NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / உலகம் செய்தி / திடீரென்று பச்சையாக மாறிய வெனிஸ் கால்வாய்: காரணம் என்ன 
    திடீரென்று பச்சையாக மாறிய வெனிஸ் கால்வாய்: காரணம் என்ன 
    உலகம்

    திடீரென்று பச்சையாக மாறிய வெனிஸ் கால்வாய்: காரணம் என்ன 

    எழுதியவர் Sindhuja SM
    May 29, 2023 | 06:32 pm 1 நிமிட வாசிப்பு
    திடீரென்று பச்சையாக மாறிய வெனிஸ் கால்வாய்: காரணம் என்ன 
    இதே போல் 1968ஆம் ஆண்டிலும் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது என்று இணையவாசிகள் கூறி வருகின்றனர்.

    இத்தாலிய நகரமான வெனிஸில் இருக்கும் ஒரு கால்வாய் திடீரென்று பச்சை நிறமாக மாறி இருப்பது, உள்ளூர் வாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. இது எதனால் ஏற்பட்டிருக்கும் என்பது குறித்து பலரும் தங்கள் கருத்தை பதிவு செய்து வருகின்றனர். ஆனால், இதற்கான சரியான காரணம் இன்னும் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை. ஞாயிற்றுக்கிழமை(மே-28) காலை 9:30 மணியளவில் கிராண்ட் கால்வாயின் நிறம் மாறி இருப்பதை வெனிசியர்கள் முதன் முதலாக கண்டனர். "இன்று காலை வெனிஸ் கிராண்ட் கால்வாயின் நீர் பாஸ்போரெசென்ட் பச்சையாக மாறியது. ரியால்டோ பாலத்திற்கு அருகில் உள்ள சில குடியிருப்பாளர்களால் இது தெரிவிக்கப்பட்டது. அந்த நீரின் தோற்றம் குறித்து விசாரிக்க காவல்துறையினருக்கு முதல்வர் அழைப்பு விடுத்துள்ளார்" என்று வெனிட்டோ பிராந்திய தலைவர் லூகா ஜாயா ட்வீட் செய்துள்ளார்.

    இதே போல் 1968ஆம் ஆண்டிலும் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது

    செய்தி வெளியானவுடன், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நீரின் மாதிரியை சேகரித்தனர். அடுத்தபடியாக அவர்கள் அப்பகுதியைச் சுற்றியுள்ள சிசிடிவி கேமராக்களை சரிபார்த்தனர். சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான பிராந்திய ஏஜென்சியை சேர்ந்த மொரிசியோ வெஸ்கோ, "முதற்கட்ட பகுப்பாய்வின்படி, பச்சை சாயப்பொடி கால்வாயில் கலக்கப்பட்டிருக்கிறது" என்று கூறியுள்ளார். இதே போல் 1968ஆம் ஆண்டிலும் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது என்று இணையவாசிகள் கூறி வருகின்றனர். அப்போது, அர்ஜென்டினா கலைஞர் நிக்கோலஸ் கார்சியா உரிபுரு, சுற்றுச்சூழல் பிரச்சனைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக வருடாந்திர வெனிஸ் பைனாலேயின் போது கிராண்ட் கால்வாயில் பச்சை நிற சாயத்தை கலந்தார் என்று கூறப்படுகிறது. சென்ற வாரம், இத்தாலியில் உள்ள காலநிலை ஆர்வலர்கள் ரோமின் புகழ்பெற்ற ட்ரெவி நீரூற்றில் கரியை நிரப்பி போராட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    உலகம்
    உலக செய்திகள்

    உலகம்

    புதினுடன் ரகசிய சந்திப்பு நடத்திய பெலாரஸ் அதிபருக்கு திடீர் உடல் நல பாதிப்பு  உலக செய்திகள்
    துருக்கிய தேர்தலில் மீண்டும் வெற்றி: இருபது ஆண்டுளை தாண்டியும் அசராத எர்டோகன் ஆட்சி  உலக செய்திகள்
    புதுமைகளை முன்னெடுக்கும் உலகின் டாப் 50 நிறுவனங்கள்.. டாடா குழுமத்திற்கு 20வது இடம்! டாடா
    இரண்டாம் உலக போரின் வெடிக்காத குண்டு: போலந்தில் 2,500 பேர் வெளியேற்றம்  உலக செய்திகள்

    உலக செய்திகள்

    உலகின் மிகவும் பரிதாபகரமான நாடுகளின் பட்டியல்: முதலிடத்தை பிடித்தது ஜிம்பாப்வே இந்தியா
    திப்பு சுல்தானின் வாளுக்கு மட்டும் ரூ.140 கோடி: பிரிட்டன் அரசாங்கம் சுருட்டிய இந்திய சொத்துக்களின் பட்டியல் இந்தியா
    32 வருடங்களாக திணறி கொண்டிருக்கும் பாகிஸ்தான்: மீண்டும் ராணுவ ஆட்சியில் சிக்கி கொள்ளுமா  பாகிஸ்தான்
    சீனாவின் புதிய கொரோனா அலை: வாரந்தோறும் 65 மில்லியன் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு சீனா
    அடுத்த செய்திக் கட்டுரை

    உலகம் செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    World Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023