திய வங்கி டிஜிட்டல் நாணயத்தின் (CBDC) வளர்ச்சியில் அவர் முக்கிய பங்கு வகித்தார்.

    அவரது நியமனம் சிக்கலான நிதி சவால்களை எதிர்கொள்ள ஆணையத்தின் திறனை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ரிசர்வ் வங்கி
    ஆர்பிஐ
    இந்தியா

    சமீபத்திய

    ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் டி.ரபி சங்கர் 16வது நிதி ஆணைய பகுதிநேர உறுப்பினராக நியமனம் ரிசர்வ் வங்கி
    மருந்துகள் இல்லாமல் ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த முடியுமா? நீரிழிவு நோயாளிகள் தெரிந்துகொள்ள வேண்டியவை நீரிழிவு நோய்
    ஆகஸ்ட்-செப்டம்பர் 2025 இல் சூம் 160 மாடலை டெலிவரி செய்ய ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் திட்டம் ஹீரோ
    திருச்செந்தூர் முருகன் கோவில் கும்பாபிஷேகத்திற்கான நேரத்தை அறிவித்தது கோவில் நிர்வாகம் திருச்செந்தூர்

    ரிசர்வ் வங்கி

    புதிய RBI அம்சத்தின் மூலம் RTGS, NEFT பரிவர்த்தனைகள் இப்போதும் மேலும் பாதுகாக்கப்படுகிறது ஆர்பிஐ
    இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு $640.279 பில்லியனாக குறைவு; ஆர்பிஐ தகவல் இந்தியா
    அமெரிக்க தேர்தலுக்கு பிறகு சரிவு எதிரொலி; 8 டன் தங்கத்தை கையிருப்பில் சேர்த்தது ரிசர்வ் வங்கி இந்தியா
    பலமான அமெரிக்க வேலை வாய்ப்பு தரவுகளுக்கு மத்தியில் ரூபாய் மதிப்பு மீண்டும் வரலாறு காணாத சரிவு இந்தியா

    ஆர்பிஐ

    இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஏழு மாதங்களில் இல்லாத அளவிற்கு கடும் வீழ்ச்சி இந்தியா
    இந்திய ரூபாயில் எல்லை தாண்டிய வெளிநாட்டு பரிவர்த்தனைகளை அதிகரிக்க ரிசர்வ் வங்கி புதிய நடவடிக்கை ரிசர்வ் வங்கி
    இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஆறாவது வாரமாக கடும் சரிவு இந்தியா
    பட்ஜெட்டுக்கு முன்னதாக அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்துள்ளது பணவீக்கம்

    இந்தியா

    பிரமோஸ் மூலம் பாகிஸ்தானை நிலைகுலையச் செய்தது இந்தியா; ஷெபாஸ் ஷெரீப் ஒப்புதல் வாக்குமூலம் ஷெபாஸ் ஷெரீப்
    ஏப்ரல் 2025 மொபைல் சந்தாதாரர் வளர்ச்சியில் ஜியோ முன்னணி; சந்தாதாரர் எண்ணிக்கையில் வீழ்ச்சியை சந்தித்த பிஎஸ்என்எல் ஜியோ
    இதுக்கும் தாக்குதல் நிறுத்தத்திற்கும் சம்பந்தமில்லை; அமெரிக்காவை மீண்டும் நோஸ் கட் செய்தது இந்தியா அமெரிக்கா
    ஒத்திவைக்கப்பட்ட ஆபரேஷன் ஷீல்டு பாதுகாப்பு ஒத்திகையை மே 31 அன்று நடத்துவதாக உள்துறை அமைச்சகம் அறிவிப்பு உள்துறை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025