NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / சிங்கப்பூருக்கு மட்டும் 'சிறப்பு அரிசி ஏற்றுமதி'க்கு அனுமதி அளிக்கும் மத்திய அரசு
    சிங்கப்பூருக்கு மட்டும் 'சிறப்பு அரிசி ஏற்றுமதி'க்கு அனுமதி அளிக்கும் மத்திய அரசு
    வணிகம்

    சிங்கப்பூருக்கு மட்டும் 'சிறப்பு அரிசி ஏற்றுமதி'க்கு அனுமதி அளிக்கும் மத்திய அரசு

    எழுதியவர் Prasanna Venkatesh
    August 30, 2023 | 10:21 am 1 நிமிட வாசிப்பு
    சிங்கப்பூருக்கு மட்டும் 'சிறப்பு அரிசி ஏற்றுமதி'க்கு அனுமதி அளிக்கும் மத்திய அரசு
    சிங்கப்பூருக்கு மட்டும் 'சிறப்பு அரிசி ஏற்றுமதி'க்கு அனுமதி அளிக்கும் மத்திய அரசு

    கடந்த ஜூலை 20-ம் தேதி முதல் பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசியின் ஏற்றுமதிக்குத் தடை விதித்தது மத்திய அரசு. இந்தியாவில் பருவநிலை மாற்றங்களின் காரணமாக, பல்வேறு மாநிலங்களில் அரிசி உற்பத்தி குறைந்தது. இதனைத் தொடர்ந்து, உள்நாட்டின் அரிசித் தேவையைச் சமாளிக்கவும், இந்தியாவில் அரிசியின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தவும், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பாஸ்மாதி அல்லாத வெள்ளை அரிசியின் ஏற்றுமதிக்குத் தடை விதிக்கப்பட்டது. பாஸ்மதி அரிசியின் பெயரில் பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசியை சட்டத்திற்குப் புறம்பாக ஏற்றுமதி செய்வதைத் தடுக்க, கடந்த ஆகஸ்ட் 27ம் தேதியன்று கூடுதல் தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருக்கிறது மத்திய அரசு.

    சிங்கப்பூருக்கு சிறப்பு ஏற்றுமதி: 

    உலகின் அனைத்து நாடுகளுக்கும் அரிசி ஏற்றுமதியை இந்தியா தடை செய்திருக்கும் நிலையில், சிங்கப்பூருக்கு மட்டும் ஏற்றுமதியை அனுமதிக்கவிருப்பதாக செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருக்கிறார் மத்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர். சிங்கப்பூருடன் இந்தியா நெருக்கமான உறவைப் பேணி வருவதாகவும், அதன் காரணமாக சிங்கப்பூரின் உணவுத் தேவையை பூர்த்தி செய்ய அரிசி ஏற்றுமதியை அந்நாட்டிற்கு மட்டும் அனுமதிக்கவிருப்பதாகவும் தெரிவித்துள்ளார் அவர். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளார் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர். சிங்கப்பூரின் அரிசித்தேவையில் 40%-தத்தை இந்தியாவில் இருந்தே இறக்குமதி செய்து வருகிறது அந்நாடு. மேலும், இந்தியாவிலிருந்து அந்நாடு இறக்குமதி செய்யும் அரிசியில் 17% பாஸ்மாதி அல்லாத அரிசி வகையைச் சேர்ந்தவை தான் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சிங்கப்பூர்
    மத்திய அரசு
    வணிகம்

    சிங்கப்பூர்

    சிங்கப்பூரின் DS-SAR செயற்கைக் கோளை வெற்றிகரமாக நிலை நிறுத்தியது PSLV-C56 விண்வெளி
    சிங்கப்பூரின் செயற்கைக் கோள்களை சுமந்து நாளை விண்ணில் ஏவப்படவிருக்கிறது PSLV  இஸ்ரோ
    இரண்டு தசாப்தங்களுக்கு பிறகு முதல்முறையாக ஒரு பெண்ணை தூக்கிலிட தயாராகும் சிங்கப்பூர் உலகம்
    சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்டைக் கொண்ட நாடுகள் பட்டியலில் 80வது இடத்தைப் பிடித்த இந்தியா உலகம்

    மத்திய அரசு

    'ஜம்மு காஷ்மீர் எப்போது மீண்டும் மாநிலமாக்கப்படும்': மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி  உச்ச நீதிமன்றம்
    வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.200 குறைப்பு: மத்திய அரசு அதிரடி  இந்தியா
    பரனூர் சுங்கச்சாவடியில் நவீன ஊழல் - சிஏஜி அறிக்கை மூலம் அம்பலம் செங்கல்பட்டு
    'ஏழை மக்களின் நிலை மிக வேகமாக உயர்ந்து வருகிறது' : பி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி  பிரதமர் மோடி

    வணிகம்

    அதானி குழுமப் பங்குகளின் வீழ்ச்சியில் Short Selling மூலம் லாபமடைந்த 12 நிறுவனங்கள் பங்குச்சந்தை செய்திகள்
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஆகஸ்ட் 29 தங்கம் வெள்ளி விலை
    வாடிக்கையாளர்களுக்கு உதவ புதிய AI சாட்பாட் ஒன்றை உருவாக்கி வரும் உபர் ஈட்ஸ் செயற்கை நுண்ணறிவு
    FAME II திட்டத்தின் கீழ் பெற்ற மானியத்தை திருப்பியளித்த ரிவோல்ட், ஏன்? எலக்ட்ரிக் பைக்
    அடுத்த செய்திக் கட்டுரை

    வணிகம் செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Business Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023