NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத செயல்களுக்கு அமெரிக்க மண் பயன்படுத்தப்படுகிறதா?
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத செயல்களுக்கு அமெரிக்க மண் பயன்படுத்தப்படுகிறதா?
    கலிபோர்னியாவில் இந்துக்களுக்கு எதிராக அதிகரித்து வரும் வெறுப்பு குற்றங்கள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன

    இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத செயல்களுக்கு அமெரிக்க மண் பயன்படுத்தப்படுகிறதா?

    எழுதியவர் Venkatalakshmi V
    Mar 14, 2024
    03:17 pm

    செய்தி முன்னோட்டம்

    சிலிக்கான் பள்ளத்தாக்கில் உள்ள பிரபல இந்திய அமெரிக்கர்கள் குழு நடத்திய சிறப்பு கூட்டத்தில், இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு அமெரிக்க மண் பயன்படுத்தப்படுவதாகக் கூறியது.

    சிலிக்கான் பள்ளத்தாக்கில் உள்ள புகழ்பெற்ற இந்திய-அமெரிக்கர்கள் குழு, நீதித்துறை, எஃப்.பி.ஐ மற்றும் காவல்துறையின் மூத்த அதிகாரிகளுடன் ஒரு சிறப்புக் கூட்டத்தை நடத்தியது.

    அதில், இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு அமெரிக்க மண் பயன்படுத்தப்படுவதாகத் தெரிவித்தனர்.

    கலிபோர்னியாவில் இந்துக்களுக்கு எதிராக அதிகரித்து வரும் வெறுப்பு குற்றங்கள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

    அமெரிக்காவில் உள்ள சட்ட அமலாக்க அமைப்புகளால், இந்தியாவில் நடக்கும் பயங்கரவாத செயல்களுக்கு ஆதரவாக செயல்படுபவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை என, இந்திய-அமெரிக்கர்கள், தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியதாக பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.

    வன்முறை

    அமெரிக்காவில், இந்தியர்களை குறி வைத்த நடக்கும் வன்முறை

    பொதுவாக இந்திய-அமெரிக்கர்களுக்கும், குறிப்பாக இந்துக்களுக்கு எதிரான வெறுப்புக் குற்றங்கள் திடீரென அதிகரித்து வருவது, சமூகத்தில் மிகுந்த அச்சத்தையும், கவலையையும் ஏற்படுத்துகிறது என்று இந்திய அமெரிக்கர்கள் தெரிவித்தனர்.

    சான்பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய துணை தூதரக கட்டடத்தை எரிக்க முயன்றவர்கள் உட்பட, இந்திய தூதரக அதிகாரிகளை வெளிப்படையாக மிரட்டி, பயங்கரவாத சம்பவங்களுக்கு வெளிப்படையாக அழைப்பு விடுப்பவர்கள் உட்பட பயங்கரவாத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது, சட்ட அமலாக்க அமைப்புகளால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை என்று பல சமூக உறுப்பினர்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினர்.

    அதிகரித்து வரும் இந்த அச்சத்தை நிவர்த்தி செய்வதில் அல்லது இந்தியாவிற்கு எதிரான அமெரிக்காவின் பயங்கரவாத நடவடிக்கைகளை நிறுத்துவதில் காவல்துறை தங்களுக்கு அதிக உதவி செய்யவில்லை என்றும் சமூகத் தலைவர்கள் கவலை தெரிவித்தனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அமெரிக்கா
    இந்தியா
    பயங்கரவாதம்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    அமெரிக்கா

    வீடியோ: நடுவானில் காற்றோடு பறந்த அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானத்தின் கதவு; பரபரப்பான சூழலில் அவசர தரையிறக்கம்  விமானம்
    அலாஸ்கா ஏர்லைன்ஸின் 200க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து  விமானம்
    50 வருடங்களுக்கு பிறகு மீண்டும் நிலவை நோக்கிய பயணம்: வெற்றிகரமாக ஏவப்பட்டது அமெரிக்காவின் பெரேக்ரின் லேண்டர் நாசா
    அமெரிக்காவின் ஹூதி எதிர்ப்புப் போரில் இணைந்தது இலங்கை  இலங்கை

    இந்தியா

    கர்நாடகாவில் காங்கிரஸ் 3 ராஜ்யசபா தொகுதிகளில் வெற்றி: குறுக்கு வாக்கு மூலம் பாஜக 1 தொகுதியில் வெற்றி கர்நாடகா
    வீல் சேர் இல்லாமல் நடந்து சென்ற முதியவர் உயிரிழந்த விவகாரத்தில் ஏர் இந்தியாவிற்கு ரூ.30 லட்சம் அபராதம் ஏர் இந்தியா
    ஃபெராரியின் முதல் எஸ்யூவி இந்தியாவில் அதிகாரபூர்வமாக வெளியானது எஸ்யூவி
    மகாராஷ்டிராவில் 18 இடங்களில் போட்டியிட இருக்கும் காங்கிரஸ் மகாராஷ்டிரா

    பயங்கரவாதம்

    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்: இஸ்ரேலுக்கு ஆதரவளிக்க போர் கப்பல்களை அனுப்பியது அமெரிக்கா  இஸ்ரேல்
    கனடாவில் கொலை செய்யப்பட்ட பயங்கரவாதி நிஜ்ஜார் கொலையில் சீனாவுக்கு தொடர்பு உள்ளதா? சீனா
    பாலஸ்தீன மக்கள் வாழும் காசா பகுதியில் என்ன தான் பிரச்சனை? இஸ்ரேல்
    லெபனான், சிரியாவில் இருந்து இஸ்ரேல் மீது தாக்குதல்: பல நாட்டு போர் வெடிக்க வாய்ப்பு  இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025