NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / ஆட்டோ செய்தி / 2030க்குள் 8 புதிய எலக்ட்ரிக் வாகனங்களை இந்தியாவில் களமிறக்க ஜாகுவார் லேண்ட் ரோவர் முடிவு
    அடுத்த செய்திக் கட்டுரை
    2030க்குள் 8 புதிய எலக்ட்ரிக் வாகனங்களை இந்தியாவில் களமிறக்க ஜாகுவார் லேண்ட் ரோவர் முடிவு
    2030க்குள் 8 புதிய எலக்ட்ரிக் வாகனங்களை இந்தியாவில் களமிறக்க ஜாகுவார் லேண்ட் ரோவர் முடிவு

    2030க்குள் 8 புதிய எலக்ட்ரிக் வாகனங்களை இந்தியாவில் களமிறக்க ஜாகுவார் லேண்ட் ரோவர் முடிவு

    எழுதியவர் Sekar Chinnappan
    Oct 01, 2023
    01:55 pm

    செய்தி முன்னோட்டம்

    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ஜாகுவார் லேண்ட் ரோவர் 2030 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் எட்டு பேட்டரி அடிப்படையிலான எலக்ட்ரிக் வாகனங்களை அறிமுகப்படுத்த இலக்கு நிர்ணயித்துள்ளது.

    ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் ஏற்கனவே ஜாகுவார் ஐ-பேஸ் என்ற ஒரு எலக்ட்ரிக் கார இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது.

    இந்நிலையில், ஒரு கலந்துரையாடலில் பேசிய ஜாகுவார் லேண்ட் ரோவர் தலைமை வணிக அதிகாரி லெனார்ட் ஹூர்னிக், இந்திய சந்தையில் புதிதாக களமிறக்கப்படும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான ஆர்டர்களை அடுத்த ஆண்டு தொடங்க உள்ளதாகவும், 2025 டெலிவரியை தொடங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

    மேலும், "2030 இறுதிக்குள் இந்தியாவில் குறைந்தது 8 எலக்ட்ரிக் கார்களை களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம்." என்று அவர் குறிப்பிட்டார்.

    JLR to introduce 8 new bev before 2030

    ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்களின் விற்பனை இந்தியாவில் அதிகரிப்பு

    இந்த நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலகட்டத்தில், இந்தியாவில் நிறுவனத்தின் விற்பனை 100 சதவீதத்திற்கும் அதிகமாக வளர்ந்துள்ளது என்று லெனார்ட் ஹூர்னிக் தெரிவித்துள்ளார்.

    மேலும், இந்த நிதியாண்டின் பிற்பகுதியிலும் இந்த விற்பனை வேகம் தொடரும் என நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.

    பலதரப்பட்ட கலாச்சாரங்களை கொண்டுள்ள இந்திய சந்தையில் மக்களின் நம்பிக்கையை நீண்ட காலமாக தக்கவைத்துள்ள டாடா குழுமத்தின் ஒரு பகுதியாக இருப்பது, ஜாகுவார் லேண்ட் ரோவர் விற்பனை அதிகரிப்புக்கு மிகவும் சாதகமான காரணியாக உள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

    இதற்கிடையே, இந்த ஆண்டின் தொடக்கத்தில், டாடா குழுமம் ஜாகுவார் லேண்ட் ரோவர் மற்றும் பிற உற்பத்தியாளர்களுக்கு பேட்டரிகளை தயாரிப்பதற்கான முதன்மை தொழிற்சாலையை அமைக்க 4 பில்லியன் பவுண்டுகள் முதலீடு செய்வதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஜாகுவார் லேண்டு ரோவர்
    எலக்ட்ரிக் வாகனங்கள்
    எலக்ட்ரிக் கார்

    சமீபத்திய

    யாரு சாமி இவரு! அமேசான் வேலையை விட்டுவிட்டு பாடகராக மாறிய ஐஐஎம் பட்டதாரி டிரெண்டிங்
    ஐஓஎஸ் பயனர்களுக்கு ஏஐ மூலம் ப்ரொபைல் படங்களை உருவாக்கும் அம்சத்தை வெளியிட்டது வாட்ஸ்அப் வாட்ஸ்அப்
    வேற லெவல் சம்பவம்; நடிகர் கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தின் டிரெய்லர் வெளியானது கமல்ஹாசன்
    மனைவியுடன் வாக்குவாதத்தால் ஆற்றில் குதித்து காணாமல் போன கணவர்; காப்பாற்றப் போனவர் சடலமாக மீட்பு லக்னோ

    ஜாகுவார் லேண்டு ரோவர்

    டாடா மோட்டார்ஸ் மற்றும் ஜாகுவார் லேண்டு ரோவரின் புதிய எலெக்ட்ரிக் வாகனத் திட்டம் டாடா மோட்டார்ஸ்

    எலக்ட்ரிக் வாகனங்கள்

    2027-ம் ஆண்டு முதல் டீசல் வாகனங்களுக்கு தடை விதிக்க பரிந்துரைக்கும் மத்திய அமைச்சகம்! மத்திய அரசு
    இந்தியாவில் தங்கள் முதல் எலெக்ட்ரிக் காரை வெளியிடுத் திட்டமிட்டிருக்கும் ஸ்கோடா! எலக்ட்ரிக் கார்
    புதிய எலெக்ட்ரிக் மாடலை அறிமுகப்படுத்தியிருக்கிறது ஹோண்டா! ஹோண்டா
    புதிய சார்ஜிங் அமைப்புகள்.. ஷெல் இந்தியாவுடன் கைகோர்த்த ஹூண்டாய்! ஹூண்டாய்

    எலக்ட்ரிக் கார்

    இந்தியாவில் தொழிற்சாலையை அமைக்கும் டெஸ்லா? ஆட்டோமொபைல்
    எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை உயர்கிறதா? எலக்ட்ரிக் வாகனங்கள்
    டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தொழிற்சாலை அமைக்குமா? எலான் மஸ்க்
    புதிய எலெக்ட்ரிக் i5 மாடலை அறிமுகப்படுத்தியது BMW.. இந்தியாவில் வெளியீடு எப்போது? பிஎம்டபிள்யூ
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025