NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / ராஜபக்சே சகோதரர்களுக்கு கனடா விதித்த தடை
    அடுத்த செய்திக் கட்டுரை
    ராஜபக்சே சகோதரர்களுக்கு கனடா விதித்த தடை
    இலங்கையை சேர்ந்த நான்கு பேருக்கு கனடா தடை விதித்துள்ளது

    ராஜபக்சே சகோதரர்களுக்கு கனடா விதித்த தடை

    எழுதியவர் Sindhuja SM
    Jan 12, 2023
    11:31 am

    செய்தி முன்னோட்டம்

    இலங்கையின் முன்னாள் அதிபர்கள் கோத்தபய ராஜபக்சே மற்றும் மஹிந்த ராஜபக்சே உள்ளிட்ட நான்கு அதிகாரிகளுக்கு கனடா தடைகளை விதித்துள்ளது.

    1983ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரை இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போரில் மனித உரிமை மீறல்களை அரங்கேற்றியதால் இந்த தடைகள் விதிக்கப்ட்டுள்ளதாக கனடா பகிரங்கமாக அறிவித்துள்ளது.

    இந்த தடைகளின் படி, இலங்கையை சேர்ந்த நான்கு பேருக்கு கனடா நாட்டிற்குள் வருவதற்கு அனுமதி கிடையாது.

    ராஜபக்சே சகோதரர்களுடன் இலங்கை ராணுவ அதிகாரி சுனில் ரத்னாயகே, கடற்படை கமாண்டர் பிரசாத் ஹெட்டியாரச்சி ஆகியோருக்கும் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இது போக, இவர்களுக்கு சொந்தமான சொத்துக்கள் கனடாவில் இருந்தால் அது பறிமுதல் செய்யப்படும் என்றும் கனடா அறிவித்திருக்கிறது.

    11 Jan 2023

    தமிழீழ படுகொலை

    1983ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரை தமிழீழ படுகொலை மிக சாதாரணமாக இலங்கையில் நடந்து கொண்டிருந்தது.

    இந்த இனப் படுகொலையின் போது நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் உட்பட கடந்த 40 வருடங்களில் நடந்த ராணுவம், அரசியல் மற்றும் பொருளாதார பிரச்சனைகளை எதிர்த்து கனடா இந்த தடைகளை அறிவித்திருக்கிறது.

    அமைதிக்கான பாதையில் இலங்கை பயணிப்பதற்கு கனடா எப்போதும் ஆதரவு அளிக்கும் என்றும் கனடா அரசு தெரிவித்துள்ளது.

    மேலும், தற்போது கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி இருக்கும் இலங்கைக்கு நிவாரண நிதியாக 3 மில்லியன் அமெரிக்க டாலர்களையும் கனடா வழங்க இருப்பதாக கூறி இருக்கிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இலங்கை
    உலகம்

    சமீபத்திய

    உங்கள் வீட்டில் வைஃபை இணைப்பு விரைவில் வலுவாகவும் வேகமாகவும் மாறப்போகிறது தொலைத்தொடர்புத் துறை
    இந்தியா ஒன்றும் தர்மசத்திரம் கிடையாது; இலங்கை பிரஜையை நாடுகடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு உச்ச நீதிமன்றம்
    படகு சேவைகளை மேம்படுத்த இந்தியாவும் மாலத்தீவும் 13 MoUகளில் கையெழுத்திட்டன மாலத்தீவு
    அனைத்து உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கும் ஒரே அளவிலான ஓய்வூதியம்; உச்ச நீதிமன்றம் உத்தரவு ஓய்வூதியம்

    இலங்கை

    சென்னை- யாழ்ப்பாணம் விமான சேவைகள் இன்று முதல் மீண்டும் தொடக்கம்! விமான சேவைகள்
    திருச்சியில் இலங்கையை சேர்ந்த 9 பேர் கைது! இந்தியா

    உலகம்

    நேபாளத்தின் புதிய பிரதமருக்கு இந்திய பிரதமர் வாழ்த்து! இந்தியா
    விலங்குகளைவிட கேவலமாக நடத்தப்படுகிறோம் - ஆப்கான் பெண்கள் வேதனை இந்தியா
    ஜப்பானில் ஒரே நாளில் 371 பேர் மரணம்-சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவிப்பு கொரோனா
    உலகின் சிறந்த 50 உணவுகள் பட்டியலில் ஒரே ஒரு இந்திய உணவு தான்! உலக செய்திகள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025