NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / மூன்றாம் உலகப் போராக மாறுமா உக்ரைன் - ரஷ்யா மோதல்?
    அடுத்த செய்திக் கட்டுரை
    மூன்றாம் உலகப் போராக மாறுமா உக்ரைன் - ரஷ்யா மோதல்?
    சூடுபிடிக்கும் ரஷ்யா-உக்ரைன் போர் (படம்: Oneindia Tamil)

    மூன்றாம் உலகப் போராக மாறுமா உக்ரைன் - ரஷ்யா மோதல்?

    எழுதியவர் Sindhuja SM
    Dec 17, 2022
    07:00 pm

    செய்தி முன்னோட்டம்

    கடந்த பிப்ரவரி மாதம் ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்தது.

    10 மாதங்கள் கடந்துவிட்ட பின்னும் இந்த போர் ஓய்ந்ததாகத் தெரியவில்லை.

    ரஷ்யா உக்ரைனின் பல பகுதிகளைக் கைப்பற்றி இருக்கும் நிலையில் அதிபர் புதினின் குருவான அலெக்சாண்டர் டுகின் இந்த மோதல் மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்கும் என்று சூசகமாகத் தெரிவித்துள்ளார்.

    உக்ரைனின் தலைநகரான கீவ், கார்கிவ் போன்ற பல இடங்களைக் கைப்பற்றி இருக்கும் ரஷ்யா கடந்த சில நாட்களாக தன் தாக்குதலைத் தீவிர படுத்தி இருக்கிறது.

    போர் ஆரம்பித்ததில் இருந்து நடக்காத அளவு ஏவுகணைத் தாக்குதல் நேற்று நடந்திருக்கிறது.

    ரஷ்ய படையின் இந்த தாக்குதலால் உக்ரைனில் போர் பதட்டம் முன்பை விட அதிகமாகி இருக்கிறது.

    போர்

    ரஷ்யா-உக்ரைன் போர்: பிரதமர் மோடி கருத்து!

    இந்நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் புதினுடன் நேற்று(டிச.16) தொலைபேசி வாயிலாக பேசினார்.

    இந்த தொலைபேசி அழைப்பின் வாயிலாக, வர்த்தகம், ராணுவம், எரிசக்தி போன்ற துறைகளில் இந்தியா-ரஷ்யா இடையே நிலவும் நல்லுறவை வலுப்படுத்துவது குறித்து இருவரும் பேசினர்.

    இந்த பேச்சு வார்த்தையின் போது, ரஷ்யா-உக்ரைன் மோதல் பற்றியும் பிரதமர் மோடி பேசினார்.

    இது பற்றி பேசிய அவர், ரஷ்யா-உக்ரைன் போருக்கு பேச்சு வார்த்தையின் மூலமாக மட்டுமே தீர்வு காண வேண்டும் என்று ரஷ்ய அதிபரிடம் வலியுறுத்தியுள்ளார்.

    அப்போது பிரதமர் கூறிய கருத்துக்களுக்கு அமெரிக்கா வரவேற்பு தெரிவித்துள்ளது.

    இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை துணை செய்தி தொடர்பாளர் வேதந்த் படேல், "பிரதமர் மோடியின் கருத்துக்களை நாங்கள் வரவேற்கிறோம்." என்றார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    அமெரிக்கா

    சமீபத்திய

    130 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான ஏரி மீண்டும் உருவான அதிசயம்; நிலங்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் சோகம் அமெரிக்கா
    விரைவில் டும்டும்டும்... அதுவும் காதல் திருமணம்தான்.. நடிகர் விஷால் வெளியிட்ட தகவல் விஷால்
    ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவின் வரலாற்றுச் சாதனைக்கு பிரதமர் மோடி பாராட்டு நீரஜ் சோப்ரா
    பயங்கரவாதத்திற்கு எதிரான பூஜ்ஜிய சகிப்புத் தன்மை; இந்தியாவின் நிலையை உலக நாடுகளுக்கு தெரிவிக்க குழுக்கள் அமைப்பு ஆபரேஷன் சிந்தூர்

    இந்தியா

    இமாச்சல் முதல்வர் யார்? - இன்று முதல்வர் வேட்பாளர் தேர்வு தேர்தல்
    மனித உரிமைகள் தினத்தில், மனித உரிமைகளின் முக்கியத்துவத்தையும், அதற்கான வரலாற்றையும் தெரிந்துகொள்ளவோம் வாழ்க்கை
    கூகுளுக்கு எதிராக மனு தாக்கல் செய்த நபருக்கு 25 ஆயிரம் அபராதம்! கூகிள் தேடல்
    புர்காவுடன் நடனமாடிய 5 இஸ்லாமிய மாணவர்கள்: சஸ்பெண்ட் செய்த நிர்வாகம்! இந்தியா

    அமெரிக்கா

    உலக அழகி போட்டியில் சாதித்த தமிழக பெண்! இந்தியா
    தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமண சட்டத்தில் கையெழுத்திட்டார் அமெரிக்க அதிபர்! இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025