433 ஆண்டுகால கல்வி நிறுவன வரலாற்றில் முதல்முறையாக கட்டிடத்திற்கு பெண்ணின் பெயரை வைத்த டப்ளின் டிரினிட்டி கல்லூரி
செய்தி முன்னோட்டம்
கல்வி நிறுவனம் தொடங்கி 433 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறையாக, டப்ளின் டிரினிட்டி கல்லூரி ஒரு கட்டிடத்திற்கு ஒரு பெண்ணின் பெயரை சூட்டியுள்ளது.
புகழ்பெற்ற ஐரிஷ் கவிஞர் ஈவன் போலண்டின் நினைவாக அதன் பிரதான நூலகத்தை மறுபெயரிட்டுள்ளது.
பிரிட்டனின் முதலால் ராணி எலிசபெத்தால் நிறுவப்பட்ட போதிலும், அயர்லாந்தின் முன்னணி பல்கலைக்கழகத்தில் உள்ள அனைத்து முந்தைய கட்டிடங்களும் ஆண்களின் பெயர்களைக் கொண்டிருந்தன.
ஐரிஷ் சமூகத்தில் பெண்களின் பாத்திரங்களை எடுத்துக்காட்டும் கவிதைகளுக்கு பெயர் பெற்ற போலண்ட், 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் படைப்பு எழுத்து இயக்குநராகவும் பணியாற்றினார்.
இந்த நூலகத்திற்கு முன்னர் அடிமைத்தனத்தை ஆதரிப்பவராக அறியப்பட்ட தத்துவஞானி ஜார்ஜ் பெர்க்லியின் பெயர் இருந்தது.
கறுப்பினத்தவர்கள்
அமெரிக்காவில் கறுப்பினத்தவர்களின் பிளாக் லைவ்ஸ் மேட்டர் இயக்கம்
2020 இல் ஜார்ஜ் ஃபிலாய்டின் கொலையால் தூண்டப்பட்ட பிளாக் லைவ்ஸ் மேட்டர் இயக்கம் உட்பட இன நீதி குறித்த உலகளாவிய விவாதங்களுக்கு மத்தியில், டிரினிட்டி மாணவர்கள் பெயர் மாற்றத்திற்காக பிரச்சாரம் செய்தனர்.
பெர்க்லியின் மரபு பல்கலைக்கழகத்தின் மதிப்புகளுடன் முரண்படுவதாக வாதிட்டனர். நூலகத்தின் பெயரை மாற்றுவதற்கான முடிவு 855 பொது முன்மொழிவுகளைத் தொடர்ந்து எடுக்கப்பட்டது.
பல்கலைக்கழக அதிகாரிகள் இந்த நடவடிக்கையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, பெயர் மாற்றத்தினை நினைவுகூரும் ஒரு தகடு மார்ச் 10 அன்று ஒரு சிறப்பு விழாவில் திறக்கப்படும் என்றனர்.
அதே நேரத்தில் போலாண்டின் பெயர் பலகை பின்னர் நிறுவப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.