NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / என் கருத்தில் மாற்றமில்லை: 6 நாள் வேலைக்கு இன்போசிஸ் நாராயண மூர்த்தி மீண்டும் ஆதரவு
    அடுத்த செய்திக் கட்டுரை
    என் கருத்தில் மாற்றமில்லை: 6 நாள் வேலைக்கு இன்போசிஸ் நாராயண மூர்த்தி மீண்டும் ஆதரவு
    ஆறு நாள் வேலை கண்ணோட்டத்தில் தொடர்ந்து உறுதியாக இருப்பதாக நாராயண மூர்த்தி கூறியுள்ளார்

    என் கருத்தில் மாற்றமில்லை: 6 நாள் வேலைக்கு இன்போசிஸ் நாராயண மூர்த்தி மீண்டும் ஆதரவு

    எழுதியவர் Venkatalakshmi V
    Nov 15, 2024
    02:25 pm

    செய்தி முன்னோட்டம்

    இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் என் நாராயண மூர்த்தி, தனது வாரத்தில் ஆறு நாள் வேலை கண்ணோட்டத்தில் தொடர்ந்து உறுதியாக இருப்பதாக கூறியுள்ளார்.

    அவரின் கருத்திற்கு சமூக ஊடக எதிர்ப்பை உருவாக்கியது குறித்தும் பேசிய நாராயணமூர்த்தி, நாட்டின் முன்னேற்றம், கடின உழைப்பு கலாச்சாரத்தை ஊக்குவிப்பதில் தங்கியுள்ளது என்றார்.

    நாராயணமூர்த்தி, CNBC குளோபல் லீடர்ஷிப் உச்சிமாநாட்டில், "இதை(6 நாள் வேலை கருத்தை) என்னுடன் என் கல்லறைக்கு எடுத்துச் செல்வேன்" எனவும் தனது நிலைப்பாட்டை மீண்டும் உறுதிபடுத்தினார்.

    நாராயண மூர்த்தி, 1986ல் ஆறு நாள் வேலை வாரத்தில் இருந்து ஐந்து நாட்களுக்கு இந்தியா மாறியது குறித்தும் ஏமாற்றத்தை அந்த மாநாட்டில் வெளிப்படுத்தினார். இந்த மாற்றத்தை தான் ஒருபோதும் ஏற்கவில்லை என்று அவர் கூறினார்.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    #QUOTE | “வேலை-வாழ்க்கை சமநிலை என்ற விஷயத்தில் எனக்கு துளியும் நம்பிக்கை இல்லை” -நாராயண மூர்த்தி, INFOSYS நிறுவனர்#SunNews | #NarayanaMurthy | #WorkLifeBalance pic.twitter.com/OdrCgJUtT9

    — Sun News (@sunnewstamil) November 15, 2024

    முன்மாதிரி 

    அயராத உழைப்பிற்கு முன்மாதிரியாக பிரதமரை சுட்டிக்காட்டிய நாராயணமூர்த்தி

    அயராத அர்ப்பணிப்பின் முன்மாதிரியாக பிரதமர் நரேந்திர மோடியை சுட்டிக்காட்டிய நாராயணமூர்த்தி, தேசிய முன்னேற்றத்தை அடைய கடினமாக உழைக்க வேண்டியது அவசியம் என்று பரிந்துரைத்தார்.

    "கடின உழைப்புக்கு மாற்று இல்லை," என்று அவர் கூறினார், வேலை-வாழ்க்கை சமநிலை குறித்த தனது நிலைப்படையும் அவர் தெளிவாக்கினார்.

    நெறிமுறை

    நாராயண மூர்த்தியின் Work - Life பாலன்ஸ் கொள்கை

    நாராயண மூர்த்தி தனது சொந்த வாழ்க்கையில் இருந்து நுண்ணறிவைப் பகிர்ந்துகொண்டார்.

    அவர் தனது வாழ்க்கை முழுவதும் நீண்ட மணிநேரம் பணியாற்றியதாக கூறினார்.

