NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / திபெத்தில் ஏற்பட்ட 6 நிலநடுக்கங்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 126 ஆக உயர்வு
    அடுத்த செய்திக் கட்டுரை
    திபெத்தில் ஏற்பட்ட 6 நிலநடுக்கங்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 126 ஆக உயர்வு
    நிலநடுக்கங்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 126 ஆக உயர்வு

    திபெத்தில் ஏற்பட்ட 6 நிலநடுக்கங்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 126 ஆக உயர்வு

    எழுதியவர் Venkatalakshmi V
    Jan 08, 2025
    08:40 am

    செய்தி முன்னோட்டம்

    நேபாளம்- திபெத் எல்லையில் நேற்று சக்திவாய்ந்த 7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உட்பட ஆறு நிலநடுக்கங்கள் தாக்கின.

    திபெத்தின் டிங்ரி கவுண்டியை மையமாகக் கொண்ட இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை அதிர்வுகள் இந்தியா, நேபாளம் மற்றும் பூட்டான் வரை உணரப்பட்டது.

    இதில் பல உயிர்கள் பலியானதுடன் கட்டிடங்களும் இடிந்து விழுந்துள்ளது. ஆரம்பத்தில், குறைவான உயிரிழப்புகள் ஏற்பட்டதாக அறிக்கைகள் சுட்டிக்காட்டின.

    ஆனால் மீட்புக் குழுக்கள் இடிபாடுகள் இடையே சிக்கியவர்களை மீட்க எத்தனிக்கையில் இறப்பு எண்ணிக்கை 126 ஆக உயர்ந்தது, 188 க்கும் அதிகமானோர் காயமடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

    விவரங்கள்

    7 மாவட்டங்களை தாக்கிய நிலநடுக்கம்

    தென்மேற்கு சீனாவின் திபெத் தன்னாட்சிப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து மீட்புப் பணியாளர்கள் உயிர் பிழைத்தவர்களைத் தேடி வருகின்றனர்.

    திபெத்தின் எல்லையில் உள்ள ஏழு மலை மாவட்டங்களில் இந்த அதிர்வு உணரப்பட்டதாக அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

    நிலநடுக்கத்திற்கான தேசிய மையத்தின் படி, நேபாள-திபெத் எல்லைக்கு அருகில் உள்ள ஜிசாங்கில் காலை 6:35 மணியளவில் முதல் 7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

    இந்த தீவிரம் வலுவானதாகக் கருதப்படுகிறது மற்றும் கடுமையான சேதத்தை ஏற்படுத்தும் திறன் கொண்டது.

    திபெத்தின் இரண்டாவது பெரிய நகரமான ஷிகாட்சே நகரில் சீன அதிகாரிகள் 6.8 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளனர்.

    அதே Xizang பகுதியில் இருந்து 4.7 மற்றும் 4.9 தீவிரம் கொண்ட இரண்டு அதிர்வுகள் பதிவாகியுள்ளன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    திபெத்
    நிலநடுக்கம்

    சமீபத்திய

    ஐபிஎல் 2025 எம்ஐvsபிபிகேஎஸ்: டாஸ் வென்றது பிபிகேஎஸ்; மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங் ஐபிஎல் 2025
    ரஷ்ய விமான தளங்களை குறிவைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல்; விமானங்களுக்கு சேதம் என தகவல் உக்ரைன்
    மனிதர்களின் மனநிலையில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் ஏஐ சாட்பாட்கள்; ஆய்வறிக்கையில் வெளியான அதிர்ச்சித் தகவல் செயற்கை நுண்ணறிவு
    பெண்களிடையே அதிகரித்து வரும் தைராய்டு கோளாறுகள்; அறிகுறிகள் மற்றும் தடுப்பு முறைகள் தைராய்டு

    திபெத்

    சீனா ஒரு அங்குலம் வெளிநாட்டு நிலத்தை கூட ஆக்கிரமிக்கவில்லை- ஜி ஜின்பிங் குடியரசு தலைவர்
    திபெத்தை பலமுறை தாக்கிய நிலநடுக்கம்; டெல்லியின் பல பகுதிகளிலும் உணரப்பட்ட அதிர்வு  நிலநடுக்கம்
    திபெத்தில் ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்களில் கிட்டத்தட்ட 100 பேர் உயிரிழப்பு நிலநடுக்கம்

    நிலநடுக்கம்

    ஹரியானா, டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் நிலநடுக்கம்  டெல்லி
    நேபாளத்தில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: டெல்லியில் நிலஅதிர்வு  நேபாளம்
    நேபாளத்தில் ஏற்பட்ட 6.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் 128 பேர் உயிரிழந்துள்ளனர்; 140 பேர் படுகாயம் நேபாளம்
    நேபாளம் நிலநடுக்கம்: அதிகரிக்கும் பலி எண்ணிக்கை  நேபாளம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025