NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / குறையும் ஜனதொகை கவலைகளுக்கிடையே வாரத்தில் 4 நாள் வேலை திட்டத்தை அறிமுகம் செய்யவுள்ளது டோக்கியோ
    அடுத்த செய்திக் கட்டுரை
    குறையும் ஜனதொகை கவலைகளுக்கிடையே வாரத்தில் 4 நாள் வேலை திட்டத்தை அறிமுகம் செய்யவுள்ளது டோக்கியோ

    குறையும் ஜனதொகை கவலைகளுக்கிடையே வாரத்தில் 4 நாள் வேலை திட்டத்தை அறிமுகம் செய்யவுள்ளது டோக்கியோ

    எழுதியவர் Venkatalakshmi V
    Dec 10, 2024
    11:22 am

    செய்தி முன்னோட்டம்

    டோக்கியோ அரசாங்கம் இளம் குடும்பங்களை ஊக்குவிப்பதற்காகவும், நாட்டின் வரலாற்று ரீதியாக குறைந்த கருவுறுதல் விகிதங்களை உயர்த்துவதற்காகவும் தனது ஊழியர்களுக்கு நான்கு நாள் வேலை வாரத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது என ஹிந்துஸ்தான் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

    டோக்கியோ கவர்னர் யூரிகோ கொய்கே, பெருநகர அரசாங்கத்தின் ஊழியர்கள் ஏப்ரல் மாதம் தொடங்கி ஒவ்வொரு வாரமும் மூன்று நாட்கள் விடுமுறை எடுக்க முடியும் என்று அறிவித்தார்.

    "வளைந்து கொடுக்கும் தன்மையுடன், பிரசவம் அல்லது குழந்தை பராமரிப்பு போன்ற வாழ்க்கை நிகழ்வுகள் காரணமாக யாரும் தங்கள் தொழிலை விட்டுக்கொடுக்க வேண்டியதில்லை என்பதை உறுதிசெய்ய பணி முறைகளை நாங்கள் மதிப்பாய்வு செய்வோம்," என்று அவர் டோக்கியோ பெருநகர சட்டசபையின் நான்காவது வழக்கமான அமர்வில் கொள்கை உரையில் கூறினார்.

    நடவடிக்கை

    மக்கள் தொகையை அதிகரிக்க தொடர் நடவடிக்கையில் ஜப்பான் அரசு

    ஜப்பானின் கருவுறுதல் விகிதம் மிகக் குறைவாக இருப்பதாக கண்டறியப்பட்டுள்ள இந்த தருணத்தில், புதிய கொள்கையானது தம்பதிகளை பெற்றோராக ஆக்குவதை ஊக்குவிக்கிறது.

    சுகாதாரம், தொழிலாளர் மற்றும் நலன் அமைச்சகத்தின் கூற்றுப்படி, இளைஞர்கள் குடும்பங்களைத் தொடங்குவதற்கு ஊக்குவிப்பதற்காக அரசாங்கம் தீவிர முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், கடந்த ஆண்டு ஒரு பெண்ணின் வாழ்நாள் முழுவதும் அது வெறும் 1.2 குழந்தைகளாகக் குறைந்தது.

    மக்கள் தொகை சீராக இருக்க, அந்த எண்ணிக்கை குறைந்தது 2.1 ஆக இருக்க வேண்டும்.

    டோக்கியோ கவர்னர் Koike ஒரு புதிய கொள்கையை அறிவித்தார்.

    அதன்படி, ஆரம்ப பள்ளி வயது குழந்தைகளின் பெற்றோர்கள் தங்கள் ஊதியத்தில் ஒரு பகுதியாக, சீக்கிரமாக ஆபீஸ் விட்டு வெளியேறும் வாய்ப்பாக மாற்றிக்கொள்ள அனுமதிக்கும்.

    பிறப்பு

    குறையும் ஜப்பானின் பிறப்பு சதவீதம்

    சுகாதாரம், தொழிலாளர் மற்றும் நலத்துறை அமைச்சகத்தின்படி, ஜப்பானில் கடந்த ஆண்டு வெறும் 727,277 பிறப்புகள் மட்டுமே பதிவாகியுள்ளன.

    ஜப்பானில் அதிக நேர வேலை செய்யும் கலாச்சாரம், குழந்தைகளைப் பெற்றெடுப்பதற்கும், வேலை செய்வதற்கும் இடையே அடிக்கடி பெண்களைத் தேர்வு செய்யும்படி கட்டாயப்படுத்துகிறது.

    அறிவிக்கப்பட்ட புதிய ஏற்பாடு மூலமாக டோக்கியோ பெருநகர அரசாங்கத்தின் 160,000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை அளிக்கும்.

    நான்கு நாள் வேலை வாரம் அரசாங்க ஊழியர்களுக்கு அவர்களின் குடும்பங்களுடன் செலவிட அதிக நேரத்தை வழங்கம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஜப்பான்

    சமீபத்திய

    இனியும் வெளிநாடுகளிடம் பிச்சை எடுக்க முடியாது; ராணுவ வீரர்கள் மத்தியில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் பாகிஸ்தான்
    கருக்கலைப்பு மாத்திரையைக் கண்டுபிடித்த எட்டியென்-எமிலி பவுலியூ 98 வயதில் காலமானார் பிரான்ஸ்
    ஐபிஎல் 2025 எம்ஐvsபிபிகேஎஸ்: டாஸ் வென்றது பிபிகேஎஸ்; மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங் ஐபிஎல் 2025
    ரஷ்ய விமான தளங்களை குறிவைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல்; விமானங்களுக்கு சேதம் என தகவல் உக்ரைன்

    ஜப்பான்

    சுனாமி எச்சரிக்கை: அவசர எண்களை அறிவித்தது ஜப்பானில் உள்ள இந்திய தூதரகம் இந்தியா
    புத்தாண்டு தினத்தன்று ஜப்பானில் 155 நிலநடுக்கங்கள்: 48 பேர் பலி, ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம் நிலநடுக்கம்
    டோக்கியோவில் தீப்பிடித்து எரிந்த ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம்: என்ன நடந்தது? விமானம்
    கடலோர காவல்படை விமானத்தின் மீது மோதி தீப்பிடித்த ஜப்பான் விமானம்: 5 பேர் பலி  விமானம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025