    அவர் இன்போசிஸ் நிறுவனத்தை முன்னேற்றுவதற்காக ஒரு நாளைக்கு 14 மணிநேரம், வாரத்தில் ஆறரை நாட்கள், தனது தொழில்முறை கடமைகளில் செலவழித்தார்.

    அவரது தினசரி, காலை 6:30 மணிக்கு அலுவலகத்தில் தொடங்கி இரவு 8:40 மணியளவில் மட்டுமே புறப்படுவதை வழக்ககமாக கொண்டிருந்ததாகவும் பெருமிதத்துடன் கூறினார்.

    அவரைப் பொறுத்தவரை, கடின உழைப்பு என்பது தனிப்பட்ட விருப்பம் மட்டுமல்ல; இந்தியாவில் பெரும்பாலும் மானியத்துடன் கூடிய கல்வியைப் பெற்ற அதிர்ஷ்டசாலிகளுக்கு இது ஒரு பொறுப்பு என்கிறார்.

    அவர், வேலைக்கான அர்ப்பணிப்பு, இந்திய கலாச்சாரத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும் மற்றும் வாய்ப்புகள் உள்ளவர்களுக்கு ஒரு கடமை எனவும் கூறினார்.

    உலக நாடுகள்

    "இரண்டாம் உலக போருக்கு பின்னர் உலக நாடுகள் முன்னேறியதற்கு கடின உழைப்பே காரணம்"

    ஒரு நபரின் புத்திசாலித்தனம் அல்லது திறமையைப் பொருட்படுத்தாமல் கடின உழைப்பு அவசியம் என்று குறிப்பிட்டார்.

    "இந்த நாட்டில், நாம் கடினமாக உழைக்க வேண்டும். நீங்கள் மிகவும் புத்திசாலியாக இருந்தாலும் கடின உழைப்புக்கு ஈடு இணையில்லை,'' என்றார்.

    மூர்த்தியின் நிலைப்பாடு பெரும்பாலும் ஜெர்மனி மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளுடன் இணையாக உள்ளது.

    இவை இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சியின் மூலம் தங்கள் பொருளாதாரங்களை மீண்டும் கட்டியெழுப்பியதாக அவர் கூறுகிறார்.

    அவரைப் பொறுத்தவரை, இந்த நாடுகள், கவனம் செலுத்தும் மற்றும் உறுதியான பணியாளர்களுடன் ஒரு தேசம் எதைச் சாதிக்க முடியும் என்பதற்கு முன்னுதாரணமாக அமைகின்றன. இளம் இந்தியர்களுக்கு இதேபோன்ற பொறுப்பு இருப்பதாக மூர்த்தி நம்புகிறார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நாராயண மூர்த்தி
    இன்ஃபோசிஸ்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    நாராயண மூர்த்தி

    வைரலாகும் நாராயண மூர்த்தியின் டீப்ஃபேக் வீடியோ, பொதுமக்களை எச்சரிக்கும் இன்ஃபோசிஸ் நிறுவனர் இன்ஃபோசிஸ்
    ரூ.240 கோடி மதிப்புள்ள பங்குகளை 4 மாத பேரனுக்கு பரிசாக வழங்கினார் இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி இன்ஃபோசிஸ்
    நாராயண மூர்த்தியின் 70 மணிநேரம் வேலை நேரம் எங்களுக்கு மட்டும்தானா? இன்ஃபோசிஸ் ஊழியர்களுக்கு இல்லையா? இன்ஃபோசிஸ்

    இன்ஃபோசிஸ்

    பங்குச்சந்தையில் இன்ஃபோசிஸ் வீழ்ச்சி.. 500 கோடி சொத்து மதிப்பை இழந்த ரிஷி சுனக்கின் மனைவி!  பங்குச் சந்தை
    'ChatGPT மனிதர்களுக்கு மாற்றா'... இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தியின் பதில்!  சாட்ஜிபிடி
    விப்ரோ ஊழியர்களுக்கு நல்ல செய்தி! நிறுவனத்தின் மற்றொரு பெரிய அறிவிப்பு!  கூகுள்
    பாம்பே ஐஐடி-க்கு ரூ.315 கோடி நன்கொடை அளித்த இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் துணை நிறுவனர்  ஐஐடி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025