NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / அமெரிக்க வரலாற்றின் இருண்ட காலம் இது: பைடன் அரசாங்கத்தின் மீது டிரம்ப் பாய்ச்சல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    அமெரிக்க வரலாற்றின் இருண்ட காலம் இது: பைடன் அரசாங்கத்தின் மீது டிரம்ப் பாய்ச்சல்
    அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சாடிய முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப்

    அமெரிக்க வரலாற்றின் இருண்ட காலம் இது: பைடன் அரசாங்கத்தின் மீது டிரம்ப் பாய்ச்சல்

    எழுதியவர் Sindhuja SM
    Apr 05, 2023
    11:40 am

    செய்தி முன்னோட்டம்

    2016ஆம் ஆண்டு, தேர்தல் பிரச்சாரத்தின் போது, ஒரு ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்ததாக முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றம்சாட்டப்பட்டுள்ள நிலையில், பைடன் அரசாங்கத்தை அவர் தாக்கி பேசி இருக்கிறார்.

    அமெரிக்காவின் முன்னாள் அதிபரும் குடியரசுக் கட்சியின் தலைவருமான டொனால்டு டிரம்ப், ஆபாச நடிகையான ஸ்டோர்மி டேனியல்ஸுக்கு பணம் செலுத்திய வழக்கில் செவ்வாய்க்கிழமை அன்று நீதிமன்றத்தில் ஆஜரானார்.

    அதனையடுத்து, புளோரிடாவில் உள்ள தனது மார்-ஏ-லாகோ இல்லத்தில் ஆதரவாளர்கள் கூட்டத்தில் பேசிய அவர் பைடன் அரசாங்கத்தை சாடியுளளார்.

    குடியரசுக் கட்சியினரை குறிவைத்து, அரசு நிறுவனங்களுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு ஆளும் ஜனநாயகக் கட்சி சதி செய்வதாக அவர் குற்றம் சாட்டியனார்.

    அமெரிக்கா

    நம் நாடு நரகமாகி கொண்டிருக்கிறது: டிரம்ப்

    இந்த வழக்கில் 34 குற்றச் செயல்களில் டிரம்ப் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஆனால், இவை அனைத்தையும் அவர் மறுத்துள்ளார்.

    ட்ரம்பை குற்றவாளியாக்க ஜனநாயகக் கட்சியினர் செய்யும் சதி இது என்று குடியரசுக் கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

    குற்றம் நிரூபிக்கப்பட்டால், குடியரசுக் கட்சியின் முன்னணி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் 2024ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து நீக்கப்படுவார்.

    இந்நிலையில், தன் ஆதரவாளர்களிடம் பேசிய டிரம்ப், "அமெரிக்காவில் இப்படியெல்லாம் நடக்கும் என்று நான் நினைக்கவே இல்லை. நான் செய்த ஒரே குற்றம், நம் தேசத்தை அழிக்க நினைப்பவர்களிடமிருந்து அச்சமின்றி அதை பாதுகாத்ததுதான். அமெரிக்க வரலாற்றின் இருண்ட காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நம் நாடு நரகமாகி கொண்டிருக்கிறது." என்று கூறி இருக்கிறார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உலகம்
    ஜோ பைடன்
    அமெரிக்கா

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    உலகம்

    ஜப்பானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6ஆக பதிவு ஜப்பான்
    மகாத்மா காந்தி சிலையை சிதைத்த காலிஸ்தான் ஆதரவாளர்கள் கனடா
    சுனாமியை உருவாக்கக்கூடிய ஆளில்லா நீர்மூழ்கிக் கப்பல்: வடகொரியா சோதனை வட கொரியா
    ஹிண்டன்பர்க்கின் அடுத்த அறிக்கை - ஒரே நாளில் சரிந்த block inc நிறுவனம்! தொழில்நுட்பம்

    ஜோ பைடன்

    திடீரென்று உக்ரைனுக்கு சென்ற அமெரிக்க அதிபர் உக்ரைன் ஜனாதிபதி

    அமெரிக்கா

    அமெரிக்காவில் அடுத்த வங்கியும் மூடல் - ஜோ பைடன் கொடுத்த உத்தரவாதம் வங்கிக் கணக்கு
    அமெரிக்க ஆளில்லா விமானத்துடன் நேருக்கு நேர் மோதிய ரஷ்ய ஜெட் விமானம் உலகம்
    எரிக் கார்செட்டியை இந்தியாவிற்கான அடுத்த அமெரிக்க தூதராக நியமிக்குமா அமெரிக்கா இந்தியா
    திருவள்ளூர் மாவட்ட காட்டுப்பள்ளி துறைமுகத்தில் அமெரிக்க கப்பல் பழுது பார்ப்பு தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025