Page Loader
பேடிஎம் நிறுவனத்தின் பங்குகள் 3 மாதத்தில் 54% உயர்வு; காரணம் என்ன?
பேடிஎம் நிறுவனம்

பேடிஎம் நிறுவனத்தின் பங்குகள் 3 மாதத்தில் 54% உயர்வு; காரணம் என்ன?

எழுதியவர் Sekar Chinnappan
Aug 26, 2024
04:53 pm

செய்தி முன்னோட்டம்

பேடிஎம்மின் தாய் நிறுவனமான ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் பங்குகள் சமீபத்தில் குறிப்பிடத்தக்க அளவில் வளர்ச்சியைக் கண்டுள்ளன. கடந்த மூன்று மாதங்களில், பங்கு ஒன்றுக்கு 54% உயர்ந்து ₹554 ஆக உள்ளது. முன்னதாக நான்கு மாத சரிவின் போது, ​​மே மாதத்தில் அதுவரை இல்லாத அளவு 79% சரிந்து ₹310 ஆக இருந்த நிலையில், தற்போது மீண்டுள்ளது. முன்னதாக, இந்திய ரிசர்வ் வங்கி, இணக்கச் சிக்கல்கள் காரணமாக பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கிக்கு தடை விதித்ததால் அந்த சரிவு ஏற்பட்டது. இதற்கிடையே, ஒரு மூலோபாய நடவடிக்கையாக, பேடிஎம் அதன் பொழுதுபோக்கு மற்றும் டிக்கெட் வணிகத்தை ஜொமோட்டோவிற்கு விற்க முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நிதிக் கண்ணோட்டம்

நிதி செயல்திறன் மற்றும் எதிர்கால கணிப்புகள்

2024-25 நிதியாண்டுக்கான ஜூன் காலாண்டில் பேடிஎம் நிறுவனம் ₹840 கோடி நிகர இழப்பைப் பதிவு செய்துள்ளது. இதுவே முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் ₹358 கோடி மட்டுமே இழப்பாக இருந்த நிலையில், இந்த ஆண்டு குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளது. பிப்ரவரியில் அதன் வங்கிப் பிரிவை மூட ரிசர்வ் வங்கி உத்தரவிட்டதைத் தொடர்ந்து பணம் செலுத்தும் வணிகத்தில் ஏற்பட்ட பலவீனம் இதற்குக் காரணமாக கூறப்படுகிறது. எவ்வாறாயினும், சிறந்த செலவு மேலாண்மை மற்றும் மொத்த வணிக மதிப்பு மற்றும் வணிக சாதனச் சேர்த்தல் போன்ற காரணங்களால் தற்போதைய இரண்டாவது காலாண்டில் இருந்து லாபம் மற்றும் வருவாய் மேம்படும் என்று நிறுவனம் எதிர்பார்க்கிறது.