NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / இதுவரை இல்லாத அளவு 22,150 புள்ளிகளை எட்டியது நிஃப்டி 50 
    அடுத்த செய்திக் கட்டுரை
    இதுவரை இல்லாத அளவு 22,150 புள்ளிகளை எட்டியது நிஃப்டி 50 

    இதுவரை இல்லாத அளவு 22,150 புள்ளிகளை எட்டியது நிஃப்டி 50 

    எழுதியவர் Sindhuja SM
    Feb 19, 2024
    12:52 pm

    செய்தி முன்னோட்டம்

    இன்றைய அமர்வில் நிஃப்டி 50, வரலாறு காணாத அளவு 22,150.75ஐ எட்டியுள்ளது.

    இந்தியாவில் பாம்பே பங்குச் சந்தை(BSE) மற்றும் தேசிய பங்குச் சந்தை(NSE) என்ற இரண்டு பங்கு சந்தைகள் இருக்கின்றன.

    இதில், பாம்பே பங்குச் சந்தையின் குறியீடு சென்செக்ஸ் என்றும், தேசிய பங்குச் சந்தையின் முதன்மைக் குறியீடு நிஃப்டி என்றும் அழைக்கப்படுகிறது.

    அதாவது, தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டிருக்கும் முதன்மையான 50 நிறுவனங்களின் கூட்டு பங்குகள் தான் நிஃப்டி 50 ஆகும்.

    நிஃப்டி எந்த அளவு உயர்கிறதோ அந்த அளவு தேசிய பங்குச் சந்தையின் மதிப்பு அதிகரித்துள்ளது என்று அர்த்தம் கொள்ளலாம்.

    இந்நிலையில், இன்று பங்கு சந்தை தொடங்கியவுடன், நிஃப்டி 82.5 புள்ளிகள்(0.36%) அதிகரித்து 22,123 புள்ளிகளை எட்டி வரலாறு படைத்தது.

    பங்கு சந்தை

    முன்னணியில் ஆட்டோ, பார்மா மற்றும் நுகர்வோர் பொருட்கள் துறைகள்  

    தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டிருக்கும் முதன்மையான 50 நிறுவனங்களின் பங்குகள் வலுவாக உயர்ந்ததை அடுத்து, நிஃப்டியின் புள்ளிகள் 22,150.75ஐ எட்டியுள்ளது.

    கடந்த செப்டம்பர் மாதம், நிஃப்டி 20,000 புள்ளிகளை முதல்முறையாக தாண்டி சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    இன்று சென்செக்ஸ் 0.31% உயர்ந்து 72,650 புள்ளிகளில் வர்த்தகம் செய்யப்படுகிறது.

    ஆட்டோ, பார்மா மற்றும் நுகர்வோர் பொருட்கள் துறைகள் ஈட்டிய லாபத்தால் இன்று பங்குச் சந்தையில் ஏற்றம் ஏற்பட்டுள்ளது.

    இன்று பங்கு சந்தை தொடங்கிய போது, தோராயமாக 2,170 பங்குகள் முன்னேறின, 1,160 க்கும் மேற்பட்ட பங்குகள் சரிந்தன, 110 பங்குகள் எந்த மாற்றமும் இல்லாமல் வர்த்தகம் செய்யப்பட்டன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பங்குச் சந்தை
    சென்செக்ஸ்

    சமீபத்திய

    பாகிஸ்தான் பயங்கரவாதத்தை அம்பலப்படுத்த ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களுடன் உலகநாடுகளுக்கு இன்று கிளம்புகிறது MPக்கள் குழு  இந்தியா
    ஐபிஎல் 2025: மும்பைக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் போட்டியை இடமாற்றம் செய்யக்கோரும் டெல்லி அணி டெல்லி கேப்பிடல்ஸ்
    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025

    பங்குச் சந்தை

    அதானி குழுமத்தில் செய்த முதலீட்டில் இழப்பு ஏதும் இல்லை: LIC இந்தியா
    அதானி குழும பிரச்சனை: பங்குகள் சரிவடைந்தற்கு பதிலளித்த நிதியமைச்சர் இந்தியா
    அதானி பங்குகள் மீண்டும் சரிவு! காரணம் என்ன? தொழில்நுட்பம்
    அதானி பங்குகளில் முதலீட்டை அதிகரித்திருக்கும் எல்ஐசி!  முதலீடு

    சென்செக்ஸ்

    நிஃப்டி மற்றும் சென்செக்ஸில் ஏன் இந்த திடீர் சரிவு? வணிகம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025