NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / போலீசாருக்கு எதிராக போராட்டம்: தண்ணீர் பீரங்கி தாக்குதலில் ஷாம்பூ போட்டு குளித்த இலங்கை தமிழர்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    போலீசாருக்கு எதிராக போராட்டம்: தண்ணீர் பீரங்கி தாக்குதலில் ஷாம்பூ போட்டு குளித்த இலங்கை தமிழர்கள்
    போராட்ட களத்தில் 'ஷாம்பூ' போட்டு குளிக்கும் இலங்கை தமிழர்கள்

    போலீசாருக்கு எதிராக போராட்டம்: தண்ணீர் பீரங்கி தாக்குதலில் ஷாம்பூ போட்டு குளித்த இலங்கை தமிழர்கள்

    எழுதியவர் Sindhuja SM
    Jan 17, 2023
    11:24 am

    செய்தி முன்னோட்டம்

    ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இலங்கை தமிழர்கள் யாழ் பல்கலைக்கழகத்திற்கு அருகில் ஞாயிற்றுக்கிழமை(ஜன:15) ஒன்றுகூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டக்காரர்களை கலைக்க, இலங்கை போலீசார் அவர்கள் மீது தண்ணீர் பீரங்கிகளை பாய்ச்சி அடித்தனர்.

    ஆனால், இதெற்கெல்லாம் அசராத தமிழ் போராட்டக்காரர்கள் பீய்ச்சி அடித்த தண்ணீரில் அங்கேயே நின்று 'ஷாம்பூ' போட்டு குளித்தனர்.

    இந்த போராட்டத்தின் காட்சிகளை தமிழ் கார்டியன் பத்திரிகையாளர் டாக்டர் துசியன் நந்தகுமார் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

    இலங்கை தமிழர்கள்

    மாட்டு சாணத்தை வீசி பதிலடி

    நல்லூரில் நடந்த மோதலின் போது போராட்டக்காரர்கள் காவல்துறை மீது மாட்டு சாணம் கலந்த தண்ணீரை வீசியதையும் தமிழ் கார்டியன் காட்சிகள் காட்டுகின்றன.

    நல்லூர் அரசடி வீதி - வாய்மன் வீதி சந்திப்பில் போராட்டக்காரர்கள் பேரணியாகச் சென்ற இடத்தில் இலங்கை போலீஸார் தடுப்புகளை அமைத்துள்ளனர். அந்த தடுப்புகளை தாண்டி செல்ல முயன்றபோது போராட்டக்காரர்கள் மீது தண்ணீர் பீரங்கி வீசப்பட்டது.

    ஆயுதமேந்திய STF வீரர்கள் உட்பட பலத்த இராணுவ வீரர்களின் பாதுகாப்புக்கு மத்தியில் எதிர்ப்பாளர்கள் முன்னேறி போராட்டம் நடத்தினர்.

    தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கவும், ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர்களின் நிலங்களை விடுவிக்கவும் வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இலங்கைத் தமிழர்கள்
    இலங்கை
    உலகம்

    சமீபத்திய

    சென்னையில் அதிகாலை முதல் மிதமழை; தமிழகத்தில் இன்று கனமழை எச்சரிக்கை எங்கே? தமிழகம்
    தீவிரமான புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் ஜோ பைடன்
    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு

    இலங்கைத் தமிழர்கள்

    ராஜபக்சே சகோதரர்களுக்கு கனடா விதித்த தடை இலங்கை

    இலங்கை

    சென்னை- யாழ்ப்பாணம் விமான சேவைகள் இன்று முதல் மீண்டும் தொடக்கம்! விமான சேவைகள்
    திருச்சியில் இலங்கையை சேர்ந்த 9 பேர் கைது! இந்தியா

    உலகம்

    கல்வி சான்றிதழ்களைக் கிழித்தெரிந்த ஆப்கான் பேராசிரியர்! உலக செய்திகள்
    ஆழ்கடல் ஆராய்ச்சிக்கு மனிதர்களை கொண்டு செல்ல, வர போகிறது சமுத்ராயன் திட்டம் அரசு திட்டங்கள்
    'இனி குழந்தைகள் வேண்டாம்' - 102 குழந்தைகளின் தந்தை முடிவு உலக செய்திகள்
    இந்தியர்களிடம் 10 பில்லியன் டாலர்களை இழந்த அமெரிக்கா! அமெரிக்கா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025