NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / திடீரென்று பச்சையாக மாறிய வெனிஸ் கால்வாய்: காரணம் என்ன 
    அடுத்த செய்திக் கட்டுரை
    திடீரென்று பச்சையாக மாறிய வெனிஸ் கால்வாய்: காரணம் என்ன 
    இதே போல் 1968ஆம் ஆண்டிலும் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது என்று இணையவாசிகள் கூறி வருகின்றனர்.

    திடீரென்று பச்சையாக மாறிய வெனிஸ் கால்வாய்: காரணம் என்ன 

    எழுதியவர் Sindhuja SM
    May 29, 2023
    06:32 pm

    செய்தி முன்னோட்டம்

    இத்தாலிய நகரமான வெனிஸில் இருக்கும் ஒரு கால்வாய் திடீரென்று பச்சை நிறமாக மாறி இருப்பது, உள்ளூர் வாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

    இது எதனால் ஏற்பட்டிருக்கும் என்பது குறித்து பலரும் தங்கள் கருத்தை பதிவு செய்து வருகின்றனர். ஆனால், இதற்கான சரியான காரணம் இன்னும் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை.

    ஞாயிற்றுக்கிழமை(மே-28) காலை 9:30 மணியளவில் கிராண்ட் கால்வாயின் நிறம் மாறி இருப்பதை வெனிசியர்கள் முதன் முதலாக கண்டனர்.

    "இன்று காலை வெனிஸ் கிராண்ட் கால்வாயின் நீர் பாஸ்போரெசென்ட் பச்சையாக மாறியது. ரியால்டோ பாலத்திற்கு அருகில் உள்ள சில குடியிருப்பாளர்களால் இது தெரிவிக்கப்பட்டது. அந்த நீரின் தோற்றம் குறித்து விசாரிக்க காவல்துறையினருக்கு முதல்வர் அழைப்பு விடுத்துள்ளார்" என்று வெனிட்டோ பிராந்திய தலைவர் லூகா ஜாயா ட்வீட் செய்துள்ளார்.

    details

    இதே போல் 1968ஆம் ஆண்டிலும் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது

    செய்தி வெளியானவுடன், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நீரின் மாதிரியை சேகரித்தனர்.

    அடுத்தபடியாக அவர்கள் அப்பகுதியைச் சுற்றியுள்ள சிசிடிவி கேமராக்களை சரிபார்த்தனர்.

    சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான பிராந்திய ஏஜென்சியை சேர்ந்த மொரிசியோ வெஸ்கோ, "முதற்கட்ட பகுப்பாய்வின்படி, பச்சை சாயப்பொடி கால்வாயில் கலக்கப்பட்டிருக்கிறது" என்று கூறியுள்ளார்.

    இதே போல் 1968ஆம் ஆண்டிலும் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது என்று இணையவாசிகள் கூறி வருகின்றனர்.

    அப்போது, அர்ஜென்டினா கலைஞர் நிக்கோலஸ் கார்சியா உரிபுரு, சுற்றுச்சூழல் பிரச்சனைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக வருடாந்திர வெனிஸ் பைனாலேயின் போது கிராண்ட் கால்வாயில் பச்சை நிற சாயத்தை கலந்தார் என்று கூறப்படுகிறது.

    சென்ற வாரம், இத்தாலியில் உள்ள காலநிலை ஆர்வலர்கள் ரோமின் புகழ்பெற்ற ட்ரெவி நீரூற்றில் கரியை நிரப்பி போராட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உலகம்
    உலக செய்திகள்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    உலகம்

    அமெரிக்கா: சதை உண்ணும் போதைப்பொருளால் ஜாம்பியாக மாறும் மக்கள்  அமெரிக்கா
    ஒரே பாலின தம்பதிகளுக்கு தத்தெடுக்கும் உரிமையை வழங்கியது தைவான்  தைவான்
    11,000 பேரை பணி நீக்கம் செய்யும் வோடபோன் நிறுவனம்.. ஏன்? வோடஃபோன்
    ஆஸ்திரேலிய பயணத்தை ரத்து செய்தார் ஜோ பைடன்: குவாட்  உச்சி மாநாடு  ரத்து செய்யப்பட்டது ஆஸ்திரேலியா

    உலக செய்திகள்

    தோஷகானா வழக்கில் இம்ரான் கான் மீதான குற்றப்பத்திரிக்கைக்கு தடை: உயர்நீதிமன்றம் பாகிஸ்தான்
    அல்-காதர் அறக்கட்டளை வழக்கில் இம்ரான் கானுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது  பாகிஸ்தான்
    'என்னை 10 ஆண்டுகள் சிறை வைக்க திட்டமிடுகிறார்கள்': இம்ரான் கான் குற்றச்சாட்டு  பாகிஸ்தான்
    போதை பொருள் உபயோகத்தை குற்றமற்றதாக மாற்ற இருக்கும்  மலேசியா   உலகம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025