NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / இலங்கையின் பிரதமராக மீண்டும் ஹரிணி அமரசூரியாவை நியமனம் செய்தார் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க 
    அடுத்த செய்திக் கட்டுரை
    இலங்கையின் பிரதமராக மீண்டும் ஹரிணி அமரசூரியாவை நியமனம் செய்தார் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க 
    இலங்கையின் பிரதமராக மீண்டும் ஹரிணி அமரசூரியா நியமனம்

    இலங்கையின் பிரதமராக மீண்டும் ஹரிணி அமரசூரியாவை நியமனம் செய்தார் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க 

    எழுதியவர் Sekar Chinnappan
    Nov 18, 2024
    12:38 pm

    செய்தி முன்னோட்டம்

    இலங்கையின் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க, நாடாளுமன்றத்திற்கு நடந்த பொதுத் தேர்தலில் அவரது இடதுசாரிக் கூட்டணியின் அமோக வெற்றியைத் தொடர்ந்து ஹரிணி அமரசூரியாவை மீண்டும் நாட்டின் பிரதமராக நியமித்துள்ளார்.

    நவம்பர் 14 அன்று நடந்த நாடாளுமன்ற தேர்தலில், அதிபர் அனுரகுமார திஸாநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி (என்பிபி) கூட்டணி 225 இடங்களில் 159 இடங்களைப் பெற்று, அறுதிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது.

    வறுமை மற்றும் ஊழலுக்கு எதிரான பிரச்சாரம் மூலம், பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு இடங்களை அவரது கூட்டணி கைப்பற்றியது.

    இதையடுத்து, ஏற்கனவே பிரதமராக அவரால் நியமிக்கப்பட்டிருந்த ஹரிணி அமரசூரியா மீண்டும் பிரதமராக நியமிக்கப்பட்டார்.

    மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் மீண்டும் வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    ஹரிணி அமரசூரியா

    இரண்டாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்ற ஹரிணி அமரசூரியா

    கடந்த செப்டம்பரில் இலங்கையில் நடந்த அதிபர் தேர்தலில், அனுரகுமார திஸாநாயக்க வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.

    இதையடுத்து, செப்டம்பர் 24இல் ஹரிணி அமரசூரியாவை காபந்து பிரதமராக நியமித்த அனுரகுமார திஸாநாயக்க, தேர்தல் நடக்கும் வரை அவர் பொறுப்பில் இருப்பார் என அறிவித்தார்.

    இதைத் தொடர்ந்து தற்போது, தேர்தல் முடிந்து அனுரகுமார திஸாநாயக்கவின் கட்சி வெற்றி பெற்றதை அடுத்து, ஹரிணி அமரசூரியாவே மீண்டும் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    22 அமைச்சர்கள் கொண்ட அமைச்சரவையை உருவாக்கியுள்ள அனுரகுமார திஸாநாயக்க, நிதி மற்றும் பாதுகாப்புத் துறையை தன்வசம் வைத்துக் கொண்டார்.

    பல வருட பொருளாதார மற்றும் அரசியல் கொந்தளிப்பின் பின்னர், தேசத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கும் பொதுமக்களின் நம்பிக்கையை மீளப் பெறுவதற்கும் திஸாநாயக்கவிற்கான சவாலான பயணம் இப்போதுதான் தொடங்கியுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இலங்கை
    பிரதமர்
    உலகம்
    உலக செய்திகள்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    இலங்கை

    ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேரை கைது செய்த இலங்கை கடற்படை  கடற்படை
    ராமேஸ்வரம் மீனவர்கள் மேலும் 37 பேர் கைது  ராமேஸ்வரம்
    இலங்கையில் இந்திய நிதியுதவியுடன் மேலும் 10,000 வீடுகள் - அடிக்கல் நாட்டப்பட்டது  இந்தியா
    Breaking: இலங்கை கிரிக்கெட் வாரியத்தை அதிரடியாக இடைநீக்கம் செய்த ஐசிசி  கிரிக்கெட்

    பிரதமர்

    தமிழ்நாடு பாஜக தொண்டர்களுடன் இன்று மாலை 5 மணிக்கு 'நமோ செயலி' மூலம் உரையாடுகிறார் பிரதமர் மோடி  தமிழ்நாடு
    கச்சத்தீவு விவகாரத்தில் திமுகவின் இரட்டை வேடம் வெளியாகியுள்ளது: பிரதமர் கருத்து கச்சத்தீவு
    4 நாள் பயணமாக மீண்டும் தமிழகம் வரும் பிரதமர் மோடி பிரதமர் மோடி
    நாளை தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி; முழு பயணம் திட்டம் பிரதமர் மோடி

    உலகம்

    பயோமெட்ரி முறையில் பயணிகளுக்கு அனுமதி வழங்கும் சிங்கப்பூர் ஏர்போர்ட்; இனி 10 வினாடிகளில் வெளியேறலாம் சிங்கப்பூர்
    மீண்டும் வேகமெடுக்கும் 15ஆம் நூற்றாண்டு கால நோய்; ஆய்வில் வெளியான தகவல் நோய்கள்
    ராஜினாமா செய்ய முடியாது; கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ திட்டவட்டம்; மீண்டும் பிரதமர் பதவிக்கு போட்டியிட முடிவு ஜஸ்டின் ட்ரூடோ
    மாலத்தீவில் கடும் பொருளாதார நெருக்கடி; அதிபரின் சம்பளம் 50 சதவீதம் குறைப்பு மாலத்தீவு

    உலக செய்திகள்

    15 வயதிற்கு உட்பட்டவர்கள் சமூக வலைதளங்கள் பயன்படுத்த தடை விதிக்க முடிவு; நார்வே அரசு அதிரடி சமூக வலைத்தளம்
    2027 முதல் விண்வெளி சுற்றுலா; டிக்கெட் விற்பனையை தொடங்கிய சீன நிறுவனம் விண்வெளி
    ஒருமணி நேரத்திற்கு 10 பேர்; அமெரிக்காவில் சட்டவிரோதமாக நுழையும் இந்தியர்களின் எண்ணிக்கை இவ்ளோவா? இந்தியர்கள்
    ஈரான் தாக்குதலுக்கு பதிலடி; ராணுவ நிலைகளை குறிவைத்து துல்லிய வான்வழி தாக்குதல் நடத்தியது இஸ்ரேல் ஈரான் இஸ்ரேல் போர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025