NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / உலகம் செய்தி / சூடானில் சிக்கி தவிக்கும் இலங்கை வாசிகள்: உதவி கரம் நீட்டிய இந்தியா
    சூடானில் சிக்கி தவிக்கும் இலங்கை வாசிகள்: உதவி கரம் நீட்டிய இந்தியா
    உலகம்

    சூடானில் சிக்கி தவிக்கும் இலங்கை வாசிகள்: உதவி கரம் நீட்டிய இந்தியா

    எழுதியவர் Sindhuja SM
    April 25, 2023 | 04:40 pm 1 நிமிட வாசிப்பு
    சூடானில் சிக்கி தவிக்கும் இலங்கை வாசிகள்: உதவி கரம் நீட்டிய இந்தியா
    சூடான் ராணுவ படைகளின் தலைவர்கள் சண்டையை தற்காலிகமாக நிறுத்தி உள்ளனர்.

    சூடானில் சிக்கித் தவிக்கும் சிங்கள மக்களை மீட்டு வர இந்தியா ஆதரவு கரம் நீட்டியதற்கு இலங்கை பாராட்டு தெரிவித்துள்ளது. சூடானில் சிக்கி இருக்கும் சிங்கள மக்களின் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், அவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்படுவதை உறுதிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் எம்.யு.எம். அலி சப்ரி நேற்று(ஏப் 24) தெரிவித்தார். "சூடானில் உள்ள இலங்கையர்களின் நிலைமையை நாங்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம். அவர்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கு தீவிரமாக உழைத்து வருகிறோம். இந்த விஷயத்தில் இந்தியாவின் ஆதரவை நாங்கள் பாராட்டுகிறோம். அடுத்த சில நாட்களுக்குள் அவர்களை மீட்டுவிடுவோம்" என அலி சப்ரி ட்வீட் செய்துள்ளார்.

    சூடான் மோதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது

    ஏப்ரல் 15 அன்று சூடானில் அந்நாட்டு இராணுவத்திற்கும் RSF துணை இராணுவக் குழுவிற்கும் இடையே சண்டை வெடித்தது. இதனால் 427 பேர் கொல்லப்பட்டனர். இந்த ராணுவ படையினர் மருத்துவமனைகள் மற்றும் பிற சேவைகளைத் தகர்த்து, குடியிருப்புப் பகுதிகளை போர்க்களமாக மாற்றியுள்ளனர். சூடான் தலைநகர் கார்ட்டூமில் உணவு மற்றும் தண்ணீரின்றி மில்லியன் கணக்கான மக்கள் தங்கள் வீடுகளில் சிக்கியுள்ளனர். இந்நிலையில், சூடான் ராணுவ படைகளின் தலைவர்கள் சண்டையை தற்காலிகமாக நிறுத்தி உள்ளனர். வெளிநாட்டவர்கள் சூடானில் இருந்து மீட்கப்பட்டு வரும் நிலையில், பிற நாடுகளின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    இந்தியா
    இலங்கை
    சூடான்
    சூடான் மோதல்கள்

    இந்தியா

    வீடியோ பார்க்கையில் செல்போன் வெடித்து 8 வயது சிறுமி பரிதாப பலி!  கேரளா
    பேருந்துகளில் மாற்று திறனாளிகளிடம் இருந்து புகார் வரக்கூடாது! போக்குவரத்துறை அதிரடி  போக்குவரத்து விதிகள்
    லடாக் பிரச்னையை சீக்கிரம் சரிசெய்ய இந்தியா-சீனா ஒப்புக்கொண்டது: பெய்ஜிங்  சீனா
    WFI பாலியல் வன்கொடுமை வழக்கு: டெல்லி காவல்துறைக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் உச்ச நீதிமன்றம்

    இலங்கை

    அயர்லாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் இலங்கை அபார வெற்றி! பிரபாத் ஜெயசூர்யா 10 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தல்! இலங்கை கிரிக்கெட் அணி
    இலங்கை கடற்படை கைது செய்த 12 மீனவர்களை விடுதலை செய்ய கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் வெளியுறவுத்துறை
    தமிழக மீனவர்கள் 11 பேரை விடுதலை செய்த இலங்கை அரசு தமிழ்நாடு
    இந்திய மீனவர்கள் எல்லைத்தாண்டி வந்தால் கடலில் ஆர்ப்பாட்டம் செய்யுமாறு இலங்கை அமைச்சர் சர்ச்சை பேச்சு இந்தியா

    சூடான்

    போர்க்களமாக மாறி இருக்கும் சூடானில் இருந்து மக்களை வெளியேற்றிய ஜப்பான் ஜப்பான்
    ஆபரேஷன் காவேரி: சூடானில் இருந்து 278 இந்தியர்கள் மீட்பு  உலக செய்திகள்
    ஆபரேஷன் காவேரி: 3வது கட்டமாக, சூடானில் இருந்து 135 இந்தியர்கள் மீட்பு   இந்தியா
    சூடானில் இருந்து 1100 இந்தியர்கள் மீட்பு; 360 பேர் இந்தியா வந்தடைந்தனர்  இந்தியா

    சூடான் மோதல்கள்

    ஆபரேஷன் காவேரி: மேலும் 186 பேர் சூடானில் இருந்து மீட்பு இந்தியா
    சூடான் உள்நாட்டு மோதல்: 3,800 இந்தியர்களை மீட்ட ஆபரேஷன் காவேரி  சூடான்
    அடுத்த செய்திக் கட்டுரை

    உலகம் செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    World Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023