NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / டெஸ்லா நிறுவனத்தின் மீது தொடர்ந்து குவியும் 'இனப் பாகுபாடு' குற்றச்சாட்டுக்கள்!
    அடுத்த செய்திக் கட்டுரை
    டெஸ்லா நிறுவனத்தின் மீது தொடர்ந்து குவியும் 'இனப் பாகுபாடு' குற்றச்சாட்டுக்கள்!
    டெஸ்லாவின் மீது இனப் பாகுபாடு குற்றச்சாட்டுக்கள்

    டெஸ்லா நிறுவனத்தின் மீது தொடர்ந்து குவியும் 'இனப் பாகுபாடு' குற்றச்சாட்டுக்கள்!

    எழுதியவர் Prasanna Venkatesh
    Jun 06, 2023
    10:54 am

    செய்தி முன்னோட்டம்

    டெஸ்லா நிறுவனத்தின் அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள ப்ரெமாண்டில் கார் தயாரிப்பு தொழிற்சாலை ஒன்று உள்ளது.

    இந்த தொழிற்சாலையில் இனம் சார்ந்த பாகுபாடு அதிகம் இருப்பதாகவும், தாங்கள் இங்கு பாதுகாப்பாக உணரவில்லை என்றும் 2017-ல் முன்னாள் டெஸ்லா ஊழியரான மார்க்கஸ் வாகன் டெஸ்லா நிறுவனத்தின் மீது வழக்கு ஒன்றை பதிவு செய்திருந்தார்.

    அப்போதே 2016-17-ல் டெஸ்லாவின் அந்தத் தொழிற்சாலையில் வேலை பார்த்த 100-க்கு மேற்பட்ட கருப்பினத்தவர்கள் மார்க்கஸின் வழக்கிற்கு ஆதரவு தெரிவித்திருந்தனர்.

    தற்போது அந்நிறுவனத்தின் இனப் பாகுபாட்டால் பாதிக்கப்பட்ட மேலும் 100 பேரின் வாக்குமூலத்தை தன்னுடைய வழக்கோடு இணைத்து, 2017-ல் தான் தொடர்ந்த வழக்கை கிளாஸ்-ஆக்ஷன் வழக்காக மாற்ற கோரிக்கை விடுத்திருக்கிறார் மார்க்கஸ்.

    டெஸ்லா

    டெஸ்லா மீது கிளாஸ்-ஆக்ஷன் வழக்கு: 

    அதிகம் பேர் கொண்ட ஒரு குழவின் சார்பில் தொடரப்படும் வழக்கு கிளாஸ்-ஆக்ஷன் வழக்கு எனப்படுகிறது. இவ்வகை வழக்குகள் ஒரு நிறுவனத்தின் மீது தொடரப்பட்டால், அந்நிறுவனம் அளிக்க வேண்டிய இழப்பீட்டின் அளவு அதிகரிக்கும்.

    தங்கள் நிறுவனத்தின் தொழில்சாலைகளில் இனப் பாகுபாடு இருப்பது என்பதே முற்றிலும் பொய்யான குற்றச்சாட்டு எனக் கூறி தங்களுடைய வலைப்பூவின் பதிவொன்றையும் பதிவு செய்திருக்கிறது டெஸ்லா.

    டெஸ்லா நிறுவனம் தங்கள் பணியாளர்களுக்கிடையே இனப் பாகுபாடு ஏற்படுவதைத் தடுக்கவில்லை எனக் கூறி அந்நிறுவனத்தின் மீது தொடரப்பட்ட இதே போன்ற ஒரு வழக்கில் பாதிக்கப்பட்டவருக்கு 3.2 மில்லியன் டாலர்கள் நஷ்ட ஈடு வழங்க கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவிட்டிருக்கிறது சான் பிரான்சிஸ்கோ நீதிமன்றம்.

    அதனைத் தொடர்ந்து தற்போது இந்த வழக்கும் மீண்டும் விசாரணைக்கு வரவிருக்கிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டெஸ்லா
    எலான் மஸ்க்
    அமெரிக்கா

    சமீபத்திய

    இனியும் வெளிநாடுகளிடம் பிச்சை எடுக்க முடியாது; ராணுவ வீரர்கள் மத்தியில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் பாகிஸ்தான்
    கருக்கலைப்பு மாத்திரையைக் கண்டுபிடித்த எட்டியென்-எமிலி பவுலியூ 98 வயதில் காலமானார் பிரான்ஸ்
    ஐபிஎல் 2025 எம்ஐvsபிபிகேஎஸ்: டாஸ் வென்றது பிபிகேஎஸ்; மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங் ஐபிஎல் 2025
    ரஷ்ய விமான தளங்களை குறிவைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல்; விமானங்களுக்கு சேதம் என தகவல் உக்ரைன்

    டெஸ்லா

    உலக பணக்காரர்கள் பட்டியல்.. மீண்டும் முதலிடத்தைப் பிடித்த எலான் மஸ்க்! எலான் மஸ்க்

    எலான் மஸ்க்

    பின்தொடராத கணக்குகளில் இருந்து தோன்றும் பதிவு - பயனர்கள் கொந்தளிப்பு! ட்விட்டர்
    எதிர்வரும் நாட்களில் Ai பயன்படுத்துவோம் - எலான் மஸ்க் அடுத்த அப்டேட்! ட்விட்டர்
    உலகளவில் செயல்படும் புளூ டிக் சேவை - பழைய வெரிஃபைடு முறை நிறுத்தம்! ட்விட்டர்
    ட்விட்டர் புளூ சந்தாதாரர்களுக்கு மறைக்கும் புதிய வசதி அறிமுகம்! எப்போது? ட்விட்டர்

    அமெரிக்கா

    நிலவுக்குச் விண்கலத்தை அனுப்பும் நாசாவின் புதிய திட்டம்!  நாசா
    எவரெஸ்ட் சிகரத்தில் மலையேறிய அமெரிக்கர் மரணம்! சீசனில் 4வது உயிரிழப்பு உலக செய்திகள்
    உக்ரைன் போர்: 5 மாதத்தில் 20,000 ரஷ்ய வீரர்கள் பலி உக்ரைன்
    உலகளாவிய மருத்துவ பரிசோதனைகளை நடத்துவதற்கு சாதகமான இடமாக இந்தியா வளர்ந்து வருகிறது இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025