NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / ஆட்டோ செய்தி / ரூ.10,900 கோடி மதிப்பிலான பிரதம மந்திரி எலக்ட்ரிக் டிரைவ் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ரூ.10,900 கோடி மதிப்பிலான பிரதம மந்திரி எலக்ட்ரிக் டிரைவ் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்
    ரூ.10,900 கோடி மதிப்பிலான பிரதம மந்திரி எலக்ட்ரிக் டிரைவ் திட்டத்திற்கு ஒப்புதல்

    ரூ.10,900 கோடி மதிப்பிலான பிரதம மந்திரி எலக்ட்ரிக் டிரைவ் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்

    எழுதியவர் Sekar Chinnappan
    Sep 12, 2024
    05:43 pm

    செய்தி முன்னோட்டம்

    அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு 10,900 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரதம மந்திரி எலக்ட்ரிக் டிரைவ் (இ-டிரைவ்) திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

    மார்ச் வரை ஒன்பது ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த எலக்ட்ரிக் வாகனங்களுக்கான ஹைப்ரிட் & ஃபேம் திட்டத்திற்கு மாற்றாக இது கொண்டு வரப்பட்டுள்ளது.

    இந்தியா முழுவதும் மின்சார வாகனங்களை மக்கள் ஏற்றுக்கொள்வதை இந்த புதிய முயற்சி விரைவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

    தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், நிலையான மற்றும் புதுமையான போக்குவரத்து தீர்வுகளை மேம்படுத்துவதில் அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை கோடிட்டுக் காட்டும் இந்த முடிவை அறிவித்தார்.

    இ-டிரைவ் திட்டம் எலக்ட்ரிக் வாகன தொழில்துறைக்கு குறிப்பிடத்தக்க ஊக்குவிப்பு மற்றும் ஆதரவை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    முக்கிய அம்சங்கள்

    இ-டிரைவ் திட்டத்தின் முக்கிய அம்சங்கள்

    இந்தத் திட்டம் 24.79 லட்சம் மின்சார இரு சக்கர வாகனங்கள், 3.16 லட்சம் இ-மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் 14,028 இ-பஸ்கள் ஆகியவற்றை ஆதரிக்கும்.

    மின்சார இரு சக்கர வாகனங்கள், மின்சார மூன்று சக்கர வாகனங்கள், இ-ஆம்புலன்ஸ்கள், இ-டிரக்குகள் மற்றும் பிற வளர்ந்து வரும் மின்சார வாகனங்களை ஊக்குவிக்க ரூ.3,679 கோடி மதிப்பிலான மானியங்கள் வழங்கப்பட உள்ளன.

    மாநில போக்குவரத்து நிறுவனங்கள் மற்றும் பொது போக்குவரத்து முகமைகள் மூலம் 14,028 இ-பஸ்களை கொள்முதல் செய்ய ரூ.4,391 கோடி வழங்கப்பட்டுள்ளது.

    இ-ஆம்புலன்ஸ் சேவைக்காக ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இ-டிரக்குகளை ஏற்றுக்கொள்வதை ஊக்குவிக்க ரூ.500 கோடி வழங்கப்பட்டுள்ளது.

    இந்தத் திட்டம் 88,500 சார்ஜிங் தளங்களையும் ஆதரிக்கும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    எலக்ட்ரிக் வாகனங்கள்
    மின்சார வாகனம்
    இந்தியா
    மத்திய அரசு

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    எலக்ட்ரிக் வாகனங்கள்

    இந்தியாவில் விற்பனையாகி வரும் டாப் 5 எலெக்ட்ரிக் பைக்குகள் எலக்ட்ரிக் பைக்
    உலகளாவிய எலெக்ட்ரிக் வாகனப் பயன்பாடு குறித்த தகவல்கள் கொண்ட அறிக்கையை வெளியிட்டுள்ளது IEA ஆட்டோமொபைல்
    இந்தியாவில் டாடா அறிமுகப்படுத்தவிருக்கும் புதிய எலெக்ட்ரிக் கார்கள் டாடா மோட்டார்ஸ்
    தீ விபத்துக்கு காரணம் தரமற்ற உதிரி பாகங்கள்தான்; ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனம் அறிவிப்பு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

    மின்சார வாகனம்

    வோக்ஸ்வேகன் இந்தியாவின் முதல் EV விரைவில் வெளியாகும் என தகவல் ஃபோக்ஸ்வேகன்
    ஸ்கோடா நிறுவனத்தின் ENYAQ iV எலக்ட்ரிக் எஸ்யூவி நாளை அறிமுகம் ஸ்கோடா
    அடுத்த ஆண்டு இந்தியாவில் EVயை அறிமுகப்படுத்த இருக்கிறது டொயோட்டா  டொயோட்டா
    ஐடி.3 GTX மாடலை அறிமுகப்படுத்தியது வோக்ஸ்வேகன் ஃபோக்ஸ்வேகன்

    இந்தியா

    தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட பெண்ணின் உயிரைக் காப்பாற்றிய மெட்டா ஏஐ; பின்னணி என்ன? மெட்டா
    ஒருநாளைக்கு 60 லட்சம் சிப்கள்; குஜராத்தில் அமையும் மெகா செமிகண்டக்டர் தொழிற்சாலைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் குஜராத்
    பீகாரில் அதிவேகமாகச் சென்ற மத்திய அமைச்சரின் காருக்கு அபராதம் விதிப்பு பீகார்
    ஆகஸ்ட் மாதத்தில் சரிவை 18% சரிவு; இந்திய எலெக்ட்ரிக் இரு சக்கர வாகன சந்தையில் பின்னடைவு இரு சக்கர வாகனம்

    மத்திய அரசு

    அரசு அதிகாரிகள் RSSஸில் சேர்வதற்கு விதிக்கப்பட்டிருத்த தடையை ரத்து செய்தது மத்திய அரசு  பாஜக
    பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜா, பயிற்சி அகாடமியில் ஆஜராவதற்கான காலக்கெடு முடிவடைந்தது; அடுத்து என்ன? ஐஏஎஸ்
    'மாநிலங்கள் புறக்கணிக்கப்படவில்லை...': எதிர்க்கட்சிகளுக்கு பதிலடி கொடுத்த நிதியமைச்சர் நிதியமைச்சர்
    புதிய பார்லிமென்ட் கட்டடத்தில் தண்ணீர் கசிவு; எதிர்க்கட்சிகள் காட்டம் நாடாளுமன்றம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025