NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / 7 பிறந்த குழந்தைகளைக் கொன்ற பிரிட்டிஷ் செவிலியர்
    அடுத்த செய்திக் கட்டுரை
    7 பிறந்த குழந்தைகளைக் கொன்ற பிரிட்டிஷ் செவிலியர்
    ஒவ்வொரு குழந்தையையும் வெவ்வேறு விதமாக இவர் கொன்றதாக கூறப்படுகிறது.

    7 பிறந்த குழந்தைகளைக் கொன்ற பிரிட்டிஷ் செவிலியர்

    எழுதியவர் Sindhuja SM
    Aug 19, 2023
    11:42 am

    செய்தி முன்னோட்டம்

    பிரிட்டனில் 7 பிறந்த குழந்தைகளை கொன்றுவிட்டு, 6 குழந்தைகளை கொல்ல முயன்ற பெண் செவிலியரின் வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பிரிட்டனில் உள்ள செஸ்டர் மருத்துவமனையின் பிறந்த-குழந்தைகள் பிரிவில் பணியாற்றியவர் லூசி லெட்பி(33) ஆவார்.

    ஜூன் 2015 மற்றும் ஜூன் 2016க்கு இடையில், இந்த செவிலியர் 7 குழந்தைகளைக் கொன்றதாகவும், 6 குழந்தைகளைக் கொல்ல முயன்றதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு குழந்தையையும் வெவ்வேறு விதமாக இவர் கொன்றதாக கூறப்படுகிறது.

    காலியான ஊசியின் மூலம் குழந்தைகளின் உடலில் காற்றை செலுத்தியது, இன்சுலின் விஷம் கொடுத்தது, வலுக்கட்டாயமாக குழந்தைகளுக்கு பால் ஊட்டியது போன்ற குற்றங்கள் இவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.

    பிஜின்

    லூசி லெட்பி குறித்து போலீஸாருக்கு தகவல் அளித்த பிரிட்டன்-இந்தியர் 

    லூசி லெட்பியின் நடவடிக்கைகள் மற்றும் 7 குழந்தைகளின் வினோதமான மரணம் குறித்து செஸ்டர் மருத்துவமனையின் மருத்துவர் ரவி ஜெயராம் முதன்முதலில் சந்தேகித்திருக்கிறார்.

    பிரிட்டனில் வசிக்கும் இந்தியரான இவர்தான் இந்த சம்பவங்கள் குறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார்.

    இதனையடுத்து, லூசி மீது 2020 நவம்பரில் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    அவரது விசாரணை அக்டோபர் 2022 இல் தொடங்கி 10 மாதங்களுக்கும் மேலாக நீடித்தது.

    விசாரனையில் போது, லூசியின் படுக்கையறையில் இருந்து மீட்கப்பட்ட 2016 ஆம் ஆண்டின் ஒரு நாட்குறிப்பில், "நான் அவர்களை வேண்டுமென்றே கொன்றேன்." என்று அவர் எழுதியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    மேலும், மான்செஸ்டர்-கிரவுன் நீதிமன்றம் வரும் திங்கள்கிழமை(ஆகஸ்ட் 21) லூசி லெட்பிக்கான தண்டனையை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பிரிட்டன்
    இங்கிலாந்து
    உலகம்

    சமீபத்திய

    IPL 2025: SRH ஹர்ஷல் படேல் 150 ஐபிஎல் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை ஐபிஎல் 2025
    உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு தயார்: அமெரிக்கா அதிபர் டிரம்ப் உடன் பேசிய ரஷ்யா அதிபர் புடின் ரஷ்யா
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    அமெரிக்காவே செய்யும் போது, உங்களுக்கு என்ன?- தீவிரவாதிகளை பாக்., ஒப்படைக்க வேண்டும் என இந்திய தூதர் வலியுறுத்தல் இந்தியா

    பிரிட்டன்

    துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் இருந்து ஆண்டி முர்ரே விலகல் விளையாட்டு
    பாதுகாப்பைக கருதி டிக்டாக் ஆப் நியூசிலாந்திலும் தடை - அதிரடி உத்தரவு மொபைல் ஆப்ஸ்
    ஜாலியன் வாலாபாக் படுகொலை: தெரிந்ததும் தெரியாததும்- பாகம் 1 இந்தியா
    ஜாலியன் வாலாபாக் படுகொலை: தெரிந்ததும் தெரியாததும்- பாகம் 2 இந்தியா

    இங்கிலாந்து

    இந்திய தூதரகத்திற்கு எதிரான வன்முறையை ஏற்றுக்கொள்ள முடியாது: இங்கிலாந்து வெளியுறவுத் துறை இந்தியா
    லண்டனில் உள்ள இந்திய தூதரக பிரச்சனை: டெல்லி காவல்துறை வழக்கு பதிவு இந்தியா
    பாம்பே ஜெய ஸ்ரீ உடல்நலம் சீராக உள்ளது - ட்விட்டரில் தகவல் பாடகர்
    பிரிட்டிஷ் பெண்கள் பாகிஸ்தானிய கும்பல்களால் குறிவைக்கப்படுகிறார்கள்: UK உள்துறை செயலர் குற்றச்சாட்டு யுகே

    உலகம்

    ஆப்கானிஸ்தான்: 'அறநெறியற்ற' இசைக்கருவிகளை தீயிலிட்டு எரித்த தாலிபான்கள் ஆப்கானிஸ்தான்
    புகைபிடிப்பதைத் தடுக்க நான்கு நாடுகள் மட்டுமே முயற்சித்து வருகின்றன: உலக சுகாதார அமைப்பு  உலக செய்திகள்
    மியான்மார்: ஆங் சான் சூகிக்கு மன்னிப்பு வழங்க இராணுவ அரசாங்கம் முடிவு  மியான்மர்
    சீனாவில் 4 நாட்களாக தொடரும் கனமழை, வெள்ளம்: 11 பேர் பலி  சீனா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025